கர்த்தருடைய பெலன்

அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கிப் பார்த்து: உனக்கு இருக்கிற இந்தப் பலத்தோடே போ; நீ இஸ்ரவேலை மீதியானியரின் கைக்கு நீங்கலாக்கி இரட்சிப்பாய்; உன்னை அனுப்புகிறவர் நான் அல்லவா என்றார் (நியா 6:14). ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்ததினால் கர்த்தர் அவர்களை ஏழு வருஷம் மீதியானியரின் கையில் ஒப்புக்கொடுத்தார், அவர்களுடைய நெருக்கத்தின் மத்தியில் இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தரை நோக்கி முறையிடுகிறார்கள், கர்த்தர் அவர்களின் முறையீட்டைக் கேட்டு, அவர்களை மீதியானியரின் கைக்கு நீங்கலாக்கி இரட்சிக்க கிதியோனை நியாயாதிபதியாக எழுப்புகிறார். இந்த சூழ்நிலையில் தான் கர்த்தர் கிதியோனைப் பார்த்து சொல்லுகிறார் ‘  உனக்கு இருக்கிற இந்தப் பலத்தோடே போ; நீ இஸ்ரவேலை மீதியானியரின் கைக்கு நீங்கலாக்கி இரட்சிப்பாய்; உன்னை அனுப்புகிறவர் நான் அல்லவா’ என்று. அல்லேலூயா ! கர்த்தர் கிதியோனோடு இருந்த படியால் அவருடைய பலத்தினால் அவன் இஸ்ரவேல் ஜனங்களை மீதியானர்களின் கைக்கு நீங்கலாக்கி இரட்சித்தான். அல்லேலூயா ! பல சமயங்களில் நமக்கு விரோதமாக இருக்கும் சூழ்நிலைகளைப் பார்த்து பயப்படுகிறோம். பிரியமானவர்களே, நீங்கள் ஒரு காரியத்தை மறந்து விட வேண்டாம் உங்களுடைய  பிரச்சினையைப் பார்க்கிலும் தேவன் பெரியவர், ஆகவே ஏப்பேட்பட்ட பிரச்சினையாக இருந்தாலும் சரி தேவ பலத்தோடு, அவருடைய உதவியோடு நாம் வாழ்க்கையில் ஜெயத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். கர்த்தருடைய பிள்ளைகளாகிய நமக்கு கர்த்தருடைய பெலம் தான் முக்கியம். இஸ்ரவேலர்களை மீதியானியர்களின் கைக்கு நீங்கலாக்கி இரட்சித்த தேவ பெலம் உங்களையும் உங்களுக்கு விரோதமாக இருக்கும் சூழ்நிலையில் இருந்து நீங்கலாக்கி   இரட்சிக்கும் என்று விசுவாசியுங்கள். தேவனுடைய வசனம் சொல்லுகிறது ‘என்னை பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பெலன் உண்டு’ ( பிலி 4 : 13). அல்லேலூயா ! தேவன் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. 

Comments

  1. May God bless you, your family and your ministry Sanjeev.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?