நம்முடைய ஆயுசு நாட்கள் கர்த்தருடைய கரத்தில் இருக்கின்றது (UK Lockdown Day - 25)

என் காலங்கள் உமது கரத்திலிருக்கிறது; என் சத்துருக்களின் கைக்கும் என்னைத் துன்பப்படுத்துகிறவர்களின் கைக்கும் என்னைத் தப்புவியும் (சங் 31:15)

ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில்    தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். 

பிரியமானவர்களே, தாவீது சவுலினால் நெருக்கப்பட்டு, அவருடைய பிராணனுக்கு பயந்து ஒரு ஆபத்தான  சூழ்நிலையில் இருந்த போது, அவர் கர்த்தரை நோக்கி 31 வது சங்கீதத்தை விசுவாசத்தோடு பாடினார்.

பிரியமானவர்களே, தாவீது தன்னுடைய எதிரிகளினால் நெருக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான ஒரு சூழ்நிலையில் இருந்தது போல் இன்று இந்த பூலோகத்தில் வாழும் ஜனங்கள் எல்லாரும் கொரோனா கிருமியினால் நெருக்கப்பட்டு, உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையில் இருக்கிறார்கள்.

ஆகவே பிரியமானவர்களே, நீங்கள் உங்களுடைய  இந்த ஆபத்தான காலத்தில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மீது உங்களுடைய விசுவாசத்தை வைத்து அவரை நோக்கி  “ கர்த்தாவே, என் காலங்கள் உமது கரத்திலிருக்கிறது; என்னை கொள்ளை நோயாகிய கொரோனாவுக்கும், எல்லாத் தீங்குக்கும் விலக்கித் தப்புவியும்” என்று ஜெபிக்கும் போது, தாவீதின் பிராணனை அவனுடைய சத்துருவின் கைக்கு நீங்கலாக்கித் தப்புவித்த தேவன், நிச்சயமாய் உங்களையும் கொள்ளை நோயாகிய கொரோனாவுக்கும், மற்றும் எல்லாத் தீங்குக்கும் நீங்கலாக்கி தப்புவிக்க தேவன் உண்மையுள்ளவராக இருக்கிறார். அல்லேலூயா !

தேவன் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?