நாளைக்காகக் கவலைப் படாதிருங்கள் , கர்த்தர் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளுவார்

ஆகையால், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளைய தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும்;அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும் (மத் 6:34) கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்து கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானதுக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே! நாளைய தினத்தைக் குறித்து , நாளைக்கு உங்களுக்கு என்ன நடக்கும் என்பதைக் குறித்து கவலை பட வேண்டாம். நாளைய தினம்  தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும்;நாளை தினத்தைக் கர்த்தர் பார்த்துக் கொள்ளுவார்.நாளைய தினத்துக்காக கவலைப் படக்கூடாது என்பதட்காக நாளைய தினத்துக்கு ஆயத்தப்படக் கூடாது என்பது பொருள் அல்ல.நீங்கள் நாளைய தினத்துக்காக ஆயத்தப்பட வேண்டியது அவசியமாக இருக்கின்றது.கடந்த நாட்களில் எப்படியாக கர்த்தர் உங்களுக்கு உதவி செய்தாரோ அதே போல் நாளைய தினத்தில் வரப்போகின்றதான பாடுகளை ,பிரச்சனைகளை தீர்க்க தேவையான உபகாரங்களையும், மனித உதவிகளையயம் அனுப்பி  நிச்சயமாக கர்த்தர் உதவி புரிவார். கர்த்தர் மீது பாரத்தை வைத்து, ஒவொருநாளும் கர்த்தரிடத்தில் ஜெபித்து அவருடைய கிருபைகளை பெற்றுக்கொள்ள வேண்டும். அலேலூயா! கர்த்தர் இயேசு உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?