கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

கர்த்தர் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள் என்றான் (யாத் 14 :14 ). கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்து கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானதுக்காக எடுத்துக் கொள்ளுவோம்.பிரியமானவர்களே! கர்த்தர் உங்களுக்காக யுத்தம் செய்யும் பொழுது, உங்களுக்கு எதிராக யாரும் எதிர்த்து நிற்க முடியாது.உங்களுக்காக யுத்தம் செய்யும் கர்த்தரை நம்புங்கள்.உங்களுக்கு விரோதமாய் சத்துருக்கள் எழும்பும்போது, பயப்படாதிருங்கள். அவர்களுடைய , கோபம் , எரிச்சல் , பொறாமை உங்களை ஒன்றும் செய்யாது. உங்களை நேசிக்கின்ற ,உங்களை அரவணைக்கின்ற, உங்களைu பாதுகாக்கிற உங்களை சிருஷ்டித்த கர்த்தர் இயேசுவை  நோக்கிப் பாருங்கள்.நீங்கள் அவருடைய  வார்த்தைக்கு கீழ் படிந்து நீங்கள் அவர் மேல்  உங்களுடைய விசுவாசத்தை வைத்து உங்களுடைய கண்ணீர், கவலை, பாரத்தை அவர் மேல் இறக்கி வைத்து  விட்டு  அமைதியாய் சும்மாய் இருந்தால் போதும். கர்த்தர் உங்களுக்காக யுத்தம் செய்து ஜெயத்தை கொடுக்க அவர் உண்மை உள்ளவராக இருக்கிறார்.அல்லேலூயா ! கர்த்தர் இயேசு உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?