பெலத்தையும், சக்தியையும் தரும் தேவன்

தேவனுடைய வசனம் சொல்லுகிறது, சோர்ந்துபோகிறவனுக்கு தேவன் பெலன்  கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார் என்று (ஏசாயா 40 :29)

ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில்  தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம்.

ஆம்  பிரியமானவர்களே, வாழ்க்கையில் பாடுகள், போராட்டங்கள், உபத்திரவங்கள், நிந்தைகள், அவமானங்கள் வரும் போது நாம் அவற்றை தாங்கி கொள்ளுவதுக்கு பெலன் ,சத்துவம் இல்லாமல் சோர்ந்து பெலனற்று போகிறோம்,ஆனால் வேத வசனம் சொல்லுகிறது , தேவன் சோர்ந்துபோகிறவனுக்கு பெலன்  கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார் என்று. அல்லேலூயா ! 

ஆகவே இப்படி நீங்கள் பெலனற்று போகும் போது உங்களுக்கு உதவி செய்ய ஒரு தேவன் உண்டு அவர்தான் உங்களை சிருஷ்டித்த இயேசு கிறிஸ்து.அவரிடம் நீங்கள் சூழ்நிலைகளை தாங்கி கொள்ள தேவையான பெலத்தையும் , சத்துவத்துவதையும் கேட்க்கும் போது அவற்றை கொடுக்க தேவன் உண்மை உள்ளவராக இருக்கிறார்.அது மாத்திரம் மாத்திரம் அல்ல உங்களுக்கு அவர் பெலத்தையும், சத்துவதையும் கொடுப்பதோடு நீங்கள் புது பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்ப உதவி செய்வார். அல்லேலூயா ! 

ஆண்டவராகிய இயேசு உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?