உம்முடைய பூர்வகாலத்து அதிசயங்களையே நினைவுகூருவேன்

கர்த்தருடைய செயல்களை நினைவுகூருவேன், உம்முடைய பூர்வகாலத்து அதிசயங்களையே நினைவுகூருவேன் (சங் 77 : 11 ). ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, சங்கீதக்காரன் தன்னுடைய வாழ்க்கையில் பாடுகளுக்கூடாகவும் , வேதனைகளுக்கூடாகவும் கடந்து செல்லும் போது தேவன் அவனுக்கு பூர்வ காலத்தில் செய்த  அதிசயங்களையும் , அவருடைய  செயல்களையும் நினைத்துப் பார்க்கிறான். பிரியமானவர்களே , நீங்களும் வாழ்க்கையில் இறுக்கமான சூழ்நிலைக்கூடாகக் கடந்து செல்வீர்களானால் சங்கீதக்காரனைப் போல் பூர்வ நாட்களில் தேவன் உங்களுக்குச் செய்த நன்மைகளையும், அதிசயங்களையும், அவருடைய மகத்துவமான கிரியைகளையும் மறக்காமல் நினைத்து தேவனுக்கு நன்றி செலுத்துங்கள். பூர்வ நாட்களில் உங்களுக்கு உதவி செய்த தேவன் நிச்சயமாக உங்களுடைய இறுக்கமான சூழ்நிலையிலிருந்து உங்களை விடுதலை செய்ய அவர் உண்மையுள்ளவராக இருக்கிறார் , அவர் உங்களுடைய எதிரிடையான சூழ்நிலைக்கு ஆண்டவராக இருக்கிறார். அவரால் முடியாத காரியம் ஒன்றுமில்லை. அல்லேலூயா ! தேவன் இயேசு உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. 

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?