கர்த்தருடைய நாமம் அவருடைய பிள்ளைகளுக்கு பலத்த துருகமாய் இருக்கின்றது

கர்த்தரின் நாமம் பலத்த துருகம்; நீதிமான் அதற்குள் ஓடிச் சுகமாயிருப்பான் ( நீதி 18 : 10 ) கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்து கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானதுக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே! கர்த்தர் தம்முடைய பிள்ளைகளுக்கு போதுமானவராய் இருக்கிறார்,அவர்களுக்கு கர்த்தருடைய நாமம் பலத்த துருகமாய் இருக்கின்றது, பெரிய கோபுரமாய் இருக்கின்றது.நீதிமான்கள் அதற்குள் பிரவேசித்து இளைப்பாறுதலடைவார்கள். நீதிமான்கள் ஓடி பாடி வேலை செய்து அதிக களைப்படைந்திருக்கும் போது கர்த்தருடைய நாமத்தில் இளைப்பாறுதலடைகின்றார்கள். கர்த்தருடைய பிள்ளைகளுக்குத் தேவையான ஆசிர்வாதங்களும், ஆறுதல்களும், ஆரோக்கியங்களும் கர்த்தருடைய நாமத்தில் இருக்கின்றது, ஆமென் ! கர்த்தருடைய நாமம் பலத்த துருகமாய் இருந்து அவர்களை பாதுகாக்கின்றது. உங்களை பாதுகாக்க கர்த்தருடைய நாமமே போதுமானது. அல்லேலூயா ! கர்த்தருடைய. நாமம் அவரை நம்பினவர்களுக்கு பலத்த துருகமாய் இருக்கின்றது.கர்த்தர் இயேசு பலத்த துருகமாய் இருந்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும்   பாதுகாப்பாராக.ஆமென் !

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?