கொரோனாவுக்கு பயப்படாதே (UK Lockdown - Day 13)

ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை
தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

“கொரோனா கிருமி” உங்களையும் கொன்று விடும் என்று கொரோனாவுக்கு பயந்து நடுங்கி கொண்டிருக்கிறீர்களா?
பிரியமானவர்களே, பயப்பட வேண்டாம், தேவன் உங்களை பார்த்து சொல்லுகிறார், 

“கொரோனாவைப் பார்த்துப் பயப்படவேண்டாம்; உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குள்ளே இருக்கிறார், அவர் வல்லமையும் பயங்கரமுமான தேவன் (உபா 7:21) என்று. அல்லேலூயா ! 

பிரியமானவர்களே, தேவனே உங்களை பார்த்து பயப்பட வேண்டாம் என்று சொல்லும் போது, நீங்கள் ஏன் கொரோனாவைப் பார்த்து பயப்பட வேண்டும்?

உங்களை சிருஷ்டித்த, உங்களை உருவாக்கிய உங்கள் தேவன் கொரோனாவைப் பார்க்கிலும் பெரியவர், அவர் வல்லமையும், பயங்கரமுமான தேவன், அவர் உங்களுக்குள்ளே இருக்கிறார். அவர் உங்களுக்குள்ளே இருக்கும் போது கொரோனாவினால் எப்படி உங்களை அழிக்க முடியும்?

பிரியமானவர்களே, உங்களுடைய இந்த ஆபத்தான நாட்களில் கொரோனாவில் உங்களுடைய கவனத்தை செலுத்துவதை நிறுத்தி விட்டு, இதுவரை உங்களை பாதுகாத்து வந்த உங்களை சிருஷ்டித்த வல்லமை உள்ள தேவன் இயேசு கிறிஸ்து மீது உங்களுடைய கவனத்தை திருப்புங்கள். அவர் ஒருவராலேயே உங்களை இந்த கொள்ளை நோயில் இருந்து பாதுகாக்க முடியும். பாதுகாப்பார். அல்லேலூயா ! 

தேவன் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.  

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?