Posts

Showing posts from 2019

For whatever things were written before were written for our learning

For whatever things were written before were written for our learning (Rom 15:4 b) 

முன்பு எழுதியிருக்கிறவைகளெல்லாம் நமக்குப் போதனையாக எழுதியிருக்கிறது

முன்பு எழுதியிருக்கிறவைகளெல்லாம் நமக்குப் போதனையாக எழுதியிருக்கிறது (ரோம 15 : 4b ). ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே,  பழைய ஏற்பாட்டில் எழுதப்பட்டிருக்கிற சம்பவங்கள் எல்லாம் நமக்கு ஒரு போதனையாக எழுதப்பட்டிருக்கிறது. தேவனால் அவருடைய கனமான ஊழியத்தைச் செய்யும் படி அழைக்கப்படட சிம்சோன் , தாவீது, போன்றோர் தங்களுடைய வாழ்க்கையில் தேவனுக்கு விரோதமாக பாவங்களைச் செய்து தேவ மகிமையை இழந்து போனார்கள், அவ்வாறு தேவனால் அவருடைய கனமான ஊழியத்தைச் செய்யும் படி அழைக்கப்படட  மனிதர்களுடைய தவறுகளை நாமும் வாழ்க்கையில் செய்து விடக்கூடாது என்பதுக்காகத்தான் தேவன் அவர்கள் செய்த தவறுகளையும் நமக்கு வேத புஸ்தகத்தில் ஒரு போதனையாக, படிப்பினையாக எழுதிக் கொடுத்திருக்கிறார். அதுவே வேத புஸ்தகத்தின் அழகு. அல்லேலூயா ! வெறுமனே வாழ்க்கையில் எந்த தவறும் செய்யாத பரிசுத்தவான்களான யோசேப்பு, தானியலின் வாழ்க்கையை மாத்திரம் தேவன் எங்களுக்கு வேத புஸ்தகத்தில் எழுதி

தேவனுக்கு முன்பாக பயத்துடனே நடந்துகொள்ளுங்கள்

அன்றியும், பட்சபாதமில்லாமல் அவனவனுடைய கிரியைகளின்படி நியாயந்தீர்க்கிறவரை நீங்கள் பிதாவாகத் தொழுதுகொண்டுவருகிறபடியால், இங்கே பரதேசிகளாய்ச் சஞ்சரிக்குமளவும் பயத்துடனே நடந்துகொள்ளுங்கள் (1பேது 1:17). ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, நம்முடைய கர்த்தராகிய தேவனை (இயேசுவை ) பிதாவாக (ஆண்டவராக) ஏற்றுக்கொண்டு அவரை தொழுது கொண்டு (ஆராதித்துக் கொண்டு)  வருகின்ற நமக்கு இந்த பிரபஞ்சமானது (பூமியானது) நிலையான வாசஸ்தலமல்ல, பரலோகமே நமக்கு நிரந்தரமான நித்திய வாசஸ்தலம். ஆனால் பரலோகத்துக்கு நாம் பிரவேசிக்கும் காலம் வரைக்கும், இந்த பிரபஞ்சத்தில் (பூமியில்) நமக்கு நியமிக்கப்பட்டிருக்கிற இந்த கொஞ்சக் காலத்தில் நாம் பரதேசிகளாய்ச் சஞ்சரித்துக்கொண்டு வருகிறோம். ஆகவே  இந்தப் பூமியில் பரதேசிகளாய் சஞ்சரித்துக் கொண்டு வருகின்ற நாம், பட்சபாதம் எதுவுமில்லாமல் அவனவனுடைய கிரியைகளின் படி ஒவ்வொருவனையும் நியாயந் தீர்க்கும் நம்முடைய கர்த்தராகிய தேவன் இயே

Walk fearful before God

And if you call on the Father, who without partiality judges according to each one’s work, conduct yourselves throughout the time of your [a]stay here in fear ( 1 Peter 1:17) 

The gentleness of the Lord

Your gentleness has made me great (2 Sam 22:36 & Ps 18:35)

கர்த்தருடைய காருணியம்

உம்முடைய காருணியம் என்னைப் பெரியவனாக்கும் (2 சாமூ 22:36 & சங்கீ 18:35 ). ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள இரண்டு வேத வசனங்களையும் இன்றைய நாளில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, கர்த்தருடைய கண்களில் நமக்கு கிடைக்கிறதான தயவு, இரக்கம், காருணியமே நம்மை பெரியவர்களாக்குகிறது, நம்மை ஆசீர்வதிக்கிறது. இன்று அநேகர் மனுஷருடைய தயவை பெற்றுக்கொள்ளுவதட்காக முயற்சிகளை எடுக்கிறார்கள். ஆனால் நம் வாழ்க்கையில் நாம் உயர்த்தப்பட முக்கியமாக தேவ தயவு, இரக்கம், அன்பு, காருணியம் வேண்டும். தேவனுடைய தயவை நாம் பெற்றுக்கொள்வதற்கு பிரயாசப்படவேண்டும். அல்லேலூயா ! தாவீது அவருடைய வாழ்க்கையில் கிடைத்த அனைத்து வெற்றிகளுக்கும் கர்த்தரே காரணம் என்பதை நன்கு அறிந்திருந்தார். கர்த்தர் அவரை சவுல், அப்சலோம் கைகளில் இருந்து  பாதுகாத்தது மாத்திரமல்ல மோவாபியர், அம்மோனியர், பெலிஸ்தியர், சீரியர் மீதான யுத்தங்களிலும் கர்த்தர் தாவீதுக்கு ஜெயத்தைக் கொடுத்தார். கர்த்தர் தான் தனக்கு ஜெயத்தைக் கொடுத்தார் என்பதை அவர் நன்கு

The Lord who gives to the righteous what he desires

The desire of the righteous shall be granted (Pro 10:24)

நீதிமானுக்கு அவன் விரும்புகிறவற்றை கொடுக்கும் கர்த்தர்

நீதிமான் விரும்புகிற காரியம் அவனுக்குக் கொடுக்கப்படும் (நீதி 10:24). ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, நீதிமான் என்பவன் யார் ? கர்த்தர் மேல் விசுவாசம் வைத்து, கர்த்தருக்குப் பயந்து, தீமையை  விட்டு விலகி கர்த்தருடைய வழிகளில், சத்தியத்தில் நடப்பவன் என்று பொருள். அவன் கர்த்தருக்குப் பிரியமானவற்றை செய்து அவரைப்   பிரியப்படுத்துகிறவன், அவனிடத்தில் எந்த அநீதியும், துர்க்குணமும் இல்லை. வேதம் சொல்லுகிறது, நீதிமான் விரும்புகிற காரியம் அவனுக்குக் கொடுக்கப்படும் என்று. அல்லேலூயா ! ஆம் பிரியமானவர்களே, நீதிமான் கர்த்தர் மேல் விசுவாசம் வைத்து, அவருக்குப் பிரியமானவற்றை செய்து,  , கர்த்தருடைய வழிகளில் நடந்து கர்த்தரைப் பிரியப்படுத்துகிறபடியால் கர்த்தரும் நீதிமானுக்கு அவன் விரும்புகிற காரியத்தை கொடுத்து அவனை ஆசீர்வதிக்கிறார். அல்லேலூயா ! நாமும் நம்மை ஆராய்ந்து பார்த்து , கர்த்தருக்கு பிரியமில்லாத, கர்த்தரை வேதனைப்படுத்தும் காரியங்கள

Bitter envying and strife

But if you have bitter envying and strife in your hearts (Jam 3:14) 

கசப்பான வைராக்கியமும், விரோதமும்

உங்கள் இருதயத்திலே கசப்பான வைராக்கியத்தையும் விரோதத்தையும் வைத்தீர்களானால் (யாக் 3:14 ). ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் நம்முடைய இருதயத்தில் கர்த்தருக்கு பிரியமில்லாத காரியங்களை, அருவருப்பான காரியங்களை வைத்திருக்கக் கூடாது. நம்முடைய இருதயம் கர்த்தருக்கு முன்பாக சுத்தமுள்ளதாக இருக்க வேண்டும். நாங்கள் ஆராதிக்கும் தேவன் பரிசுத்தமுள்ளவர், ஆகவே அவருடைய பிள்ளைகளாகிய நாமும் நம்முடைய பரலோக தகப்பனுடைய குணாதிசயங்களை கொண்டவர்களாக இருக்க வேண்டும். இருதயத்தில் கசப்பான வைராக்யத்தையும், விரோதத்தையும் வைத்திருக்கக் கூடாது. ஒரு பாவம் மற்றோரு பாவத்தைப் பிறப்பிக்கும். கசப்பான வைராக்கியமும், விரோதமும் கலகத்தையும், துர்ச்செய்களையும் உண்டாக்கும். ஒரு துர்ச்செய்கையானது இன்னும் அநேக துர்செய்களைப் பிறப்பிக்கும். இவைகள் பிசாசினுடைய கிரியைகள். ஆகேவ பிரியமானவர்களே , கசப்பான வைராக்யத்தையும், விரோதத்தையும் உங்கள்

God who makes the way in the wilderness and the rivers in the wilderness

Behold, I will do a new thing, Now it shall spring forth;Shall you not know it? I will even make a road in the wilderness and rivers in the desert (Isa 43:19). 

வனாந்தரத்திலே வழியையும், அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்கும் தேவன்

இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றும்; நீங்கள் அதை அறியீர்களா? நான் வனாந்தரத்திலே வழியையும், அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன் (ஏசா 43 : 19 ). ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, கர்த்தர் உங்களுடைய வாழ்க்கையில் ஒரு புதிய காரியத்தைச் செய்வதாக வாக்குக் கொடுக்கின்றார். கர்த்தர் மீது உங்களுடைய விசுவாசத்தை வையுங்கள். வாக்குக் கொடுத்த கர்த்தர் உண்மையுள்ளவர், அவர் மாறுவதுவதில்லை, அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராய் இருக்கின்றார். சூழ்நிலை உங்களுக்கு விரோதமாக இருக்கின்றதா? வாழ்க்கை ஒரு வனாந்தரத்தைப் போல, ஒரு அவாந்தர வெளியைப் போல வறண்டு போய் உலர்ந்து போய் இருக்கின்றதா? சூழ்நிலையைப் பார்த்து கவலைப்படுவதை விட்டு விட்டு, உங்களை உங்கள் சூழ்நிலையில் இருந்து விடுவிக்கப்போகும் கர்த்தரை நோக்கிப் பாருங்கள். சூழ்நிலையைப் பார்க்கிலும் கர்த்தர் பெரியவர், வனாந்தரத்திலே வழியையும், அவாந்தரவெளியிலே ஆறுகள

Jesus alone is worthy of worship

When they saw the star, they rejoiced with exceedingly great joy. (Matt 2:10)  And when they had come into the house, they saw the young Child with Mary His mother, and fell down and worshiped Him. And when they had opened their treasures,  they presented gifts to Him: gold, frankincense, and myrrh (Matt 10:11). 

இயேசு மாத்திரமே ஆராதனைக்குரியவர்

ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். இன்று கிறிஸ்தவர்கள் மாத்திரமல்ல முழு உலகமும்  இயேசுவின் பிறந்த நாளைக் (கிறிஸ்த்மஸ் பண்டிகையைக்)  கொண்டாடிக்கொண்டிருக்கின்ற இந்த நாட்களில் , மரியாள் யார் ? இயேசு யார் ? இவர்களில் வணக்கத்துக்குரியர் ஆராதனைக்குரியவர் யார் ? என்பதை வேதத்தின் அடிப்படையில் உங்களுக்கு புரிய வைக்க விரும்புகிறேன். மத்தேயு 2ம் அதிகாரம் 10 ம் 11 ம் வசனங்கள் இவ்வாறு சொல்லுகின்றன. அவர்கள் (சாஸ்திரிகள்) அந்த நட்சத்திரத்தைக் கண்டபோது, மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள் (மத் 2:10) அவர்கள் அந்த வீட்டுக்குள் பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாய் விழுந்து பிள்ளையை (இயேசுவை) பணிந்துகொண்டு, தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளத்தையும்  பிள்ளைக்கு (இயேசுவுக்கு) காணிக்கையாக வைத்தார்கள் (மத் 2:11)என்று. பிரியமானவர்களே, சாஸ்திரிகள் முன்பு இப்படிப்படட நட்சத்திரத்தை அவர்கள் வாழ்வில் கண்டதில்லை, இப்போது அவர்களால் புரிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது பூமியிலே

Let’s speak of the glorious splendor of the majesty of the Lord Jesus and his wondrous works

I will speak of the glorious splendor of your majesty, and of your wondrous works (Ps 145:5) 

ஆண்டவராகிய இயேசுவின் சிறந்த மகிமைப் பிரதாபத்தையும், அவருடைய அதிசயமான கிரியைகளையுங் குறித்துப் பேசுவோம்

உம்முடைய சிறந்த மகிமைப் பிரதாபத்தையும், உம்முடைய அதிசயமான கிரியைகளையுங் குறித்துப் பேசுவேன் (சங் 145 : 5 ). ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, நீங்கள்  மற்றவர்களுடன் எவ்வளவு நேரம் பேசுகிறீர்கள் என்பதோ , எப்படிப் பேசுகிறீர்கள் என்பதோ முக்கியமல்ல, நீங்கள் யாரைப் பற்றி, எதைக் குறித்து பேசுகிறீர்கள் என்பது தான் முக்கியம். இங்கே தாவீது ராஜா மற்றவர்களுடன் பேசும் போது,  ஜீவனுள்ள தேவனுடைய சிறந்த மகிமைப் பிரதாபத்தையும், அவருடைய அதிசயமான கிரியைகளையுங் குறித்துப் பேசுவதட்கு தன் உள்ளத்தில் தீர்மானம் எடுத்துக்கொள்ளுகிறார். அல்லேலூயா. நீங்கள் மற்றவர்களுடன் பேசும் போது யாரைக் குறித்துப் பேசுகிறீர்கள்? எவ்வளவு நேரம் பேசுகிறீர்கள்? தேவையில்லாத வெட்டிப்பேச்சு பேசுவதை நிறுத்தி விட்டு, உலகமெல்லாம் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் ( இயேசுவின் பிறந்த நாளை) கொண்டாடிக்கொண்டிருக்கும் இந்த நாட்களில் , நாமும் தாவீது ராஜாவைப் போல் ஜீவனுள்ள தேவன் இயேசுவை

Surely I will remember your wonders of old

I will remember the works of the Lord; Surely I will remember your wonders of old (Ps 77:11). 

உம்முடைய பூர்வகாலத்து அதிசயங்களையே நினைவுகூருவேன்

கர்த்தருடைய செயல்களை நினைவுகூருவேன், உம்முடைய பூர்வகாலத்து அதிசயங்களையே நினைவுகூருவேன் (சங் 77 : 11 ). ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, சங்கீதக்காரன் தன்னுடைய வாழ்க்கையில் பாடுகளுக்கூடாகவும் , வேதனைகளுக்கூடாகவும் கடந்து செல்லும் போது தேவன் அவனுக்கு பூர்வ காலத்தில் செய்த  அதிசயங்களையும் , அவருடைய  செயல்களையும் நினைத்துப் பார்க்கிறான். பிரியமானவர்களே , நீங்களும் வாழ்க்கையில் இறுக்கமான சூழ்நிலைக்கூடாகக் கடந்து செல்வீர்களானால் சங்கீதக்காரனைப் போல் பூர்வ நாட்களில் தேவன் உங்களுக்குச் செய்த நன்மைகளையும், அதிசயங்களையும், அவருடைய மகத்துவமான கிரியைகளையும் மறக்காமல் நினைத்து தேவனுக்கு நன்றி செலுத்துங்கள். பூர்வ நாட்களில் உங்களுக்கு உதவி செய்த தேவன் நிச்சயமாக உங்களுடைய இறுக்கமான சூழ்நிலையிலிருந்து உங்களை விடுதலை செய்ய அவர் உண்மையுள்ளவராக இருக்கிறார் , அவர் உங்களுடைய எதிரிடையான சூழ்நிலைக்கு ஆண்டவராக இருக்கிறார். அவரால் முடியாத

சந்தேகப்படுகிறவன் காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாயிருக்கிறான்

ஆனாலும் அவன் எவ்வளவாகிலும் சந்தேகப்படாமல் விசுவாசத்தோடே கேட்கக்கடவன்; சந்தேகப்படுகிறவன் காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாயிருக்கிறான் (யாக் 1:6). ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, நாம் கர்த்தரிடத்தில் ஒன்றைக் கேட்க்கும் போது விசுவாசத்தோடு கேட்க வேண்டும். நம்முடைய விசுவாசத்தில் சிறிதளவும் சந்தேகம் இருக்கக் கூடாது. கர்த்தர் ஜெபத்தில் கேட்க்கிறவற்றைக் கொடுப்பார் என்று விசுவாசிக்க வேண்டும், வேதம் சொல்லுகிறது , விசுவாசமில்லாமல் தேவனைப் பிரியப்படுத்த முடியாதென்று. ஒரு சிலர் சூழ்நிலை எப்படியாக இருந்தாலும் எல்லா சூழ்நிலைகளிலும் தேவனையே சார்ந்து, அவர் மீது அசைக்க முடியாத விசுவாசம் வைத்திருப்பார்கள். அவர்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கை நிலையாக இருக்கும். ஆனால் வேறு சிலரோ அப்படியல்ல வாழ்க்கையில் எல்லாம் தங்களுக்கு சாதகமாக நடக்கும் போது உற்சாகமாக , சந்தோஷமாக இருப்பார்கள், கஷ்டம் வந்து விடடால் சோர்ந்து போய் விடுவார்கள்,

May God glorify your name in my family

Oh, do not remember former iniquities against us!Let Your tender mercies come speedily to meet us, For we have been brought very low (Ps  79:8) Help us, O God of our salvation, For the glory of Your name; And deliver us, and provide atonement for our sins, For Your name’s sake (Ps 79:9) 

தேவனே உமது நாமத்தை என்னுடைய குடும்பத்தில் மகிமைப்படுத்தும்

பூர்வகாலத்து அக்கிரமங்களை எங்களுக்கு விரோதமாக நினையாதேயும்; உம்முடைய இரக்கங்கள் சீக்கிரமாய் எங்களுக்கு நேரிடுவதாக; நாங்கள் மிகவும் தாழ்த்தப்பட்டுப்போனோம் (சங் 79 :8 ) எங்களை இரட்சிக்கும் தேவனே, நீர் உமது நாமத்தின் மகிமையினிமித்தம் எங்களுக்கு உதவிசெய்து, உமது நாமத்தினிமித்தம் எங்களை விடுவித்து, எங்கள் பாவங்களை நிவிர்த்தியாக்கும் (சங் 79 : 9 ). ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள இரண்டு வேத வசனங்களையும் இன்றைய நாளில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, இஸ்ரவேல் ஜனங்கள் , தாங்கள் தங்களுடைய வாழ்க்கையில் அனுபவிக்கும் எல்லா பிரச்சினைகளுக்கும், பாடுகளுக்கும், உபத்திரவங்களுக்கும் தாங்கள் பூர்வ காலத்தில், கடந்த நாட்களில் செய்த பாவங்கள் தான் காரணம் என்று அறிந்த அவர்கள் தேவனை நோக்கி தாங்கள் கடந்த நாட்களில் செய்த பாவங்களை மன்னிக்கும்படியும் , தேவனுடைய கண்களில் தங்களுக்கு இரக்கங்கள் கிடைக்கும் படியாகவும், வாழ்க்கையில் தாழ்த்தப்பட்டிருக்கிற அவர்களை தேவன் அவருடைய நாமத்தின் மகிமைக்காக அவர்களை அ

for he who doubts is like a wave of the sea driven and tossed by the wind

But let him ask in faith, with no doubting, for he who doubts is like a wave of the sea driven and tossed by the wind (James 1:6).

The God who saves you out of your trouble

This poor man cried out, and the Lord heard him, And saved him out of all his troubles (Ps 34:6). 

உங்களை உங்கள் இடுக்கண்களுக்கெல்லாம் நீங்கலாக்கி இரட்சிக்கும் தேவன்

இந்த ஏழை கூப்பிட்டான், கர்த்தர் கேட்டு, அவனை அவன் இடுக்கண்களுக்கெல்லாம் நீங்கலாக்கி இரட்சித்தார் (சங் 34:6 ). ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே,  இந்த சங்கீத்தை தாவீது தான் சவுலுக்குப் பயந்து தன்னுடைய ஜீவனைக் காப்பாற்றிக் கொள்ள இஸ்ரவேல் தேசத்தை விட்டு தப்பி ஓடி காத்தின் ராஜா ஆகிசிடத்தில் (அபிமெலேக்கு) போய் அவனுக்கு முன்பாக பித்துப் பிடித்தவன் போல நடித்து அவனால் துரத்திவிடப்படட போது பாடினார். அந்த இறுக்கமான சூழ்நிலையில் அவர் எல்லாவற்றையும் இழந்து தான் ஒரு ஏழை போல உதவியற்ற நிலையில் இருக்கிறார் அப்போது தாவீது கர்த்தரை நோக்கிக் கூப்பிடும் போது கர்த்தர் அவருடைய கூப்பிடுதலை, விண்ணப்பத்தைக் கேட்டு  அவரை அவருடைய இடுக்கண்களுக்கெல்லாம் நீக்கி அவரை இரட்சிக்கிறார் , கர்த்தருடைய சமூகத்தில் தாவீதுக்கு கிருபையும், இரக்கமும், அநுக்கிரகமும் கிடைக்கின்றது. அதனால் தான் அவர் பாடுகின்றார் ‘ இந்த ஏழை கூப்பிட்டான், கர்த்தர் கேட்டு, அவனை அவ

Most men will proclaim each his own goodness, But who can find a faithful man?

Most men will proclaim each his own goodness, But who can find a faithful man? (Pro 20:6).    I greet you in the name of the Lord and Savior Jesus Christ. Let us take the above scripture for meditation today. Beloved ,  

மனுஷர் பெரும்பாலும் தங்கள் தயாளத்தைப் பிரசித்தப்படுத்துவார்கள்; உண்மையான மனுஷனைக் கண்டுபிடிப்பவன் யார் ?

மனுஷர் பெரும்பாலும் தங்கள் தயாளத்தைப் பிரசித்தப்படுத்துவார்கள்; உண்மையான மனுஷனைக் கண்டுபிடிப்பவன் யார் ? ( நீதி 20: 6 ). ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே , இந்நாட்களில் பெரும்பாலானோர் போலியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் , இப்படிப்படடவர்கள் பிறருக்கு உதவியை செய்துவிட்டு, தாங்கள் செய்த  உதவியை அதிக அளவில் விளம்பரப்படுத்துகிறவர்களாக இருப்பதோடு , தாங்கள் செய்த உதவிக்காக பிரதி பலனை எதிர்பார்க்கிறவர்களாகவும் இருப்பார்கள் , இவர்கள் தாங்கள் மற்றவர்களை  பார்க்கிலும்  பரிசுத்தமுள்ளவர்கள்  போல் நடிப்பார்கள் , மற்றவர்களுக்கு முன்பாக  தாங்கள் ஜெபத்தில் , ஆவிக்குரிய ஜீவியத்தில் வளர்ந்து இருப்பதாக பாசாங்கு காட்டுவார்கள் , வேத புஸ்தகத்தில் இருக்கும் தேவனுடைய வசனங்களை பிரசங்கிப்பார்கள் , ஆனால் இவர்கள் பிரசங்கிப்பதட்கும் , இவர்களுடைய வாழ்க்கைக்கும் எந்த சம்பந்தமுமே இருக்காது , இவர்கள் தங்களுக்கு சுய மகிமையை தேடிக்கொள்ளுபவர்

The Lord who performs all things for me

I will cry out to God Most High,To God who performs all things for me (Ps 57:2). The Lord will perfect that which concerns me (Ps 138:8) 

கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்

எனக்காக யாவையும் செய்து முடிக்கப்போகிற தேவனாகிய உன்னதமான தேவனை நோக்கிக் கூப்பிடுவேன் (சங் 57 :2). கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார் (சங் 138:8). ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள இரண்டு வேத வசனங்களையும் இன்றைய நாளில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, தாவீதுக்கு தேவன் தன்னை பாதுகாப்பார், பராமரிப்பார், தன்னுடைய தேவைகள் அனைத்தையும் சந்திப்பார், தனக்காக யாவையும் செய்து முடிப்பார் என்கின்றதான விசுவாசம் இருந்தது. அவர் தேவன் மீது வைத்திருந்தான விசுவாசம் தான் அவர் வாழ்க்கையில் செழித்திருக்க காரணமாய் இருந்தது. தாவீதின் வாழ்க்கையில் யாவற்றையும் நேர்த்தியாக செய்து முடித்த தேவன், உங்களுடைய வாழ்க்கையிலும் தேவன் யாவற்றையும்   அவருடைய நாமத்தின் மகிமைக்காக செய்து முடிப்பார் என்கின்றதான விசுவாசம் உங்களுக்கு இருக்கின்றதா? சில சமயங்களில் நீங்கள் ஜெபித்து வருகிற காரியங்கள் நிறைவேறுவதற்கு தாமதிப்பதன் நிமிர்த்தம் உங்கள் மனம் சோர்ந்து போயிருக்கலாம். சோர்ந்து போகாதிருங்கள் ! தேவன் உங்களை

For God shows no partiality

For God shows no partiality [no arbitrary favoritism; with Him one person is not more important than another] (Rom 2:11).

தேவனிடத்தில் பட்சபாதமில்லை

தேவனிடத்தில் பட்சபாதமில்லை (ரோமா 2::11) ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, தேவன் மனுஷர்களைப் போல் ஜாதி, இனம் , மதம், மொழி, ஏழை, பணக்காரன், படித்தவன், படிக்காதவன் என்று மனுஷர்களைப் பிரித்து பட்ச பாதம் பார்ப்பதில்லை. மனுஷர்கள் தான் தங்களுக்குள் இவ்வண்ணமாக ஜனங்களைப்  பிரித்து, பிரிந்திருக்கிறார்கள் ஆனால் தேவனுடைய பார்வையில் எல்லாரும் கனம் பெற்றவர்களாகவே  காணப்படுகிறார்கள். அவர் எல்லாரையும் ஒரே விதமாய், ஒரே அளவாய்  நேசிக்கிறார். மனுஷர்கள் தான் தங்களுடைய பிள்ளைகளை வேறுபடுத்தி பார்ப்பதும் , ஒருவரை அதிகமாக நேசிப்பதும், ஒருவரை தாழ்த்திப் பேசுவதும், ஒருவரை உயர்த்திப் பேசுவதுமாய் இருக்கிறார்கள் ஆனால் தேவன் அவ்வாறு பார்ப்பதில்லை, அவர் எல்லாரையும் ஒரே அளவில் நேசிக்கிறார், மனுக்குலத்தை அவர்களுடைய பாவத்திலிருந்து மீட்க்கும் படியாகத்த் தான் தேவன் கல்வாரி சிலுவையில் மரித்தார். இன்று தேவன் எல்லாருக்கும் சமமாக அவருடைய கிருபையை பொழிந்தி

Do you want to see the goodness of the Lord in the land of living?

I would have despaired had I not believed that I would see the goodness of the Lord in the land of the living (Ps 27:13) 

ஜீவனுள்ளோர் தேசத்திலே கர்த்தருடைய நன்மையைக் காண வேண்டுமா ?

நானோ, ஜீவனுள்ளோர் தேசத்திலே கர்த்தருடைய நன்மையைக் காண்பேன் என்று விசுவாசியாதிருந்தால் கெட்டுப்போயிருப்பேன் (சங் 27:13). ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, தாவீது தன்னுடைய வாழ்க்கையில் பாடுகளுக்கூடாகவும், உபத்திரவங்களுக்கூடாகவும் கடந்து சென்ற போது ‘ நானோ, ஜீவனுள்ளோர் தேசத்திலே கர்த்தருடைய நன்மையைக் காண்பேன்’  என்று விசுவாசித்தார், அவர் தனது இறுக்கமான, நெருக்கமான சூழ்நிலையை பார்க்கவில்லை மாறாக அந்த இறுக்கமான, நெருக்கமான சூழ்நிலையிலிருந்து தன்னை விடுவிக்கப் போகும் கர்த்தர் மீது அவர் அசைக்க முடியாத  , ஒரு பலமுள்ள விசுவாசத்தை வைத்திருந்தார்.  கர்த்தர் மீது அவர் வைத்திருந்த அந்த பலமுள்ள விசுவாசமே அவர் கெட்டுப்போகாத படி, அவர் அழிந்து போகாத படி அவரை பாதுகாத்ததோடு ஜீவனுள்ளோர் தேசத்திலே கர்த்தருடைய நன்மையைக் காண, ருசிக்க அவருக்கு உதவி செய்தது .ஜீவனுள்ள தேசம் என்பது நாம் வாழும் இந்த வாழ்க்கையைக் குறிக்கின்றது.  எபிரேயார் 11:6 இல

I, the Lord, will hasten it in its time.

I, the  Lord , will hasten it in its (appointed) time (Isa 60:22). 

கர்த்தராகிய நான் ஏற்றகாலத்தில் இதைத் தீவிரமாய் நடப்பிப்பேன்

கர்த்தராகிய நான் ஏற்றகாலத்தில் இதைத் தீவிரமாய் நடப்பிப்பேன் (ஏசா 60:22). ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே,        சில சமயங்களில் உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் எதிர்பார்க்கும் காரியங்கள் நீங்கள் எதிர்பார்க்கும் வேளைகளில் கைகூடி வராத  பட்ச்சத்தில் நீங்கள் சோர்ந்து போய் விடுகிறீர்கள். ஆனால் நீங்கள் ஒரு காரியத்தை இங்கே புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாய் இருக்கின்றது. உங்களுடைய வேளை கர்த்தருடைய வேளையாகாது. அவர் எல்லாவற்றையும் அறிந்த சர்வ ஞானமுள்ளவராக இருப்பதினால் அவர் உங்களுடைய விருப்பத்தின் பிரகாரமாகவும், உங்களுடைய  திடடத்தின் பிரகாரமாகவும் உங்களுடைய வாழ்க்கையில் அவர் கிரியை செய்யாமல் அவர் தமது சித்தத்தின் பிரகாரமாகவும், தமது திடடத்தின் பிரகாரமாகவும், தமது ஞானத்தின் பிரகாரமாகவும் உங்களுடைய வாழ்க்கையில் கிரியை செய்கிறார். அல்லேலூயா ! கர்த்தராகிய நான் ஏற்றகாலத்தில் இதைத்  தீவிரமாய் நடப்பிப்பேன்’  என்று வாக்குக் கொடுத்த தே

The Lord is my shepherd; I shall not want

The Lord is my shepherd; I shall not want (Ps 23:1) 

கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன்

கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன் (சங் 23:1). ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, இந்த சங்கீதத்தை எழுதின தாவீதுக்கு கர்த்தரே அவரது மேய்ப்பனாக இருக்கிறார். அதனால் தான் அவர் சொல்லுகிறார் ‘கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார் ‘ என்று. அதுமாத்திரமல்ல ஆடுகளை மேய்க்கும் மேய்ப்பன் எவ்வாறு தன்னுடைய ஆடுகளை ஆபத்துக்களில் இருந்து பாதுகாத்து பராமரித்து வருகிறானோ அதேபோல் தன்னுடைய மேய்ப்பனாகிய கர்த்தரும் தன்னை ஆபத்துகளில் இருந்து பாதுகாத்து தன்னுடைய தேவைகளையயும் அந்த அந்த நேரங்களில் அவர் சந்திப்பார் என்பதை அவர் நன்கு அறிந்திருந்தபடியால் தான் அவர்  விசுவாசத்தோடு உறுதியாகச் சொல்லுகிறார் ‘ நான் தாழ்ச்சியடையேன் ‘ என்று. அல்லேலூயா ! இயேசுவை பின்பற்றுகிற அவருடைய  பிள்ளைகளுக்கு இயேசு கிறிஸ்து நல்ல மேய்ப்பனாக இருக்கிறார் (யோவா 10:11) . ஆகவே நீங்களும் தாவீதை போல் விசுவாசத்தோடு சொல்லுங்கள் ‘ கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கி

The word of God instructs us to pray for the leaders of the nation

The authorities that exist are appointed by God (Rom 13:1b). I urge that petitions (specific requests), prayers, intercessions (prayers for others) and thanksgivings be offered on behalf of all people, for [a]kings and all who are in [positions of] high authority, so that we may live a peaceful and quiet life in all godliness and dignity (1 Timo 2:1-2). I greet you in the name of the Lord and Savior Jesus Christ. Let us take the above three scriptures for meditation today. Beloved ! According to Romans chapter 13 verse 1 , God Himself has appointed leaders and officials in the nations according to His will. But a few nation leaders misuse their authority which is given to them. This is not God's fault. God is always good and He always does what is good. But for those who have the power use the power unjustly these days.Therefore, Scripture says that One should pray for themselves and for all other men, leaders and officials in the country (1 Timo 2:1-2). It is the duty of every p

தேசத்து தலைவர்களுக்காக ஜெபிக்கும் படி வேதம் சொல்லுகிறது

உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது (ரோம 13:1b). நான் பிரதானமாய்ச் சொல்லுகிற புத்தியென்னவெனில் எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும்பண்ணவேண்டும். நாம் எல்லாப் பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம்பண்ணும்படிக்கு, ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும் அப்படியே செய்யவேண்டும் (1தீமோ 2:1-2). ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள மூன்று வேத வசனங்களையும் இன்றைய நாளில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே!  ரோமர் 13 ம் அதிகாரம் முதலாம் வசனத்தின் படி தேவன் தாமே தம்முடைய சித்தத்தின் படி தேசங்களில் தேசத் தலைவர்களையும் , அதிகாரிகளையும் நியமித்திருக்கிறார். ஒரு சில தேசத் தலைவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிற அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துகிறார்கள். இது தேவன் செய்த தப்பிதமல்ல. தேவன் எப்போதும் நல்லவர்தான், அவர் எப்போதும் நன்மையானதை மாத்திரமே செய்கிறார். அதிகாரத்தை பெற்று இருக்கிறவர்களே தங

Our heavenly Father who gives only good things

If you then, being evil, know how to give good gifts to your children, how much more will your Father who is in heaven give good things to those who ask Him (Matt 7:11). 

நன்மையான ஈவுகளை மாத்திரம் கொடுக்கும் நமது பரலோக தகப்பன்

ஆகையால், பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா? (மத் 7:11). ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, நமது பரலோக பிதா உங்கள் மீது வைத்திருக்கிற அன்பும், பாசமும், நேசமும், விருப்பமும், பராமரிப்பும் , உங்கள் பூலோக உலகப்  பிரகாரமான பெற்றோர் உங்கள் மீது வைத்திருக்கிற அன்பை பார்க்கிலும் , அவர்கள் உங்கள் மீது வைத்திருக்கிற பாசத்தைப் பார்க்கிலும், அவர்கள் உங்கள் மீது வைத்திருக்கிற நேசத்தைப் பார்க்கிலும், அவர்கள் உங்களை பராமரிப்பதை பார்க்கிலும் அதிகமானது , கனமானது, மேன்மையானது. பரலோக பிதாவின் அன்பு , இரக்கம், கிருபை கடலைப் போன்று, சமூத்திரத்தைப் போன்று மிகப் பெரியது. உங்கள் பூலோக பெற்றோரின் அன்பு , மனுஷரின் அன்பு கடலில் உள்ள, சமூத்திரத்திலுள்ள ஒரு துளி தண்ணீர் போன்ற

The God who gives wisdom to the wise and knowledge to those who have understanding

He gives wisdom to the wise and  knowledge to those who have understanding (Dan 2:21).

ஞானிகளுக்கு ஞானத்தையும், அறிவாளிகளுக்கு அறிவையும் கொடுக்கும் தேவன்

ஞானிகளுக்கு ஞானத்தையும், அறிவாளிகளுக்கு அறிவையும் கொடுக்கிறவர் (தானி 2:21). ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, தேவனே ஞானத்தின் மற்றும் அறிவின் ஆசிரியர்   அவரே ஞானிகளுக்கு ஞானத்தையும், அறிவாளிகளுக்கு அறிவையும் கொடுக்கிறவர்.  ஞானமும், அறிவும் தேவனிடத்தில் இருந்து வருகின்றது, வேதத்தில் நாம் வாசிக்கிறோம் சாலமோன் ராஜா தன்னுடைய தேச ஜனங்களை விசாரிக்க தேவையான ஞானத்தை தனக்குத் தந்தருளும் படி தேவனிடம் கேடட போது தேவன் அவருக்கு ஞானத்தைக் கொடுத்து ஆசிர்வதித்தார். இன்று உங்களுக்கு இருக்கின்ற ஞானத்துக்காக , அறிவுக்காக நீங்கள் பெருமைப்படாமல் , உங்களை நீங்கள்  மேன்மை பாராடடாமல், உங்களுக்கு ஞானத்தையும், அறிவையும் கொடுத்த தேவனுக்கு  ஒவ்வொரு நாளும் மறவாமல் நன்றி செலுத்துங்கள். அல்லேலூயா ! இன்று எங்களுக்கு குடும்பத்தை நேர்மையான வழியில், நீதியின் பாதையில் நடத்த , அலுவலக காரியங்களை சரியாக, ஒழுங்காக செய்ய அல்லது  தேவனுடைய ஊழியத்தை நேர்த்தியா

What does the Bible say about the medium and the familiar spirits?

Do not turn to mediums [who pretend to consult the dead] or to spiritists [who have spirits of divination]; do not seek them out to be defiled by them. I am the  Lord  your God (Levi 19:31).  x

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?

அஞ்சனம் பார்க்கிறவர்களை நாடி, குறிசொல்லுகிறவர்களைத் தேடாதிருங்கள்; அவர்களாலே தீட்டுப்படவேண்டாம்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் (லேவி 19:31). ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே,   அஞ்சனம் பார்க்கிறதும், குறி சொல்லுவதும் தேவனுக்கு விரோதமான காரியங்கள். இவைகள் பிசாசின் கிரியைகள், ஜீவனுள்ள தேவனை ஆராதிக்கிற தேவனுடைய பிள்ளைகள் அஞ்சனம் பார்க்கிறவர்களையும், குறி சொல்லுகிறவர்களையும் தேடிப் போகக்கூடாது. வேதத்தில் ஒரு சம்பவம் எழுதப்பட்டிருக்கிறது அப்பொழுது சவுல் தன் ஊழியக்காரரை நோக்கி: அஞ்சனம் பார்க்கிற ஒரு ஸ்திரீயைத் தேடுங்கள்; நான் அவளிடத்தில் போய் விசாரிப்பேன் என்றான்; அதற்கு அவனுடைய ஊழியக்காரர்: இதோ, எந்தோரில் அஞ்சனம் பார்க்கிற ஒரு ஸ்திரீ இருக்கிறாள் என்றார்கள். அப்பொழுது சவுல் வேஷம் மாறி, வேறு வஸ்திரம் தரித்துக்கொண்டு, அவனும் அவனோடேகூட இரண்டுபேரும் இராத்திரியிலே அந்த ஸ்திரீயினிடத்தில் போய்ச் சேர்ந்தார்கள்; அவளை அவன் நோக்கி: ந

மதுபானம் குடிப்பதைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?

திராச்சை ரசம்  குடிப்பது ராஜாக்களுக்குத் தகுதியல்ல; லேமுவேலே, அது ராஜாக்களுக்குத் தகுதியல்ல; மதுபானம் பிரபுக்களுக்குத் தகுதியல்ல (நீதி 31 : 4). துன்மார்க்கத்திற்கு ஏதுவான மதுபான வெறிகொள்ளாமல்’  (எபே 5 :18 ).ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே! மேலே கூறப்பட்டுள்ள இரண்டு வேத வசனங்களையும் இன்றைய நாளில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். ராஜா என்பது தேசத்து தலைவரை , ஒரு பொறுப்பில் இருக்கும் மனிதரை குறிக்கின்றது. உதாரணத்துக்கு நீங்க நல்ல ஒரு வேலை செய்கிறவராக நீங்கள் அநேகருக்கு அதிகாரியாக இருப்பீர்கள் என்றால் , சிந்தித்து பாருங்கள் நீங்கள் மதுபானம் குடித்து மது மயக்கத்தில் இருந்தால் எப்படி உங்களுடைய கடமைகளை சரியாக செய்ய முடியும்? குடும்பத்துக்கு தலைவராக இருக்கும் நீங்க குடிப்பவர்களாக இருந்தால் எப்படி குடும்ப காரியங்களை சரியாக செய்து முடிப்பீர்கள்? உங்களுடைய பிள்ளைகள் உங்களை பார்த்து கொண்டிருக்கிறார்கள் , அவர்கள் பிழையான வழிகளில் சென்று விடுவார்கள். வேண்டாம் மது அருந்துவதை விட்டு விட்டு அவர்களுக்கு நீங்க

What does the Bible say about drinking alcohol?

It is not for kings, O Lemuel,It is not for kings to drink wine,Nor for princes intoxicating drink (Pro 31:4) , And do not be drunk with wine, in which is dissipation (Eph 5:18)

உங்களுடைய பாவங்களை தேவ சமுகத்தில் அறிக்கை செய்து தேவனுடைய இரக்கத்தையும், மன்னிப்பையும் பெற்றுக்கொள்ளுங்கள்

தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான் ,  அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான் (நீதி 28:13). ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே , இரண்டு காரியங்களை இந்த வசனத்தின் மூலமாய் நாம் கற்றுக் கொள்ளுகிறோம். முதலாவது, தன் பாவங்களை தேவனுக்கு மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான். இரண்டாவது தன் பாவங்களை தேவனுக்கு அறிக்கை செய்து விட்டுவிடுகிறவன் அவரது இரக்கத்தைப் பெறுகிறான். ஒரு நோயாளி மருத்துவரிடம் தன்னுடைய நோயை   மறைக்காமல் எடுத்துச் சொன்னால் தான் ,  மருத்துவரினால் சரியான மருந்துகளைக் கொடுத்து அந்த வியாதிக்கு சிகிச்சை செய்ய முடியும். அதே போலத்தான் நீங்கள் உங்களுடைய  பாவங்களை கர்த்தரிடம் அறிக்கை செய்யும் போது நீங்கள் அவருடைய  இரக்கத்தைப் பெற்றுக்கொள்ளுவதோடு , உங்களது வாழ்க்கை வாழ்வடைகின்றது, ஆசிர்வதிக்கப்படுகின்றது. வேதம் சொல்லுகிறது, நமக்குப் பாவமில்லையென்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்

Confess your sins before God and receive God's mercy and forgiveness

He who covers his sins will not prosper, But whoever confesses and forsakes them will have mercy (Pro 28:13)

The grace and mercy of the Lord

May your unfailing love be my comfort, according to your promise to your servant. Let your compassion come to me that I may live, for your law is my delight (Ps 119: 76 & 77). 

கர்த்தருடைய கிருபையும், இரக்கங்களும்

நீர் உமது அடியேனுக்குக் கொடுத்த உமது வாக்கின்படி, உமது கிருபை என்னைத் தேற்றுவதாக. நான் பிழைத்திருக்கும்படிக்கு உமது இரக்கங்கள் எனக்குக் கிடைப்பதாக; உம்முடைய வேதம் என் மனமகிழ்ச்சி (சங் 119: 76&77). ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே! மேலே கூறப்பட்டுள்ள இரண்டு வேத வசனங்களையும் இன்றைய நாளில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். கர்த்தர் கிருபையும், இரகங்களும் நிறைந்தவர் . கர்த்தருடைய சித்தத்தின் படியே  தன்னுடைய வாழ்க்கையில் எல்லாம் நடக்கின்றது, அவர் சகலத்தையும் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார் என்பதை நன்கு அறிந்திருந்த தாவீது ராஜா தான் வாழ்க்கையில் உபத்திரவப்படும் போது, மனித உதவியை நோக்கிப் பார்க்காமல், தேவனுடைய கிருபைக்காகவும், இரக்கங்களுக்காகவும் தேவனுடைய சமூகத்தில் விண்ணப்பம் பண்ணுகிறார். ஆம் பிரியனானவர்களே கர்த்தருடைய கிருபையும், இரக்கங்களும் நமக்கு கிடைக்குமானால் வாழ்க்கையில் எப்பேர்ப்படட பாடுகளுக்கூடாக, கஷ்டங்களுக்கூடாக, உபத்திரவங்களுக்கூடாக சென்றாலும் கர்த்தருடைய கிருபையும், இரக

The importance of the grace of the Lord

The grace of our Lord Jesus Christ be with you all. Amen (Rev 22:21) I greet you in the name of the Lord and Savior Jesus Christ. Let us take the above scripture for meditation today. Beloved , The Apostle John was well aware of the importance of the grace of Jesus Christ that's why he blesses everyone by saying The grace of our Lord Jesus Christ be with you all, Amen. Every human being on this earth desperately needs the grace of Jesus Christ. Therefore, every man should pray for the grace of God and receive it from God. It is only when the grace of the Lord grows in one person that he can grow in holiness and grow in his spiritual life. If you don’t have the grace of God , you can’t be in the glory of Christ in heaven. Therefore beloved, ask God and receive the grace of Lord more in your life. Hallelujah ! May the Lord Jesus Christ bless you and your family.

கர்த்தருடைய கிருபையின் முக்கியத்துவம்

நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென் (வெளி 22:21). ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே  , அப்போஸ்தலனாகிய யோவான் இயேசு கிறிஸ்த்துவின் கிருபையின் முக்கியத்துவத்துவதை நன்கு அறிந்திருந்த படியால்,  நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென் என்று சொல்லி ஒவ்வொருவரையும் நிறைவாய் ஆசீர்வதிக்கிறார். இந்த பூலோகத்தில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் இயேசு கிறிஸ்துவின் கிருபை மிகவும் அதிகமாய் தேவைப்படுகின்றது. ஆகவே ஒவ்வொரு மனுஷனும் தேவனின் கிருபைக்காக வாஞ்சிப்பதோடு ,  ஜெபித்து தேவனிடம் இருந்து அவருடைய கிருபையை பெற்றுக் கொள்ள வேண்டும். கர்த்தருடைய கிருபை ஒருவனுக்குள் பெருகும் போது தான் அவன் தன் ஆவிக்குரிய ஜீவியத்தில் கர்த்தருக்கேற்ற பரிசுத்தத்தில் முன்னேற்றம் அடைந்து , ஆவிக்குரிய ஜீவியத்தில் வளர முடியும். அவருடைய கிருபை உங்களுக்கு இல்லாவிடில் பரலோகத்த

Noah found grace in the eyes of the Lord

But Noah found grace in the eyes of the Lord (Gen 6:8)

நோவாவுக்கோ, கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது

நோவாவுக்கோ, கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது (ஆதி6:8). ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே  , மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும், கர்த்தர் கண்டு, தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார்; அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது. அப்பொழுது கர்த்தர்: நான் சிருஷ்டித்த மனுஷனைப் பூமியின்மேல் வைக்காமல், மனுஷன் முதற்கொண்டு, மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகாயத்துப் பறவைகள் பரியந்தமும் உண்டாயிருக்கிறவைகளை நிக்கிரகம்பண்ணுவேன்; நான் அவர்களை உண்டாக்கினது எனக்கு மனஸ்தாபமாயிருக்கிறது என்றார். நோவாவுக்கோ, கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது. நோவா தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்தான்; நோவா தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்தான் (ஆதி 6 : 5 - 9). நோவா தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனும

The blessing of the Lord that does not add sorrow

The blessing of the Lord brings [true] riches, And He adds no sorrow to it (Pro 10:22). 

வேதனையைக் கூட்டிடாத கர்த்தருடைய ஆசிர்வாதம்

கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார் என்று (நீதி 10:22). ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே , இந்நாட்களில் ஜனங்கள் பிழையான வழிகளில் , அநீதியான வழிகளில் ஐசுவரியத்தை சம்பாதிக்கிறார்கள், அவ்வாறு சம்பாதிக்கப்படும் ஐசுவரியத்தில் கர்த்தருடைய ஆசிர்வாதம் இருக்காது, அவர்களுடைய வாழ்க்கையில் சந்தோசம், ஆறுதல், சமாதானம், நிம்மதியிருக்காது இவற்றுக்குப் பதிலாக வேதனையே இருக்கும். ஆனால் யாரெல்லாம்  கர்த்தருடைய சித்தத்துக்கும், விருப்பத்திட்கும் , திடடத்துக்கும் கீழ்ப்படிந்து, கர்த்தருக்குப் பயந்து தங்களுடைய வேலையில் உண்மையுள்ளவர்களாக இருந்து ஐசுவரியத்தை சம்பாதிக்கிறார்களோ , அவ்வாறு சம்பாதிக்கப்படும் அவர்களுடைய ஐசுவரியம் கொஞ்சமாக இருந்தாலும் , அவர்களுடைய ஐசுவரியத்தில் கர்த்தருடைய ஆசிர்வாதம் நிலைத்திருக்கும். அதனால் தான் வேதம் சொல்லுகிறது , கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனைய

The mercy of the Lord

Do not withhold Your tender mercies from me, O Lord;Let Your lovingkindness and Your truth continually preserve me (Ps 40:11). I greet you In the name of the Lord and Savior Jesus Christ. Let us take the above scripture for meditation today. King David prays for the mercies of the Lord, saying, "Lord, Do not withhold Your tender mercies from me. Beloved, Like King David, we should pray for the mercies of the Lord. His mercies make each of us live. His grace, love, and compassion have protected you to this day. Hallelujah ! May the Lord continue to bestow His love,, grace and mercy on you and on your family. Amen.

கர்த்தருடைய இரக்கம்

கர்த்தாவே நீர் உம்முடைய இரக்கங்களை எனக்குக் கிடையாமற்போகப்பண்ணாதேயும்; உமது கிருபையும் உமது உண்மையும் எப்பொழுதும் என்னைக் காக்கக்கடவது (சங்40:11). ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். தாவீது ராஜா கர்த்தருடைய சமூகத்தில் ‘ கர்த்தாவே நீர் உம்முடைய இரக்கங்களை எனக்குக் கிடையாமற்போகப்பண்ணாதேயும் ‘ என்று   கர்த்தருடைய இரக்கங்களுக்காக மனதுருகி ஜெபிக்கிறார். பிரியமானவர்களே , தாவீது ராஜாவைப் போல நாம் ஒவ்வொருவரும் கர்த்தருடைய இரக்கங்களுக்காக ஜெபிக்க வேண்டும். அவருடைய இரக்கங்களே நம் ஒவ்வொருவரையும் வாழ வைக்கின்றது. அவருடைய கிருபையும், அன்பும்,உன்மையுமே இந்நாள் வரை உங்களைக் பாதுகாத்து வந்திருக்கிறது. அல்லேலூயா! கர்த்தர் தமது அன்பையையும், கிருபையையும், இரக்கங்களையும் இன்னுமாய் உங்கள் மீதும் , உங்கள் குடும்பத்தின் மீதும் பொலியச் செய்வாராக.ஆமென்.

The Lord is my portion

The Lord is my portion, says my soul, Therefore I hope in Him (Lam 3:24). I greet you In the name of the Lord and Savior Jesus Christ. Let us take the above scripture for meditation today. Beloved , Who do you trust? the Lord who created you? or the worldly things? if you put your trust in worldly things, the worldly things that you believe in will one day abandon you. The Lord is the only true God, who will never forsake you if you trust Him.  he never put the people into shame who trusted in him   , He alone is enough and he should be your portion. Hallelujah ! May the Lord Jesus Christ bless you and your family.

கர்த்தர் என் பங்கு

கர்த்தர் என் பங்கு என்று என் ஆத்துமா சொல்லும்; ஆகையால் அவரிடத்தில் நம்பிக்கை கொண்டிருப்பேன் (புல 3:24). ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே , உங்களுடைய நம்பிக்கையை யார் மீது வைத்திருக்கீர்கள்? உங்களை சிருஷ்டித்த கர்த்தர் மீதா? அல்லது மாயையான  உலகப்பிரகாரமான காரியங்கள் மீதா? ஒருவேளை நீங்கள் உங்களுடைய நம்பிக்கையை உலகப்பிரகாரமான காரியங்கள் மீது வைத்திருப்பீர்களானால் , நீங்கள் நம்பியிருக்கிற உலகப்பிரகாரமான காரியங்கள் ஒரு நாள் உங்களை கைவிட்டுவிடும். கர்த்தர் ஒருவரே மெய்யானவர், அவரை நீங்கள் நம்பிக் கொண்டிருப்பீர்களானால் ஒருபோதும் அவர் உங்களை கை விட மாட்டார். அவரை நம்பின ஜனங்களை அவர் ஒரு போதும் வெட்கப்படுத்தினதில்லை, அவர் ஒருவரே போதுமானவர், அவரே உங்களுடைய பங்காயிருக்க வேண்டும். அல்லேலூயா ! கர்த்தர் இயேசு உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. 

Will you honor the Lord in your life?

For those who honor Me I will honor, and those who despise Me shall be lightly esteemed (1 Sa 2: 30). 

கர்த்தரை உங்கள் வாழ்க்கையில் கனப்படுத்துவீர்களா ?

என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன்; என்னை அசட்டை பண்ணுகிறவர்கள் கனவீனப்படுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார் (1 சாமூ 2 : 30 ). ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். கர்த்தர் தம்முடைய வாக்குத்தத்தத்தில் உண்மையுள்ளவராக இருக்கிறார். நீங்கள் கர்த்தருடைய சமூகத்தில் உங்களைத் தாழ்த்தி, உங்களுடைய சுயசித்ததையும், உங்களுடைய சுயவிருப்பத்தையும் வெறுத்து, அவருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து, அவருடைய. சித்தத்தையும், அவருடைய  விருப்பத்தையும் நிறைவேற்றி கர்த்தரை உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் கனப்படுத்தும் போது கர்த்தர் உங்களை உங்கள் வாழ்க்கையில் கனப்படுத்துவார், மாறாக நீங்கள் கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படியாது உங்களுடைய சித்தத்தையும், உங்களுடைய விருப்பத்தையும் நிறைவேற்றி கர்த்தரையும், அவரது வார்த்தையையும் அசடடை பண்ணுவீர்களானால் நீங்கள் கர்த்தரால் கனவீனப்படுவீர்கள். சவுல் ராஜா கர்த்தருடைய வார்த்தைக்கு முழுமையையாக கீழ்ப்படியாமல் அவருடைய

The Lord knows those who trust in Him

The Lord is good, a stronghold in the day of trouble; and He knows those who trust in Him (Nah 1:7). I greet you in the name of the Lord and savior Jesus Christ. Beloved ! Let us take the above scripture for meditation today. Remember the good things the Lord has done for you from the day you appeared in your mother's womb to this day, He has protected you in the womb of your mother, and helped you to be born in this world, and nourished you, clothed you, and kept you safe in the day of your trouble. He has done innumerable good things and wonders in your life, And the Lord knows those who trust in Him and He bestows them with His grace and mercy.Hallelujah! May the Lord Jesus Christ bless you and your family.

கர்த்தர் தம்மை நம்புகிறவர்களை அறிந்திருக்கிறார்

கர்த்தர் நல்லவர், இக்கட்டு நாளிலே அரணான கோட்டை; தம்மை நம்புகிறவர்களை அறிந்திருக்கிறார் (நாகூ 1 :7). ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். நீங்கள் தாயின் கர்ப்பத்தில் தோன்றின நாள் முதல் இந்நாள் வரை கர்த்தர் உங்களுடைய வாழ்க்கையில் செய்த நன்மைகளை நினைத்துப்பாருங்கள், அவர் உங்களை தாயின் கர்ப்பத்தில் நீங்கள் அழிந்து போகாத வண்ணம் பாதுகாத்து, இந்த பூலோகத்தில் நீங்கள் மானிடனாக பிறக்க உதவி செய்ததோடு , உங்களை போஷித்து , உங்களை உடுத்துவித்து, தீங்கு நாளில் உங்களூக்கு அரணான கோடடையாக இருந்து அவர் உங்களை பாதுகாத்து பராமரித்து வந்திருக்கிறார், அவர் உங்கள் வாழ்க்கையில் எண்ணி முடியாத நன்மைகளையும், அதிசங்களையும் செய்திருக்கிறார், மற்றும் கர்த்தர் தம்மை நம்புகிறவர்களை அறிந்திருப்பதோடு அவர்களுக்கு தம்முடைய கிருபையையும், இரக்கத்தையும் அளவுக்கதிகமாக கொடுத்து அவர் அவர்களை ஆசீர்வதிக்கிறார். அல்லேலூயா ! கர்த்தர் இயேசு உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதி

Repent, people, and return to the living God

Men, why are you doing these things? We also are men with the same nature as you, and preach to you that you should turn from these useless things to the living God, who made the heaven, the earth, the sea, and all things that are in them (Acts 15:15). I greet in the name of the Lord and Savior Jesus Christ. Let us take the above scripture for meditation today. The apostles refused  when people are willing to give them glory and said Men, why are you doing these things? We also are men with the same nature as you. If people give the glory to men, which belongs God, they sin against God. Like, if men accepts the glory that is to be given to God, they also sin against God. That's why the apostles refused the glory which people are willing to give them and preached the truth. Yes beloved , God alone is worthy of praise, glory, and glory. Men are not worthy of praise, worship and glory. God alone is worthy of worship. Today people forget the God who created them and worship men and i

ஜனங்களே மனந்திரும்பி ஜீவனுள்ள தேவனிடத்திற்குத் திரும்புங்கள்

மனுஷரே, ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? நாங்களும் உங்களைப்போலப் பாடுள்ள மனுஷர்தானே; நீங்கள் இந்த வீணான தேவர்களைவிட்டு, வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின ஜீவனுள்ள தேவனிடத்திற்குத் திரும்பவேண்டுமென்று உங்களுக்குப் பிரசங்கிக்கிறோம் (அப்போ14:15). ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். மனுஷர்கள் தங்களுக்கு பலியிட மனதாயிருக்கும் போது அப்போஸ்தலர்கள் அதை மறுத்துவிட்டு ‘மனுஷரே, ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? நாங்களும் உங்களைப்போலப் பாடுள்ள மனுஷர்தானே’ என்று அவர்களுக்கு கூறுகிறார்கள். ஜனங்கள் தேவனுக்குச் செலுத்த வேண்டிய மகிமையை மனுஷனுக்குச் செலுத்தினால் அவர்கள் தேவனுக்கு விரோதமாக பாவம் செய்கிறார்கள், அதே வேளை தேவனுக்கு கிடைக்க வேண்டிய மகிமையை மனுஷர் அங்கீகரித்தால் அவர்களும் தேவனுக்கு விரோதமாக பாவம் செய்கிறார்கள். ஆதலால் அப்போஸ்தலர்கள் மனுஷர்கள் தங்களுக்கு பலியிட மனதாயிருந்த போது அதை மறுத்துவிட்டு ‘ நாங்களும் உங்கள

Behold , I am alive forevermore

And when I saw Him, I fell at His feet as dead. But He laid His right hand on me, saying to me, “Do not be afraid; I am the First and the Last.I am He who lives, and was dead, and behold, I am alive forevermore. Amen. And I have the keys of Hades and of Death (Rev 1: 17 & 18). I greet you In the name of the Lord and Savior Jesus Christ. Beloved ! Let us take the above two scriptures for meditation today. When Jesus Christ appeared to John in his glory , he fell at His feet as dead. He laid his right hand on John, revealing himself to him , saying with love Do not fear. (1)   I am the First and the Last, I am He who lives - Jesus revealed his divine revelation in this sentence. (2) Was dead  - through this Jesus says that, He died on the Calvary by shedding His holy blood for the sins, iniquities and transgressions of all mankind in the world. (3) behold, I am alive forevermore. Amen - through this Jesus says that, He rose to life on the third day and overcame death, and lives for

மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன்

அவர் தம்முடைய வலதுகரத்தை என்மேல் வைத்து, என்னை நோக்கி: பயப்படாதே, நான் முந்தினவரும், பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன், மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன் ஆமென்; நான் மரணத்திற்கும்  பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன். (வெளி 1:17 & 18). ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்கள தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே ! மேலே கூறப்பட்டுள்ள இரண்டு வேத வசனங்களையும் இன்றைய நாளில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். இயேசு கிறிஸ்து தன்னுடைய மகிமையிலே யோவானுக்கு தரிசனம் கொடுத்த போது, செத்தவனைப்போல அவரது பாதத்தில் விழுந்து கிடந்த யோவான் மேல் தம்முடைய வலது கரத்தை வைத்து, அவரை நோக்கி அன்போடு பயப்படாதே என்று சொல்லி தம்மை பற்றிய வெளிப்பாடடை யோவானுக்கு வெளிப்படுத்தினார். (1) நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன் - இந்த வாக்கியத்தை இயேசு கூறுவதன் மூலமாய் தன்னுடைய தெய்வீக வெளிப்பாடடை வெளிப்படுத்துகிறார். (2) மரித்தேன் - இந்த வார்தையைக் கூறுவதன் மூலமாய் மனித குலத்தின் பாவங்களுக்காய், அக்கிரமங்

The way of the Lord and the way of man

There is a way that seems right to a man, but its end is the way of death (Pro 14:12 & 16:25). I greet you in the name of the Lord and Savior Jesus Christ,Beloved ! Let us take the above scripture for meditation today. There are two ways, the way of the Lord and the way of man. The righteous walk in the way of the Lord, and those who walk in the way of the Lord have life. The wicked walk in wicked ways to fulfill his fleshly desire, he does not consider whether the path he is going is  right path or not, he is aiming to fulfill his fleshly desire and he does not know that, he is on the way to death. The scripture says that, ' There is a way that seems right to a man, but its end is the way of death '  Therefore, beloved, you need to examine your words, thoughts, and deeds whether they are pleasing to the Lord. If the path you had chose is not pleasing to the Lord, you need to correct your ways. The way of the Lord which leads you to heaven. Hallelujah ! May the Lord Jesus

கர்த்தருடைய வழியும், மனுஷனுடைய வழியும்

மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழி உண்டு; அதின் முடிவோ மரணவழிகள் (நீதி 14 :12 ) & ( நீதி 16 :25 ). ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே ! மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். கர்த்தருடைய வழி, மனுஷனுடைய வழி என்று இரண்டு விதமான வழிகள் உண்டு, நீதிமான் கர்த்தருடைய வழியில் நடக்கிறான், கர்த்தருடைய வழியில் நடப்பவர்களுக்கு ஜீவன் உண்டு. துன்மார்க்கனோ தன்னுடைய மாமிச இச்சையை நிறைவேற்றுவதட்க்காக துன்மார்க்கமான பாதைகளில் நடக்கிறான், அவன் தான் போகின்றதான பாதை சரியான  பாதையா என்பதைக் குறித்து சிந்தித்து பார்ப்பதில்லை , அவன் தன்னுடைய சுய இட்சையை நிறைவேற்றுவதிலே நோக்கமாக இருக்கிறான், அவனுக்கு தான் செல்லும் பாதை செம்மையாய் தோன்றுகின்றது, தான் மரணத்தின் பாதையில் நடக்கிறான் என்று  அவனுக்கு தெரியவில்லை.வேதம் சொல்லுகிறது ‘ மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழி உண்டு, அதின் முடிவோ மரண வழிகள்’ என்று. ஆதலால் பிரியமானவர்களே, நீங்கள் உங்களுடைய வார்த்தைகளையும், சிந்தைகளையும

It will surely come, and it will not delay

For the vision is yet for an appointed time, but at the end it will speak, and it will not lie.Even though it delays wait [patiently] for it, because it will surely come; it will not delay (Hab 2:3). I greet you in the name of the Lord and Savior Jesus Christ.Beloved, Let us take the above scripture for meditation today. The Lord in his time fulfills everything he has decided. Surely the time will come when the Lord will have it in his due time. Therefore, let us put emphasis on the vision of the Lord and wait patiently and faithfully for his time and for the fulfillment of his promise. In these waiting days your faith and patience will be tested and your true character will be revealed. The Lord is telling you today that, ' It will not lie, wait for it though it is late, It will surely come, and it will not delay' Hallelujah ! May the Lord Jesus bless you and your family.

அது நிச்சயமாய் வரும், அது தாமதிப்பதில்லை

குறித்தகாலத்துக்குத் தரிசனம் இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது; முடிவிலே அது விளங்கும், அது பொய் சொல்லாது; அது தாமதித்தாலும் அதற்குக் காத்திரு; அது நிச்சயமாய் வரும், அது தாமதிப்பதில்லை (ஆப 2:3). ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே! மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். கர்த்தர் தாம்  தீர்மானித்த  ஒவ்வொரு காரியத்தையும் தம்முடைய   காலத்தில் நிறைவேற்றுகிறார். நிச்சயமாய் காரியம் கர்த்தர் குறிப்பிடட காலத்தில் , அவர் தீர்மானித்த காலத்தில் நிறைவேறும். ஆகவே நாம் கர்த்தருடைய தரிசனத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவருடைய வாக்குத்தத்தம் நிறைவேறும் படி பொறுமையோடும், விசுவாசத்தோடும் அவருடைய காலத்துக்காக, வேளைக்காக காத்திருக்க வேண்டும். இத்தகைய காத்திருக்கிற  நாட்களில் உங்களுடைய விசுவாசமும், பொறுமையும் சோதிக்கப்படுவதோடு, உங்களுடைய உண்மையான சுபாவமும் வெளிப்படுகின்றது. கர்த்தர் இன்றைக்கு உங்களுக்குச் சொல்லுகிறார் ‘ அது பொய் சொல்லாது; அது தாமதித்தாலும் அதற்குக் காத்திரு; அது ந

Repent the Kingdom of Heaven is very near.

Truly, these times of ignorance God overlooked, but now commands all men everywhere to repent (Acts 17:30)

மனந்திரும்புங்கள் பரலோக ராஜ்ஜியம் மிகவும் சமீபமாயிருக்கிறது.

அறியாமையுள்ள காலங்களை தேவன் காணாதவர் போலிருந்தார்,இப்பொழுதோ மனந்திரும்பவேண்டுமென்று எங்குமுள்ள மனுஷரெல்லாருக்கும் கட்டளையிடுகிறார்(அப்போ 17:30). ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே! மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். அத்தேனே படடனத்தில் உள்ள ஜனங்கள் மெய்யான தேவனை அறியாது, அறியப்படாத தேவனை அறியாமையினால் விக்கிர ஆராதனை செய்து கொண்டு பாவத்தில் மூழ்கியிருந்த நாட்களில் அவர்கள் தங்களுடைய விக்கிர ஆராதனையிலிருந்து, தங்களுடைய பாவ வாழ்க்கையில் இருந்து மனந்திரும்பி மெய்யான தேவனாகிய அவர்களை சிருஷ்டித்த, வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்த தேவனிடம் அவர்கள் வர வேண்டும் என்பதை நோக்காகக் கொண்டு அப்போஸ்தலனாகிய பவுல் மாஸ் மேடையில்  ‘அறியாமையுள்ள காலங்களை தேவன் காணாதவர் போலிருந்தார்; இப்பொழுதோ மனந்திரும்பவேண்டுமென்று எங்குமுள்ள மனுஷரெல்லாருக்கும் கட்டளையிடுகிறார்’ என்று சத்தியத்தை பிரசங்கித்தார். புற ஜாதியாருக்கு, விக்கிர ஆராதனைக்காரருக்கு  இந்த சத்தியத்தை அறிவிக்கப்படுவதட்க

இயேசு தன் நாமத்தை அறிந்திருப்பவர்களை விடுவிப்பதோடு அவர்களை உயர்ந்த அடைக்கலத்தில் வைக்கிறார்

அவன் என்னிடத்தில் வாஞ்சையாயிருக்கிறபடியால் அவனை விடுவிப்பேன்; என் நாமத்தை அவன் அறிந்திருக்கிறபடியால் அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன் ( சங் 91 :14 ). ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே! மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம்.இங்கே இரண்டு காரியங்களை தேவன் இந்த வசனத்தினூடாக எங்களோடு பேசுகிறார்.முதலாவது அவர் மீது வாஞ்சையாய் இருக்கிறவர்களை அவர் விடுவிக்கிறார், இரண்டாவது அவர் நாமத்தை அறிந்திருக்கிறவர்களை அவர் உயர்ந்த அடைக்கலத்தில் வைக்கிறார்.அல்லேலூயா! எவ்வளவு ஆறுதலான வார்த்தை.வாக்குக் கொடுத்த தேவன் தன்னுடைய வாக்குத்தத்தத்தில் உண்மையுள்ளவராக இருக்கிறார்.நீங்கள் இயேசு மீது வாஞ்சையாக இருப்பீர்களானால் அவர் உங்களை உங்கள் பிரச்சனையில் இருந்து, தீமையில் இருந்து விடுவிக்க உண்மையுள்ளவராக இருக்கிறார்.மற்றும் நீங்கள் இயேசு என்ற நாமத்தைஅறிந்திருப்பீர்களானால்அதாவது இயேசு என்கின்ற நாமத்தின் மீது உங்களுடைய விசுவாசத்தை வைப்பீர்களானால் அவர் உங்களை வாதைகளுக்கும், பொல்லாப்புக்க

Jesus delivers those who know his name and puts them in a high place

Because he has set his love upon me, therefore I will deliver him, I will set him on high, because he has known my name (Ps 91:14)

Do you know God who created you and died for your sins?

To which I was appointed a preacher, an apostle, and a teacher of the Gentiles (2 Timo 2:11).For this reason I also suffer these things; nevertheless I am not ashamed, for I know whom I have believed and am persuaded that He is able to keep what I have committed to Him until that Day (2 Timo 1:12).

உங்களை சிருஷ்டித்த, உங்களுடைய பாவங்களுக்காக மரித்த தேவனை அறிந்திருக்கிறீர்களா?

அதற்கு நான் பிரசங்கியாகவும், அப்போஸ்தலனாகவும், புறஜாதியாருக்குப் போதகனாகவும் நியமிக்கப்பட்டேன் (2தீமோ1:11). அதினிமித்தம் நான் இந்தப் பாடுகளையும் அனுபவிக்கிறேன்; ஆயினும், நான் வெட்கப்படுகிறதில்லை; ஏனென்றால், நான் விசுவாசித்திருக்கிறவர் இன்னார் என்று அறிவேன், நான் அவரிடத்தில் ஒப்புக்கொடுத்ததை அவர் அந்நாள்வரைக்கும் காத்துக்கொள்ள வல்லவராயிருக்கிறாரென்று  நிச்சயித்துமிருக்கிறேன் (2தீமோ1:12 ). கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு  வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே! மேலே கூறப்பட்டுள்ள இரண்டு வேத வசனங்களையும்  இன்றைய நாளில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். இந்த பிரபஞ்சத்தில் அநேக நல்லவர்கள் இருக்கிறார்கள் அவர்கள் உலகப்பிரகாரமான காரியங்களுக்காக பாடுகளை அனுபவிக்கிறார்கள், அவர்கள் பாடுகள் அனுபவிப்பதட்காக வெட்கப்படுவதில்லை.ஆனால் கிறிஸ்துவின் சுவிசேஷத்துக்கு பிரசங்கியாகவும், அப்போஸ்தலனாகவும், புறஜாதியாருக்குப் போதகனாகவும் நியமிக்கப்பட்டிருந்த அப்போஸ்தலனாகிய பவுல் தான் கிறிஸ்துவின் நிமித்தமாய் பாடுகளை அனுபவிப்பதை சந்தோஷமாக ஏற்றுக்கொள்ளுகிறார்,

Your needs will be seen and provided in the mount of the Lord

Abraham called the name of that place Jehovahjireh, as it is said to this day, In the mount of the Lord it shall be seen (Gen 22:14)

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

ஆபிரகாம் அந்த இடத்துக்கு யேகோவாயீரே என்று பேரிட்டான்; அதினாலே கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக்கொள்ளப்படும் என்று இந்நாள்வரைக்கும் சொல்லப்பட்டு வருகிறது (ஆதி 22:14). ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே! மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம்.ஒரு நாள் தேவன் ஆபிரகாமிடம் உன் புத்திரனும் உன் ஏகசுதனும் உன் நேசகுமாரனுமாகிய ஈசாக்கை நீ இப்பொழுது அழைத்துக்கொண்டு மோரியா தேசத்துக்குப் போய், அங்கே நான் உனக்குக் குறிக்கும் மலைகள் ஒன்றின்மேல் அவனைத் தகனபலியாகப் பலியிடு’ (ஆதி 22:2) என்று சொன்னபோது ஆபிரகாம் உடனடியாக தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து, அதிகாலையில் எழுந்து, தன் கழுதையின்மேல் சேணங்கட்டி, தன் வேலைக்காரரில் இரண்டுபேரையும் தன் குமாரன் ஈசாக்கையும் கூட்டிக்கொண்டு, தகனபலிக்குக் கட்டைகளையும் பிளந்துகொண்டு, தேவன் தனக்குக் குறித்த இடத்திற்குப் புறப்பட்டுப்போனான் (ஆதி 22 :3) தேவன் அவனுக்கு கூறின இடத்துக்குச் சென்றடைய மூன்று நாட்களாயின, அந்த மூன்று நாட்களில் ஆபிரகாம் தன

Hills where my helps come from

I will lift up my eyes to the hills, from whence comes my help? ( Ps 121:1) My help comes from the Lord, who made heaven and earth ( Ps 121:2)

உதவி வரும் பர்வதங்கள்

எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன் (சங் 121:1) வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும் (சங் 121 :2).ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே! மேலே கூறப்பட்டுள்ள இரண்டு வேத வசனங்களையும் இன்றைய நாளில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம்.இந்த வேத வசனங்கள் தேவ ஆவியின் உந்துதலினால் தாவீது இராஜாவினால் எழுதப்பட்டிருக்கின்றது (2தீமோ 3:16). தாவீது இராஜாவின் கண்கள் எந்த ஒரு மனிதனையும் உதவிக்காக நோக்கிப் பார்க்கவில்லை, மாறாக அவருடைய கண்கள் தனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களை நோக்கிப்பார்த்தது. பர்வதங்கள் என்ற பதத்துக்கு ஆங்கிலத்தில் hills/ mountains (மலை) என்று மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது, அப்படியென்றால் தாவீது மலைகளை ஒத்தாசைக்காக, உதவிக்காக நோக்கி பார்த்தார் என்று அர்த்தம் அல்ல, அவருடைய கண்கள் ஒத்தாசைக்காக வானத்தையும், பூமியையும் உண்டாக்கின கர்த்தரை நோக்கி பார்த்தன. ஆம் பிரியமானவர்களே, வானத்தையும், பூமியையும் உண்டாக்கின கர்த்தரே அந்த ஒத்தாசை வரும் ப

It’s good to bear the yoke at young

It is good for a man to bear the yoke while he is young (Lam 3:27)

இளவயதில் நுகத்தை சுமப்பது நல்லது

தன் இளம்பிராயத்தில் நுகத்தைச் சுமக்கிறது மனுஷனுக்கு நல்லது (புல 3:27). ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே ! மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானதுக்காக எடுத்துக் கொள்ளுவோம்.யூதா ஜனங்கள் பாபிலோனிய மன்னனினால் பாபிலோனுக்கு சிறை பிடித்து கொண்டு சென்ற போது பெரியோர்களுடன் வாலிபர்களும், சிறுவர்களும் கொண்டு செல்லப்படடார்கள்.இளம்பிராயத்தில் இருந்தவர்களுக்கு தங்களுடைய இளம்பிராயத்தில் நுகத்தைச் சுமப்பது அவர்களுக்கு மிகவும் கடினமாக இருந்தது, ஆனால் கர்த்தர் அவர்களுடைய நுகத்தை இறக்கி வைக்கும் போது கர்த்தருடைய பராமரிப்பையும், இரக்கத்தையும், கிருபையையும், அன்பயையும், இரட்சிப்பையும் புரிந்து கொண்டு கர்த்தர் விண்ணப்பத்துக்கு பதில் கொடுத்தார், கர்த்தர் தங்களை மறக்கவில்லை, கைவிடவில்லை என்பதை புரிந்து கொள்ளுகிறார்கள், இதனால் இவர்கள் விசுவாசத்தில் இன்னுமாய் பலப்படுகிறார்கள்.  ஆம் பிரியமானவர்களே, இளம்பிராயத்தில் எத்தனை பாடுகள்? கர்த்தர் ஏன் இந்த பாடுகளை என் இளவயதில் அனுமதித்தார் என்று கவலையோடு சோர்ந்து போய்

Offer your praise and thanks to God who does wonders

Blessed be the Lord God, the God of Israel , who only does wondrous things (Ps 72:18).

அதிசயங்களை செய்யும் தேவனுக்கு உங்களுடைய துதிகளையும், ஸ்தோத்திரங்களையும் செலுத்துங்கள்

இஸ்ரவேலின் தேவனாயிருக்கிற கர்த்தராகிய தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக; அவரே அதிசயங்களைச் செய்கிறவர் (சங் 72: 18) ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே ! மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானதுக்காக எடுத்துக் கொள்ளுவோம். தேவனுடைய ஒவ்வொரு வார்த்தைக்காகவும் , அவருடைய வாக்குத்தங்களுக்காகவும் நாம் அவரைத் துதிக்க வேண்டும், ஒருவேளை வாக்குத்தத்தம் இன்னும் நிறைவேறாமல் இருக்கலாம் ஆனாலும் அது நிறைவேறும் என்று கர்த்தரை விசுவாசித்து அவரை துதித்து ஸ்தோத்திரம் பண்ண வேண்டும், அவர் அதிசயங்கள் செய்கின்ற தேவனாய் இருக்கிறார்.தாவீது எல்லா சூழ்நிலைகளிலும் கர்த்தரை விசுவாசித்து அவரை துதித்து அவருக்கு ஸ்தோத்திரம் செலுத்தினார். தாவீதின் தேவன் இன்றும் ஜீவிக்கிறார்.தாவீதுக்கு நன்மைகளையும் , அதிசயங்களையும் செய்த தேவன், என்னுடைய வாழ்க்கையிலும் அநேக நன்மைகளையும், அதிசயங்களையும், மகத்துவமான காரியங்களையும் செய்திருக்கிறார், செய்து கொண்டிருக்கிறார், நீங்களும் கர்த்தரை விசுவாசித்து அவரை துதித்து அவருக்கு ஸ்தோத்திரம் செலுத்து

Let's praise the Lord for his lovingkindness and for his faithfulness

I will worship toward Your holy temple, and praise your name, for your lovingkindness and Your truth, for you have magnified Your word above all Your name ( Ps 138:2 )

கர்த்தருடைய கிருபையின் நிமித்தமும், அவருடைய உண்மையின் நிமித்தமும் நாம் அவருடைய நாமத்தை துதிக்க வேண்டும்

உமது பரிசுத்த ஆலயத்திற்கு நேராக நான் பணிந்து, உமது கிருபையினிமித்தமும் உமது உண்மையினிமித்தமும் உமது நாமத்தைத் துதிப்பேன்; உமது சகல பிரஸ்தாபத்தைப்பார்க்கிலும் உமது வார்த்தையை நீர் மகிமைப்படுத்தியிருக்கிறீர் (சங் 138:2). ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே ! மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானதுக்காக எடுத்துக் கொள்ளுவோம். கர்த்தருடைய கிருபையின் நிமித்தமும், அவருடைய உண்மையின்  நிமித்தமும் நாம் அவருடைய நாமத்தை துதிக்க வேண்டும். வாக்கு கொடுத்த தேவன் உண்மை யுள்ளவராக இருக்கிறார். கர்த்தர் தமது சகல பிரஸ்தாபத்தைப்பார்க்கிலும் அவர் தமது வார்த்தையை மகிமைப்படுத்தியிருக்கிறார். தாவீதுக்கு துன்பங்களும், வேதனைகளும், உபத்திரவங்களும் வந்து நெருக்கப்படட போது அவருடைய ஆத்துமா பெலனிழந்து போய் தன்னுடைய சரீரத்திலும், ஆவியிலும் சோர்ந்து போனார், அவரால் வேதனைகளையும், துன்பங்களையும் தாங்கிக் கொள்ள முடியாமல் அவர் தேவனை நோக்கி கூப்பிடட போது கர்த்தர் அவர் ஆத்துமாவில் பெலன் தந்து அவரை தைரியப்படுத்தினார். கர்த்தர் நம