மனந்திரும்புங்கள் பரலோக ராஜ்ஜியம் மிகவும் சமீபமாயிருக்கிறது.

அறியாமையுள்ள காலங்களை தேவன் காணாதவர் போலிருந்தார்,இப்பொழுதோ மனந்திரும்பவேண்டுமென்று எங்குமுள்ள மனுஷரெல்லாருக்கும் கட்டளையிடுகிறார்(அப்போ 17:30). ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே! மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். அத்தேனே படடனத்தில் உள்ள ஜனங்கள் மெய்யான தேவனை அறியாது, அறியப்படாத தேவனை அறியாமையினால் விக்கிர ஆராதனை செய்து கொண்டு பாவத்தில் மூழ்கியிருந்த நாட்களில் அவர்கள் தங்களுடைய விக்கிர ஆராதனையிலிருந்து, தங்களுடைய பாவ வாழ்க்கையில் இருந்து மனந்திரும்பி மெய்யான தேவனாகிய அவர்களை சிருஷ்டித்த, வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்த தேவனிடம் அவர்கள் வர வேண்டும் என்பதை நோக்காகக் கொண்டு அப்போஸ்தலனாகிய பவுல் மாஸ் மேடையில்  ‘அறியாமையுள்ள காலங்களை தேவன் காணாதவர் போலிருந்தார்; இப்பொழுதோ மனந்திரும்பவேண்டுமென்று எங்குமுள்ள மனுஷரெல்லாருக்கும் கட்டளையிடுகிறார்’ என்று சத்தியத்தை பிரசங்கித்தார். புற ஜாதியாருக்கு, விக்கிர ஆராதனைக்காரருக்கு  இந்த சத்தியத்தை அறிவிக்கப்படுவதட்கு முந்தின காலம் அவர்களுக்கு அது அறியாமையின் காலங்களாக இருந்தது, அந்த காலங்களை  தேவன் காணாதவர் போலிருந்தார். ஆனால் இப்போதோ தேவன் பவுலின் மூலமாய் தேவன் அத்தேனே படடனத்தில் உள்ள எல்லா ஜனங்களுக்கும் மனந்திரும்ப வேண்டும் என்று கட்டளையிடுகிறார். ஆம் பிரியமானவர்களே, உங்களுடைய நன்மைக்காகத்தான் தேவன் இந்த கடடளையைக்  கொடுக்கிறார். இன்று தேவனுடைய சுவிஷேசம் எல்லா தேசங்களிலும் உள்ள எல்லா ஜனங்களுக்கும் தங்களுடைய விக்கிரக ஆராதனையில் இருந்து, தங்களுடைய பாவ வாழ்க்கையிலிருந்து மனந்திரும்பி, இயேசுவை தங்களுடைய வாழ்க்கையில் ஆண்டவராக, இரச்சகராக ஏற்றுக்கொள்ளும் படி அறிவிக்கப்படுகின்றது. யார் யாரெல்லாம் இயேசுவை விசுவாசித்து  தங்களுடைய பாவ வாழ்க்கையில் இருந்து மனந்திரும்பி, பாவ அறிக்கை செய்து, இயேசுவை தங்களுடைய  வாழ்க்கையில் ஆண்டவராக, இரச்சகராக ஏற்றுக்கொள்ளுகிறார்களோ அவர்களுடைய பாவங்களை இயேசு மன்னித்து பரலோகதுக்குள் பிரவேசிக்க அவர் உண்மையுள்ளவராக இருக்கிறார். எல்லா மனுஷரும் பாவம் செய்திருக்கிறார்கள், ஆகவே எல்லாரும் மனந்திரும்ப வேண்டும் என்பது தேவனுடைய எதிர்பார்ப்பாயிருக்கின்றது. நமக்குப் பாவமில்லையென்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம் ’(1யோவ1:8) ஆகவே, மனந்திரும்புங்கள் பரலோக ராஜ்ஜியம் மிகவும் சமீபமாயிருக்கிறது. அலேலூயா ! கர்த்தர் இயேசு உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. 

Comments

Post a Comment

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?