தேவனால் செய்யக்கூடாது என்று ஒரு காரியமும் இல்லை

இதோ, நான் மாம்சமான யாவருக்கும் தேவனாகிய கர்த்தர்; என்னாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுண்டோ? (எரே 32 : 27 ). இந்த பூலோகத்தில் வாழும் அத்தனை ஜனங்களையும் சிருஷ்டித்தவர் தேவனாகிய கர்த்தரே, அவரே எல்லாருக்கும் தேவன்.அவர் சொல்லுகிறார் என்னாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுண்டோ? என்று. ஆம் பிரியமானவர்களே , தேவனால் முடியாத காரியம் என்று ஒன்றுமே இல்லை, அவர் சர்வவல்லவர், அவர் அதிசயங்கள், அட்புதங்கள் செய்யும் தேவன், அவரால் செய்யக்கூடாத அதிசயமான காரியம் என்று ஒன்றுமே இல்லை.அவர் அவாந்தர வெளியையே தண்ணீர் தடாகமாக மாற்றும் வல்லமை உடையவர். உங்களுடைய வாழ்க்கையில் செத்து போயிருக்கும் அல்லது வறண்டு உயிரற்று கிடக்கும் காரியங்களை அல்லது இனி ஒன்றுமே செய்ய முடியாது எல்லாமே முடிந்து போயிற்று , என்று உங்களால் கைவிடப்படட காரியங்களுக்கு தேவனால் உயிர் கொடுக்க முடியும். ஆகவே நீங்கள் கவலைப்படுவதை விட்டு விட்டு ஜீவனுள்ள தேவன் இயேசு மீது உங்களுடைய விசுவாசத்தை வையுங்கள் அவர் உங்களுடைய வாழ்க்கயில் வறண்டு செத்து போயிருக்கும் காரியங்களை உயிர்ப்படைய செய்ய வல்லமை உடையவராக இருக்கிறார். என்னுடைய வாழ்க்கையில் செத்து உயிரற்று கிடந்த காரியங்களுக்கு உயிர் கொடுத்த தேவன் நிச்சயமாக உங்களுடைய வாழ்க்கையிலும் அதிசயங்கள் செய்ய உண்மை உள்ளவராக இருக்கிறார். அல்லேலூயா ! தேவன் இயேசு உங்களையும் , உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. சகோ. சஞ்ஜீவ் விவேகானந்தராஜா 

Comments

Post a Comment

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?