நூறுமடங்கு பலன்

ஈசாக்கு அந்தத் தேசத்தில் விதைவிதைத்தான்; கர்த்தர் அவனை ஆசீர்வதித்ததினால் அந்த வருஷத்தில் நூறுமடங்கு பலன் அடைந்தான் (ஆதி 26:12). ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, ஈசாக்கு தேசத்தில் விதை விதைத்த காலம் நீங்கள் நினைக்கிறது போல் செழிப்பான காலமல்ல, அது பஞ்சத்தின் காலம். ஆனால் ஈசாக்கை தேவன் ஆசீர்வதித்ததினால் அந்த வரு‌ஷத்தில் அவர் நூறு மடங்கு பலன்  அடைந்தார். அல்லேலூயா ! பிரியமானவர்களே, யார் மீதெல்லாம் கர்த்தருடைய கரம் இருக்கின்றதோ அவனுடைய வாழ்க்கை ஆசிர்வதிக்கப்படும். கர்த்தருடைய ஆசிர்வதிக்கின்ற கரம் ஈசாக்கின் மேலிருந்த படியால் அவர் பஞ்ச காலத்தில் விதை விதைத்தும் அந்த வருஷத்தில் அவர் நூறு மடங்கு பலன் அடைந்தார். அல்லேலூயா ! நீங்களும் உங்களுடைய வாழ்க்கையில் ஈசாக்கைப் போல் தியானிக்கிற மனுஷனாக, ஜெபிக்கிற மனுஷனாக வாழ்ந்து கர்த்தரை பிரியப்படுத்தும் போது, கர்த்தர் உங்களுடைய வியாபாரத்தில், உங்களுடைய தொழிலில், உங்களுடைய வேலையில்  உங்களுக்கும் நூறு மடங்கு பலனைப் பெற கட்டளையிடுவார் . அல்லேலூயா ! தேவன் இயேசு உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. 

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?