அது நிச்சயமாய் வரும், அது தாமதிப்பதில்லை

குறித்தகாலத்துக்குத் தரிசனம் இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது; முடிவிலே அது விளங்கும், அது பொய் சொல்லாது; அது தாமதித்தாலும் அதற்குக் காத்திரு; அது நிச்சயமாய் வரும், அது தாமதிப்பதில்லை (ஆப 2:3). ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே! மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். கர்த்தர் தாம்  தீர்மானித்த  ஒவ்வொரு காரியத்தையும் தம்முடைய   காலத்தில் நிறைவேற்றுகிறார். நிச்சயமாய் காரியம் கர்த்தர் குறிப்பிடட காலத்தில் , அவர் தீர்மானித்த காலத்தில் நிறைவேறும். ஆகவே நாம் கர்த்தருடைய தரிசனத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவருடைய வாக்குத்தத்தம் நிறைவேறும் படி பொறுமையோடும், விசுவாசத்தோடும் அவருடைய காலத்துக்காக, வேளைக்காக காத்திருக்க வேண்டும். இத்தகைய காத்திருக்கிற  நாட்களில் உங்களுடைய விசுவாசமும், பொறுமையும் சோதிக்கப்படுவதோடு, உங்களுடைய உண்மையான சுபாவமும் வெளிப்படுகின்றது. கர்த்தர் இன்றைக்கு உங்களுக்குச் சொல்லுகிறார் ‘ அது பொய் சொல்லாது; அது தாமதித்தாலும் அதற்குக் காத்திரு; அது நிச்சயமாய் வரும், அது தாமதிப்பதில்லை’ அல்லேலூயா ! கர்த்தர் இயேசு உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?