கர்த்தருடைய கை குறுகியிருக்கிறதோ?

அதற்குக் கர்த்தர் மோசேயை நோக்கி: கர்த்தருடைய கை குறுகியிருக்கிறதோ? என் வார்த்தையின்படி நடக்குமோ நடவாதோ என்று. நீ இப்பொழுது காண்பாய் என்றார் (எண்ணா 11 : 23). ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, பல சமயங்களில் நம்முடைய வாழ்க்கையில் நாம் எதிர்பார்க்கும் காரியம் நடை பெறாத பட்ச்சத்தில், அல்லது காலதாமதம் ஆகும் போது  நாம் கர்த்தரை மட்டுப்படுத்தி விடுகிறோம். இப்படிப்பட்ட ஒரு மனநிலையில் தான் கர்த்தருடைய ஊழியக்காரனான மோசேயும் இருந்தார். கர்த்தர் செய்த அதிசயங்களையும், அட்புதங்களையும் கண்களினால் கண்ட மோசே கர்த்தர் சொன்ன காரியம் எப்படி நிறைவேறப் போகுது என்று நினைத்த போது தான் கர்த்தர் மோசேயை நோக்கி: ‘கர்த்தருடைய கை குறுகியிருக்கிறதோ? என் வார்த்தையின்படி நடக்குமோ நடவாதோ என்று. நீ இப்பொழுது காண்பாய்’ என்றார். கர்த்தரால் முடியாத காரியம் ஒன்றுமில்லை. அவருடைய வாயின் ஒவ்வொரு வார்த்தையும் நிறைவேறும். ஆரம்ப காலத்தில் மோசே தேவனிடத்தில் உமது நாமம் என்ன என்று கேட்ட போது ‘நான் இருக்கிறவராகவே இருக்கிறேன், இருக்கிறவர்’ என்று தேவன் தம்மை மோசேக்கு வெளிப்படுத்தினார். இப்பொது மீண்டும் தேவன் தன்னை தான் மாறாதவர், சர்வ வல்லமையுள்ள்ளவர் என்றும் அட்புதம் செய்வதட்க்கு அவருடைய கை இன்னும் குறுக்கியிருக்கவில்லை என்றும் மோசேக்கு தேவன் தெளிவுபடுத்துகிறார். பல சமயங்களில் கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாமும் மோசேயைப் போல தேவனைக் குறித்து, அவருடைய வல்லமையைக் குறித்து நன்கு அறியாததால் தேவனனுடைய செயல்களை மட்டுப்படுத்தி விடுகிறோம். பிரியமானவர்களே, நாம் ஆராதிக்கும் தேவன் சர்வவல்லமை நிறைந்தவர், அவரால் செய்ய முடியாத காரியம் ஒன்றுமில்லை. மனித சிந்தனைக்கு, அறிவுக்கு அப்பாட்பட்ட காரியங்களை அவர் செய்கிறார். அல்லேலூயா ! தேவன் மீது உங்களுடைய நம்பிக்கையை வையுங்கள். தேவன் இயேசு உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. 

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?