தேவனுடைய கரத்திலே சத்துவமும் வல்லமையும் உண்டு (UK Lockdown - Day 30)

ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

பிரியமானவர்களே, இன்று பூலோகத்தில் வாழும் சில ஜனங்களுக்கு  உள்ளத்தில் எழுப்புகின்ற கேள்வி கடவுள் இருக்கிறார் என்றால் ஏன் அவரால் கொரோனா தொற்று கிருமியை அழிக்க முடியாமல் இருக்கின்றது என்று. 

பிரியமானவர்களே, வேதம் சொல்லுகிறது, 

(1 ) “தேவனுடைய கரத்திலே சத்துவமும் வல்லமையும் உண்டு” (1 நாளா 29 : 12 )

(2 ) “தேவன் பூமியைத் தம்முடைய வல்லமையினால் உண்டாக்கி, பூச்சக்கரத்தைத் தம்முடைய ஞானத்தினால் படைத்து, வானத்தைத் தம்முடைய அறிவினால் விரித்தார்” (எரேமி 10 : 12 ) 

பிரியமானவர்களே, தேவனுடைய வல்லமையையும், அவருடைய கிரியைகளையும்  மனுஷனுடைய அறிவினாலும், ஞானத்தினாலும் புரிந்து கொள்ள முடியாது, அந்த அளவு தேவன் பெரியவராக இருக்கிறார். அவரால் முடியாதென்று சொல்லிக் கொள்ள ஒரு காரியமுமில்லை, அவர் சகலத்தையும் செய்ய வல்லமையுள்ளவராக இருக்கிறார். அல்லேலூயா ! 

ஆகவே பிரியமானவர்களே, சோர்ந்து போகாதீர்கள் தொடர்ந்து தேவன் மீது உங்களுடைய விசுவாசத்தை வைத்து ஜெபத்தில் தரித்திருங்கள், தேவன் உங்களை கொரோனாவில் இருந்து பாதுகாப்பதோடு, அவருடைய வேளை வரும் போது கொரோனாவை முற்றாக அழித்துப் போட தேவன் உண்மையுள்ளவராக இருக்கிறார். அல்லேலூயா !  

தேவன் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.


Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?