தேவனுக்கு முன்பாக பயத்துடனே நடந்துகொள்ளுங்கள்

அன்றியும், பட்சபாதமில்லாமல் அவனவனுடைய கிரியைகளின்படி நியாயந்தீர்க்கிறவரை நீங்கள் பிதாவாகத் தொழுதுகொண்டுவருகிறபடியால், இங்கே பரதேசிகளாய்ச் சஞ்சரிக்குமளவும் பயத்துடனே நடந்துகொள்ளுங்கள் (1பேது 1:17). ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, நம்முடைய கர்த்தராகிய தேவனை (இயேசுவை ) பிதாவாக (ஆண்டவராக) ஏற்றுக்கொண்டு அவரை தொழுது கொண்டு (ஆராதித்துக் கொண்டு)  வருகின்ற நமக்கு இந்த பிரபஞ்சமானது (பூமியானது) நிலையான வாசஸ்தலமல்ல, பரலோகமே நமக்கு நிரந்தரமான நித்திய வாசஸ்தலம். ஆனால் பரலோகத்துக்கு நாம் பிரவேசிக்கும் காலம் வரைக்கும், இந்த பிரபஞ்சத்தில் (பூமியில்) நமக்கு நியமிக்கப்பட்டிருக்கிற இந்த கொஞ்சக் காலத்தில் நாம் பரதேசிகளாய்ச் சஞ்சரித்துக்கொண்டு வருகிறோம். ஆகவே  இந்தப் பூமியில் பரதேசிகளாய் சஞ்சரித்துக் கொண்டு வருகின்ற நாம், பட்சபாதம் எதுவுமில்லாமல் அவனவனுடைய கிரியைகளின் படி ஒவ்வொருவனையும் நியாயந் தீர்க்கும் நம்முடைய கர்த்தராகிய தேவன் இயேசுவுக்கு முன்பாக பயபக்தியோடு அவருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து  அவருக்குப் பயப்படுகிற பயத்தோடு  நடந்து கொள்ள வேண்டும் என்று நம்முடைய கர்த்தராகிய தேவன் நம்மிடம் எதிர்பார்கின்றார் . அல்லேலூயா ! ஆகவே பரதேசிகளாய் இந்த பிரபஞ்சத்தில் சஞ்சரித்துக்கொண்டிருக்கிற நாம் நம்முடைய கர்த்தராகிய தேவனுக்கு முன்பாக பயத்தோடு நடந்து நம்முடைய தேவனை பிரியப்படுத்துவோம். அல்லேலூயா !  தேவன் இயேசு உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. 

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?