கர்த்தருடைய வழியும், மனுஷனுடைய வழியும்

மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழி உண்டு; அதின் முடிவோ மரணவழிகள் (நீதி 14 :12 ) & ( நீதி 16 :25 ). ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே ! மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். கர்த்தருடைய வழி, மனுஷனுடைய வழி என்று இரண்டு விதமான வழிகள் உண்டு, நீதிமான் கர்த்தருடைய வழியில் நடக்கிறான், கர்த்தருடைய வழியில் நடப்பவர்களுக்கு ஜீவன் உண்டு. துன்மார்க்கனோ தன்னுடைய மாமிச இச்சையை நிறைவேற்றுவதட்க்காக துன்மார்க்கமான பாதைகளில் நடக்கிறான், அவன் தான் போகின்றதான பாதை சரியான  பாதையா என்பதைக் குறித்து சிந்தித்து பார்ப்பதில்லை , அவன் தன்னுடைய சுய இட்சையை நிறைவேற்றுவதிலே நோக்கமாக இருக்கிறான், அவனுக்கு தான் செல்லும் பாதை செம்மையாய் தோன்றுகின்றது, தான் மரணத்தின் பாதையில் நடக்கிறான் என்று  அவனுக்கு தெரியவில்லை.வேதம் சொல்லுகிறது ‘ மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழி உண்டு, அதின் முடிவோ மரண வழிகள்’ என்று. ஆதலால் பிரியமானவர்களே, நீங்கள் உங்களுடைய வார்த்தைகளையும், சிந்தைகளையும், செய்களையும் பச்சபாதமில்லாமல் நீதியாய்  அவைகள் கர்த்தருக்கு பிரியமானவைகளா என்று சற்று ஆராய்ந்து பார்த்துக் கொள்ளுங்கள். ஒரு வேளை நீங்கள் செல்லும் பாதை கர்த்தருக்கு பிரியமானதாய் இருக்காவிடில்,  நீங்கள் உங்கள் வழிகளை சரிப்படுத்திக் கொள்ளுவது அவசியமாய் இருக்கின்றது. கர்த்தருடைய வழியே செம்மையான வழி அதுவே உங்களை பரலோகத்துக்கு எடுத்துச் செல்லும் வழி. அல்லேலூயா ! தேவன் இயேசு உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?