உங்களை அழைத்தவர் உண்மையுள்ளவர்

உங்களை அழைக்கிறவர் உண்மையுள்ளவர், அவர் அப்படியே செய்வார் (1 தெ 5:24 ). ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, கர்த்தரே உங்களை அழைக்கின்றவர், அவர் உங்களை மனுஷர்கள் போல் இடையில் கை விட்டு விடுபவரல்ல, முடிவு பரியந்தம் உங்களை நடத்திச் செல்ல அவர் உண்மையுள்ளவராக இருக்கின்றார். கர்த்தருடைய உண்மையே நமது வாழ்க்கைக்கு ஒரு நல்ல பாதுகாப்பாக இருக்கின்றது. அல்லேலூயா ! கர்த்தரை நம்புங்கள் அவர் உங்கள் மீது, உங்கள் வாழ்க்கையில் வைத்திருக்கின்ற சித்தம் உண்மையாய் நிறைவேறும். ஏனெனில் உங்களை அழைத்தவர் உண்மையுள்ளவர், உங்களை எதற்காக அழைத்தாரோ, அவருடைய அழைப்பின் நோக்கத்தை, அவருடைய சித்தத்தை உண்மையாய் உங்களுடைய வாழ்க்கையில் நிறைவேற்றுகிறவர், அதை எந்த தீய சக்தியாலும், எந்த மனுஷனாலும் தடை செய்ய முடியாது. அல்லேலூயா ! கர்த்தரை  விசுவாசியுங்கள், உங்களை அழைக்கிறவர் உண்மையுள்ளவர், அவர் அப்படியே செய்வார். அலேலூயா ! தேவன் இயேசு உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. 

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?