பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன்

உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலதுகையைப் பிடித்து: பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று சொல்லுகிறேன் (ஏசா 41:13). ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, சூழ்நிலை உங்களுக்கு விரோதமாக, உங்களுக்கு எதிராக உங்களை அமிழ்க்கிறது போல இருக்கலாம். ஆனால் மறந்து விடாதீர்கள், உங்களை சிருஷ்டித்த தேவன் உங்களுடைய பிரச்னைகளைப் பார்க்கிலும், உங்களுடைய சூழ்நிலைகளைப் பார்க்கிலும் அவர் பெரியவராக இருக்கிறார். அவர் உங்களை நடுக்கடலில் தத்தளிக்க விட்டு விட்டு வேடிக்கை பார்ப்பவரல்ல, அவர் உங்களை உங்கள் ஆபத்தான சூழ்நிலையிலிருந்து  விடுதலை செய்பவர், அவரால் எப்படிப்படட சூழ்நிலையாக இருந்தாலும் மாற்றியமைக்க முடியும், அல்லேலூயா ! அதனால் தான் வேத வசனம் சொல்லுகிறது , உலகத்தில் இருப்பவனை பார்க்கிலும் உங்களுக்குள்ளே இருப்பவர் பெரியவர் என்று.  உங்கள் வலதுகையைப் பிடித்து  ‘பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன்’ என்று சொன்ன தேவன் தனது வாக்குத்தத்தத்தில் உண்மையுள்ளவராக இருக்கிறார், அவர் பொய் சொல்லுவதில்லை. அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராக இருக்கிறார். அல்லேலூயா ! ஆகவே எல்லா சூழ்நிலைகளிலும் உங்கள் வலதுகையைப் பிடித்து: பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று உங்களுக்கு வாக்குக் கொடுத்த தேவனை நம்புங்கள். அவர் நல்லவர். அல்லேலூயா ! கர்த்தர் உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. 

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?