தேவனே உமது நாமத்தை என்னுடைய குடும்பத்தில் மகிமைப்படுத்தும்

பூர்வகாலத்து அக்கிரமங்களை எங்களுக்கு விரோதமாக நினையாதேயும்; உம்முடைய இரக்கங்கள் சீக்கிரமாய் எங்களுக்கு நேரிடுவதாக; நாங்கள் மிகவும் தாழ்த்தப்பட்டுப்போனோம் (சங் 79 :8 ) எங்களை இரட்சிக்கும் தேவனே, நீர் உமது நாமத்தின் மகிமையினிமித்தம் எங்களுக்கு உதவிசெய்து, உமது நாமத்தினிமித்தம் எங்களை விடுவித்து, எங்கள் பாவங்களை நிவிர்த்தியாக்கும் (சங் 79 : 9 ). ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள இரண்டு வேத வசனங்களையும் இன்றைய நாளில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, இஸ்ரவேல் ஜனங்கள் , தாங்கள் தங்களுடைய வாழ்க்கையில் அனுபவிக்கும் எல்லா பிரச்சினைகளுக்கும், பாடுகளுக்கும், உபத்திரவங்களுக்கும் தாங்கள் பூர்வ காலத்தில், கடந்த நாட்களில் செய்த பாவங்கள் தான் காரணம் என்று அறிந்த அவர்கள் தேவனை நோக்கி தாங்கள் கடந்த நாட்களில் செய்த பாவங்களை மன்னிக்கும்படியும் , தேவனுடைய கண்களில் தங்களுக்கு இரக்கங்கள் கிடைக்கும் படியாகவும், வாழ்க்கையில் தாழ்த்தப்பட்டிருக்கிற அவர்களை தேவன் அவருடைய நாமத்தின் மகிமைக்காக அவர்களை அவர்களின் இறுக்கமான சூழ்நிலையில் இருந்து மீட்டு அவர்களை ஆசிர்வதிக்கும்படியாக விண்ணப்பத்தை ஏறெடுக்கிறார்கள். என்ன தொரு அருமையான ஜெபம் இது. ஆம் பிரியமானவர்களே , நாம் ஒவ்வொருவரும் ஏறெடுக்க வேண்டிய ஜெபம் இது. தேவனால் நீங்கள் ஆசிர்வதிக்கப்பட்ட வேண்டுமானால்,  முதலாவது உங்கள் பாவங்களை தேவன் மன்னிக்க வேண்டும் இரண்டாவது தேவனுடைய கண்களில் உங்களுக்கு இரக்கங்கள் கிடைக்க வேண்டும். தேவன் இயேசுவுக்கு மாத்திரமே ஒருவனுடைய பாவங்களை மன்னிக்க அதிகாரம் இருக்கின்றது. அல்லேலூயா ! நாமும் தேவனை நோக்கி இந்த விண்ணப்பத்தை ஏறெடுத்து எங்களுடைய வாழ்க்கையிலும் தேவன் அவருடைய நாமம் மகிமைப்படும்படியாக அதிசயத்தைச் செய்து அவருடைய நாமத்தை எங்கள் வாழ்க்கையில் பிரஸ்தாபப்படுத்தும் படியாக கேட்ப்போமாக. தேவன் இயேசு உங்களையும்,  உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. 

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?