எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்
எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும் ( பிலி 4 : 7 ). கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்து கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைக்கு தியானதுக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே ! தேவனுடைய சமாதானத்தை நம்முடைய சுய புத்தியினால் விபரிக்க முடியாது, அதை விபரிப்பதுக்கு நம்முடைய வார்த்தைகள் போதாது, அது எல்லா புத்திக்கும் மேலானது, அப்படிப்படட சமாதானம் நம்முடைய இருதயங்களையும், நம்முடைய சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக காத்துக்கொள்ளும்.நம்முடைய இருதயத்தில் தேவ சமாதானம் நிரம்பிருக்கும்.நமக்கு எவ்வளவு துன்பங்கள், கவலைகள் வந்தாலும் தேவ சமாதானம் நிரம்பிருக்கும், நாம் எதட்கும் கவலைப்படமாட்டொம், சமாதானமாய் இருப்போம்.அல்லேலூயா ! இயேசுவினால் மாத்திரம் தான் எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானத்தை உங்களுக்கு தர முடியும்.பிரியமானவர்களே ! இயேசுவை உங்கள் வாழ்க்கையில் ஆண்டவராக ஏற்றுக்கொண்டு நீங்களும் அவருடைய எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை பெற்று...
Amen
ReplyDelete