தடைகளை நீக்கிப்போடுகிறவர் உங்களுக்கு முன்பாக செல்லுகிறார்

தடைகளை நீக்கிப்போடுகிறவர் அவர்களுக்கு முன்பாக நடந்துபோகிறார். அவர்கள்  தடைகளை நீக்கி, வாசலால் உட்பிரவேசித்துக் கடந்துபோவார்கள்; அவர்கள் ராஜா அவர்களுக்கு முன்பாகப் போவார், கர்த்தர் அவர்கள் முன்னணியில் நடந்துபோவார் (மீகா 2:13). ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, கர்த்தருடைய தீர்க்கதரிசி  மீகா இஸ்ரவேல் ஜனங்களுக்கு அவர்கள் ஆராதிக்கின்ற தேவனைக் குறித்துச் சொல்லும் போது சொல்லுகிறார், தேவன் அவர்களுக்கு முன்பாக இருக்கின்ற தடைகளை  நீக்கிப்போடுகிறவர் என்றும், அவர் அவர்களுக்கு (இஸ்ரவேல் ஜனங்களுக்கு) முன்பாக நடந்துபோகிறார் என்றும், அவர்கள் (இஸ்ரவேல் ஜனங்கள்) தடைகளை எல்லாம் நீக்கி, வாசலால் உட்பிரவேசித்துக் கடந்துபோவார்கள் என்றும், அவர்கள் ராஜா அவர்களுக்கு முன்பாகப் போவார் என்றும், அவர்களுடைய கர்த்தர் அவர்கள் முன்னணியில் நடந்துபோவார்‘ என்றும். அல்லேலூயா ! ஆம் பிரியமானவர்களே, நாம் ஆராதிக்கின்ற நம்முடைய ஜீவனுள்ள தேவன் இயேசுவுக்கு ‘தடைகளை நீக்கிப்போடுகிறவர்’ என்றும் ஒரு பெயர் உண்டு, அவர் நமக்கு முன்பாக செல்லும் போது நாம் எதை குறித்தும் பயப்பட வேண்டிய அவசியமில்லை. நம் வாழ்க்கையில் நமக்கு முன்பாக இருக்கின்ற செங்கடல் போன்றதான பிரச்சனைகளை, எரிகோ போன்றதான தடைகளை, அவர் நீக்கிப் போடுவார், அல்லேலூயா ! அவர் சர்வ வல்லமை நிறைந்தவர், அவர் யுத்தத்தில் யூத ராஜ சிங்கம். அவர் உங்களுக்கு இருக்கின்ற நோய்களைப் பார்க்கிலும், உங்களுக்கு இருக்கின்ற பணப் பிரச்னையைப் பார்க்கிலும், உங்களுக்கு இருக்கின்ற வீசாப் பிரச்னையைப் பார்க்கிலும், உங்களுக்கு இருக்கின்ற தேவைகளைப் பார்க்கிலும் அவர் பெரியவர். அல்லேலூயா ! அவர் உங்களுக்கு முன்பாக இருக்கின்ற தடைகளை எல்லாம் நீக்கிப் போட்டு, உங்களை வெற்றியின் பாதையில் வழிநடத்த அவர் உண்மையுள்ளவராகவும், வல்லமையுள்ளவராகவும் இருக்கிறார். அல்லேலூயா ! ஆகவே பிரியமானவர்களே, உங்களுடைய கவனத்தை  உங்களுடைய பிரச்சனையின் மீது வைக்காமல், உங்களுடைய பிரச்சசினைகளை தகர்த்தி எறிகின்ற, அவைகளை நொறுக்கிப் போடுகின்ற, அவைகளை நீக்கிப் போடுகின்ற சர்வ வல்லமையுள்ள தேவன் இயேசு கிறிஸ்து மீது உங்களுடைய கவனத்தை செலுத்துங்கள். அல்லேலூயா ! தேவன் இயேசு உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக, ஆமென்.

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?