உங்களுடைய பாவங்களை தேவ சமுகத்தில் அறிக்கை செய்து தேவனுடைய இரக்கத்தையும், மன்னிப்பையும் பெற்றுக்கொள்ளுங்கள்

தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான் ,  அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான் (நீதி 28:13). ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே , இரண்டு காரியங்களை இந்த வசனத்தின் மூலமாய் நாம் கற்றுக் கொள்ளுகிறோம். முதலாவது, தன் பாவங்களை தேவனுக்கு மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான். இரண்டாவது தன் பாவங்களை தேவனுக்கு அறிக்கை செய்து விட்டுவிடுகிறவன் அவரது இரக்கத்தைப் பெறுகிறான். ஒரு நோயாளி மருத்துவரிடம் தன்னுடைய நோயை   மறைக்காமல் எடுத்துச் சொன்னால் தான் ,  மருத்துவரினால் சரியான மருந்துகளைக் கொடுத்து அந்த வியாதிக்கு சிகிச்சை செய்ய முடியும். அதே போலத்தான் நீங்கள் உங்களுடைய  பாவங்களை கர்த்தரிடம் அறிக்கை செய்யும் போது நீங்கள் அவருடைய  இரக்கத்தைப் பெற்றுக்கொள்ளுவதோடு , உங்களது வாழ்க்கை வாழ்வடைகின்றது, ஆசிர்வதிக்கப்படுகின்றது. வேதம் சொல்லுகிறது, நமக்குப் பாவமில்லையென்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது. நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார். நாம் பாவஞ்செய்யவில்லையென்போமானால், நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாயிருப்போம், அவருடைய வார்த்தை நமக்குள் இராது. (1 யோவா 1:8-10). ஆகவே நாம் யாரையும் நியாயம் தீர்க்காமல் , நம்மை நாமே ஆராய்ந்து பார்த்து , பாவங்களை தேவ சமுகத்தில் அறிக்கை செய்து தேவனுடைய இரக்கத்தை தேடுவோமாக. அல்லேலூயா ! தேவன் இயேசு உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. 

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?