எல்லா சூழ்நிலைகளிலும் தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்துங்கள்

எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்து தேவனுடைய சித்தமாயிருக்கிறது (1தெச 5:18).ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே ! மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானதுக்காக எடுத்துக் கொள்ளுவோம். கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரம் செலுத்த வேண்டும் அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் எங்களைக் குறித்து தேவனுடைய சித்தமாயிருக்கிறது. நீங்கள் உங்களுடைய வாழ்க்கையில் எல்லா சூழ்நிலைகளிலும் தேவனைத் துதிக்க,அவருக்கு ஸ்தோத்திரம் செலுத்த வேண்டும் என்று தேவன் விரும்புகின்றார்.உங்களுடைய இருதயமானது கர்த்தரை துதிக்கும் துதிகளாலும், ஸ்தோத்திரத்தாலும் நிரம்பியிருக்கும் போது தேவனைப் பற்றி குறை சொல்ல உங்கள் இருதயத்தில் ஒன்றும் இருக்காது.ஆகவே இன்றையில் இருந்து உங்களுடைய வாழ்க்கையில் நடக்கும் எல்லா காரியத்துக்கும் அது ஒரு வேளை சந்தோஷமான காரியமாக இருக்கலாம் அல்லது துக்கமான காரியமாக இருக்கலாம் எதுவாக இருந்தாலும் தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்துங்கள். எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக் குறித்து  தேவனுடைய சித்தமாயிருக்கிறது.அல்லேலூயா ! தேவன் இயேசு உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?