என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார் (எரேமி 31 : 14 b ) ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை கர்த்தர் இந்த புதிய வருடத்தில் உங்களுக்கு வாக்குத் தத்தமாகக் கொடுக்கின்றார். கர்த்தர் சொல்லுகிறார் `என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள் ‘  என்று . அல்லேலூயா ! கர்த்தருடைய வார்த்தையை அப்படியே நீங்கள் விசுவாசித்து, அவர் உங்களுக்குக் கொடுத்த வாக்குத்தத்தத்துக்காகக் கர்த்தருக்கு ஒவ்வொரு நாளும் நன்றி செலுத்துங்கள். நிச்சயமாக கர்த்தருடைய நன்மையான கரம் உங்கள் வாழ்க்கையில் அமர்ந்து இருப்பதையும், அவர் உங்களுக்குக் கொடுத்த வாக்குத்தத்தம் நிறைவேறுவதையும் நீங்கள் காண்பீர்கள். அவர் உங்களுக்கு நன்மையானதை  இந்த வருடத்தில் தருவார், அதனால் நீங்கள் திருப்தியாவீர்கள். அல்லேலூயா ! வாக்குக் கொடுத்த அவர் தனது வாக்குத்தத்தத்தில் உண்மை உள்ளவராக இருக்கிறார். இதுவரை காலமாக உங்கள் வாழ்வில் நீங்கள் காத்திருந்த கர்த்தருடைய நன்மையை பெற்றுக்கொள்ளும் வேளை வந்துவிட்டது,  அவர் இதுவரை உங்கள் வாழ்வில் இருந்து வந்த எல்லா எதிரான சூழ்நிலைகளையும் நீக்கி , உங்களுக்கு அவர் நன்மையானவைகளைக்  கொடுக்கப்போகிறார், அவர் அளிக்கும் நன்மையினால் நீங்கள் திருப்தியடையப் போகிறீர்கள் , அவர் உங்களை வாழ்க்கையில் உயர்த்தப் போகிறார். அல்லேலூயா ! கர்த்தர்  இயேசு உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. 

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?