பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம்

அவன் (ஏசா) தன் கண்களை ஏறெடுத்து, ஸ்திரீகளையும் பிள்ளைகளையும் கண்டு: உன்னோடிருக்கிற இவர்கள் யார்? என்றான். அதற்கு அவன் (யாக்கோப்பு) : தேவன் உமது அடியானுக்கு அருளின பிள்ளைகள் என்றான் (ஆதி 33:5). ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, ஏசாவும், யாக்கோபும் சகோதரர்கள், பல வருடங்களுக்குப் பிறகு இருவரும் ஒருவருக்கொருவர் சந்திக்கிறார்கள், அப்பொழுது ‘ஏசா தன் கண்களை ஏறெடுத்து, ஸ்திரீகளையும் பிள்ளைகளையும் கண்டு: உன்னோடிருக்கிற இவர்கள் யார்? என்றான்.  அதற்கு யாக்கோப்பு தேவன் உமது அடியானுக்கு அருளின பிள்ளைகள் என்றான்’ . தேவனுடைய முதல் சிருஷ்டிப்புகளான ஆதாமுக்கும், ஏவாளுக்கும் பிள்ளை (காயின்) பிறந்த போது, கர்த்தரால் ஒரு மனுஷனைப் பெற்றேன் என்றே ஏவாள் (ஆதி 4:1) சொன்னாள்.  ஆம்  பிரியமானவர்களே, வேதம் சொல்லுகிறது ‘ இதோ, பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன் (சங் 127:5) என்று. அல்லேலூயா !  பிரியமானவர்களே , யாராவது உங்களிடம் உங்களுக்கு எத்தனை பிள்ளைகள் என்று கேட்டால், நீங்களும் யாக்கோபை போல், கர்த்தர் எனக்கு (உங்களுடைய பிள்ளைகளின் எண்ணிக்கை) பிள்ளை/ பிள்ளைகளைக் கொடுத்து (அருளி) ஆசிர்வதிருக்கிறார் என்று சொல்லி கடவுளின் நாமத்தை மகிமைப் படுத்துங்கள். அல்லேலூயா ! ஆண்டவர் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.  

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?