வேதனையைக் கூட்டிடாத கர்த்தருடைய ஆசிர்வாதம்

கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார் என்று (நீதி 10:22). ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே , இந்நாட்களில் ஜனங்கள் பிழையான வழிகளில் , அநீதியான வழிகளில் ஐசுவரியத்தை சம்பாதிக்கிறார்கள், அவ்வாறு சம்பாதிக்கப்படும் ஐசுவரியத்தில் கர்த்தருடைய ஆசிர்வாதம் இருக்காது, அவர்களுடைய வாழ்க்கையில் சந்தோசம், ஆறுதல், சமாதானம், நிம்மதியிருக்காது இவற்றுக்குப் பதிலாக வேதனையே இருக்கும். ஆனால் யாரெல்லாம்  கர்த்தருடைய சித்தத்துக்கும், விருப்பத்திட்கும் , திடடத்துக்கும் கீழ்ப்படிந்து, கர்த்தருக்குப் பயந்து தங்களுடைய வேலையில் உண்மையுள்ளவர்களாக இருந்து ஐசுவரியத்தை சம்பாதிக்கிறார்களோ , அவ்வாறு சம்பாதிக்கப்படும் அவர்களுடைய ஐசுவரியம் கொஞ்சமாக இருந்தாலும் , அவர்களுடைய ஐசுவரியத்தில் கர்த்தருடைய ஆசிர்வாதம் நிலைத்திருக்கும். அதனால் தான் வேதம் சொல்லுகிறது , கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார் என்று. அல்லேலூயா ! கர்த்தர் இயேசு உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. 

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?