பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

தேசமே, பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார் (யோவே 2: 21). ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, கர்த்தர் தன்னுடைய தீர்க்கதரிசியான யோவேல் மூலம் யூதா தேசத்துக்கு ஒரு வாக்குத்தத்ததை கொடுத்தார் ‘தேசமே, பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்’ என்று. ‘தேசமே பயப்படாதே’ என்பதன் அர்த்தம் ‘யூதா ஜனங்களே பயப்படாதே’ என்பதே. கர்த்தர் தன்னுடைய பிள்ளைகளாகிய யூதா ஜனங்களைப் பார்த்துச் சொல்லுகிறார் ‘யூதா ஜனங்களே (தேசமே) பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்’ என்று. இன்று இந்த வாக்குத்தத்தமானது இயேசு கிறிஸ்துவை ஆண்டவராக, இரச்சகராக தங்களுடைய வாழ்க்கையில் ஏற்றுக் கொண்டு அவருடைய பரிசுத்த இரத்தத்தினால் கழுவப்பட்ட அவருடைய பிள்ளைகளாகிய நம் ஒவ்வொருவருக்கும் சொந்தமாக இருக்கின்றது. அல்லேலூயா ! பிரியமானவர்களே, ஒரு வேளை நீங்கள் செல்லுகின்றதான சூழ்நிலை உங்களுக்கு விரோதமாக, கடினமானதாக, கரடு முரடானதாக இருக்கலாம், உங்களைப் பார்த்து  கர்த்தர் சொல்லுகிறார் ‘மகளே, மகனே பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; நான் (கர்த்தர்)  பெரிய காரியங்களை உன்னுடைய வாழ்க்கையில் செய்வேன்’ என்று. அல்லேலூயா ! பிரியமானவர்களே, கர்த்தாரையும், அவருடைய வாக்குத்தத்தையும் நம்புங்கள். கர்த்தர் உங்களுடைய வாழ்க்கையில் பெரிய, அதிசயமான, மகத்துவமான காரியங்களை செய்து உங்களுடைய வாழ்க்கையில் அவருடைய நாமத்தை மகிமைப்படுத்துவார். அல்லேலூயா ! தேவன் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. 

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?