பூர்வநாட்களில் உங்களைப் பாதுகாத்த கர்த்தருடைய கரம்

பூர்வநாட்களை நினைக்கிறேன், உமது செய்கைகளையெல்லாம் தியானிக்கிறேன்; உமது கரத்தின் கிரியைகளை யோசிக்கிறேன் (சங் 143:5). ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, தாவீது தன்னுடைய வாழ்க்கையில் எதிரிகளினால் நெருக்கப்படும் போது பூர்வ நாட்களை (கடந்த நாட்களை) நினைத்துப் பார்க்கிறார், பூர்வ நாட்களில் கர்த்தர் அவருடைய வாழ்க்கையில் செய்த செய்களைத் தியானித்துப் பார்ப்பதோடு,  அவருடைய கரத்தின் கிரியைகளையும் யோசித்துப் பார்க்கிறார். ஆம் பிரியமானவர்களே, பூர்வ நாட்களில் கர்த்தர் நம்முடைய வாழ்க்கையில் செய்த நன்மைகளை, அதிசயமான காரியங்களை ஒரு போதும் நாம்  மறந்து விடக்கூடாது, தாயின் கருவில் உண்டான நாள் முதல் இந்நாள் வரை கர்த்தர் நம் வாழ்க்கையில் அநேக நன்மைகளையும், அதிசயங்களையும் செய்தியிருக்கிறார், அவர் நம்மை மானிடனாக சிருஷ்டித்தது மாத்திரமல்ல அட்புதமாய் தாயின் கருவில் நம்மை பாதுகாத்து பூமியில் பிறக்க உதவி செய்தார், அது மாத்திரமல்ல, அவருடைய நன்மை செய்கின்ற, அவருடைய பாதுகாக்கின்ற கரமே நம்மை தீமையிலிருந்து, ஆபத்திலிருந்து, கொடிய நோய்களிருந்து இந்நாள் வரை பாதுகாத்து வந்தது. பிரியமானவர்களே, என்னை என் பெற்றோர்களே அவர்களுடைய சூழ்நிலையின் நிமித்தம் தாயின் கருவில் இருக்கும் போது என்னை அழிக்க (abortion) முயற்சித்தார்கள், இத்தனைக்கு என் பெற்றோர் கொடியவர்களல்ல, அவர்கள் மிகவும் அன்பானவர்கள், நல்லவர்கள், ஆனால் அந்த நேரத்தில் அவர்கள் இருந்த சூழ்நிலை அவர்களை அப்படிச் செய்ய வேண்டிய நிலைமைக்குத் தள்ளியது, ஆனால் கர்த்தருடைய கரம் என்னை தாயின் கருவில் பாதுகாத்து இந்நாள் வரை இந்த பூலோகத்தில் எந்த தீங்கும் என்னை அணுகாத வண்ணம் பாதுகாத்து வந்தது. அல்லேலூயா ! அதே போல் உங்களுடைய வாழ்க்கையிலும் கர்த்தரே உங்களை எல்லாத் தீய சக்திகளுக்கும், ஆபத்துக்களுக்கும், விபத்துகளுக்கும், கொடிய நோய்களுக்கும் பாதுகாத்து வந்திருக்கிறார், அவ்வாறு உங்களை எல்லாத் தீமைகளுக்கும் பாதுகாத்து வந்த கர்த்தர் உங்களை இப்போது நீங்கள் இருக்கும் பிரச்சனையிலிருந்து பாதுகாக்க மாட்டாரோ?  நிச்சயமாக அவர் உங்களைப் பாதுகாப்பார், ஒன்றை மறந்து விடாதீர்கள், நம்முடைய கர்த்தர் இயேசு கிறிஸ்து உங்களுடைய பிரச்னையைப் பார்க்கிலும், கொடிய நோய்களான கன்செரைப் (cancer) பார்க்கிலும், கொர்ன வைரஸைப் (cornovirus) பார்க்கிலும் பெரியவர். அல்லேலூயா ! பிரியமானவர்களே, தேவன் இயேசுவை நீங்கள் விசுவாசிப்பதோடு, அவர் உங்களுடைய பூர்வ நாட்களில் செய்த  நன்மைகளுக்காக, அதிசயங்களுக்காக, மகத்துவமான காரியங்களுக்காக அவரைத் துதித்து, அவருக்கு நன்றி செலுத்துங்கள். அல்லேலூயா ! தேவன் இயேசு உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. 

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?