இனம், மதம், நிறம், அந்தஸ்து பாராமல் எல்லா மனுஷர்களது கூப்பிடுதலையும் கேட்கும் ஆண்டவர் இயேசு (UK Lockdown - Day 29)

ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

பிரியமானவர்களே, இன்றைக்கு சங்கீதம் 107 இல் இருந்து நான்கு வசனங்களை தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம்.

தங்கள் ஆபத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள், அவர்கள் இக்கட்டுகளிலிருந்து அவர்களை விடுவித்தார் (107:6)

தங்கள் ஆபத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள்; அவர்கள் இக்கட்டுகளிலிருந்து அவர்களை நீங்கலாக்கி இரட்சித்தார் (சங் 107:13)

தங்கள் ஆபத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறார்கள்; அவர்கள் இக்கட்டுகளுக்கு அவர்களை நீங்கலாக்கி இரட்சிக்கிறார் (சங் 107:19)

அப்பொழுது தங்கள் ஆபத்திலே அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறார்கள், அவர்கள் இக்கட்டுகளுக்கு அவர்களை நீங்கலாக்கி விடுவிக்கிறார் (சங் 107:28)

பிரியமானவர்களே, இந்த நான்கு வசனங்களும் ஒன்றுக்கொன்று ஒத்தவைகளாக காணப்படுகின்றன. “தங்கள் ஆபத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள், அவர்கள் இக்கட்டுகளிலிருந்து அவர்களை விடுவித்தார்/ இரட்சித்தார்”

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கிறிஸ்தவர்களுடைய தேவன் என்றும், அவர் கிறிஸ்தவர்களுடைய கூப்பிடுதலுக்கு மார்த்திரமே செவி கொடுப்பவர் என்று நினைக்கிறீங்களா? 

இல்லை பிரியமானவர்களே, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து  இனம், மதம், நிறம், அந்தஸ்து பார்ப்பதில்லை. ஆபத்து காலத்தில் யார் யாரெல்லாம் அவரை கூப்பிடுகிறார்களோ, அவர் அவர்கள் எல்லாருடைய கூப்பிடுதலையும்  கேட்டு பதில் கொடுக்கிறார் என்பதட்க்கு என்னுடைய வாழ்க்கையில் நடந்த சம்பவம் ஒன்று சாட்சியாக இருக்கின்றது.  

பிரியமானவர்களே, நான் இந்து கடவுள்களை  ஆராதித்துக்கொண்டிருந்த காலங்களில், ஒரு நாள் என்னுடைய ஆபத்தில் இந்து சமய தேவர்களை கூப்பிட்டு பதில் கிடைக்காத பட்ச்சத்தில் நான் என்னுடைய பொறுமையை இழந்து இயேசுவை நோக்கிக் கூப்பிட்டேன், அப்போது இயேசு கிறிஸ்து என் கூப்பிடுதலுக்கு செவிகொடுத்து என்னை ஆபத்திலிருந்து விடுவித்தார். அல்லேலூயா ! 

பிரியமானவர்களே, கொரோனாவுக்கு பயந்து ஆபத்தில் இருக்கும் நீங்கள் 
ஒருவேளை கிறிஸ்தவர்களல்லாமல் இருக்கலாம், கவலையே படாதீர்கள், உங்களுடைய ஆபத்தில் நீங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை நோக்கி “ இயேசு அப்பா கொரோனா கிருமிக்கு என்னை விலக்கி இரட்சியும்” என்று கூப்பிடுவீர்களானால்  நிச்சயமாக கர்த்தர் இயேசு கிறிஸ்து உங்களுடைய கூப்பிடுதலைக் கேட்டு கொரோனாவுக்கு உங்களை விலக்கிப் பாதுகாக்க அவர் உண்மையுள்ளவராக இருக்கிறார். ஏனென்றால் ஆண்டவர் இயேசு கிறிஸ்து மதங்களுக்கு அப்பாட்பட்டவர், அவர் கிறிஸ்தவர்களுக்கு மாத்திரமல்ல, அவர் எல்லா மனுஷர்களுக்கும் தேவனாக இருக்கிறார். அவர் உங்களுடைய பாவங்களுக்காக, அக்கிரமங்களுக்காக, மீறுதலுக்காக தன்னுடைய பரிசுத்த இரத்தத்தை சிந்தி கல்வாரி சிலுவையில் மரித்து, மூன்றாம் நாள் உயிரோடெழுந்து இன்றும் ஜீவிக்கிறார். அல்லேலூயா  ! 

ஆகவே பிரியமானவர்களே, தேவன் இயேசு கிறிஸ்துவை விசுவாசியுங்கள், அவர் உங்களை கொரோனாவில் இருந்து பாதுகாப்பார். அல்லேலூயா ! 

ஆண்டவர் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. 

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?