வனாந்தரத்திலே வழியையும், அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்கும் தேவன்

இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றும்; நீங்கள் அதை அறியீர்களா? நான் வனாந்தரத்திலே வழியையும், அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன் (ஏசா 43 : 19 ). ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, கர்த்தர் உங்களுடைய வாழ்க்கையில் ஒரு புதிய காரியத்தைச் செய்வதாக வாக்குக் கொடுக்கின்றார். கர்த்தர் மீது உங்களுடைய விசுவாசத்தை வையுங்கள். வாக்குக் கொடுத்த கர்த்தர் உண்மையுள்ளவர், அவர் மாறுவதுவதில்லை, அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராய் இருக்கின்றார். சூழ்நிலை உங்களுக்கு விரோதமாக இருக்கின்றதா? வாழ்க்கை ஒரு வனாந்தரத்தைப் போல, ஒரு அவாந்தர வெளியைப் போல வறண்டு போய் உலர்ந்து போய் இருக்கின்றதா? சூழ்நிலையைப் பார்த்து கவலைப்படுவதை விட்டு விட்டு, உங்களை உங்கள் சூழ்நிலையில் இருந்து விடுவிக்கப்போகும் கர்த்தரை நோக்கிப் பாருங்கள். சூழ்நிலையைப் பார்க்கிலும் கர்த்தர் பெரியவர், வனாந்தரத்திலே வழியையும், அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்க அவரால் முடியும். அல்லேலூயா ! புதிய வருடத்துக்குள் செல்ல இருக்கும் உங்களுக்கு கர்த்தர் ஒரு புதிய காரியத்தை உங்களுடைய வாழ்க்கையில் செய்ய விரும்புகிறார். கர்த்தரை விசுவாசியுங்கள். கர்த்தரால் முடியாத காரியம் ஒன்றுமே இல்லை. அல்லேலூயா ! கர்த்தர் இயேசு உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. 

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?