அமர்ந்திருந்து தேவனுடைய கிரியைகளுக்காகக் காத்திருங்கள் (UK Lockdown - Day 12)

நீங்கள் அமர்ந்திருந்து, நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள் (சங் 46:10)

ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை
தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். 

பிரியமானவர்களே, நாம் ஆராதிக்கிற நம்முடைய தேவன் ஜீவனுள்ளவர், அவர் இயற்க்கைக்கு அப்பாட்பட்ட பெரிய காரியங்களை, மகத்துவமான காரியங்களைச் செய்கிறவர். வேதம் சொல்லுகிறது, “அவரே பூமியைத் தம்முடைய வல்லமையினால் உண்டாக்கி, பூச்சக்கரத்தைத் தம்முடைய ஞானத்தினால் படைத்து, வானத்தைத் தம்முடைய அறிவினால் விரித்தார்” (எரேமி 10:12) என்று. 

பிரியமானவர்களே, தேவன் வானத்தை அவருடைய அறிவினால் விரிக்கக்கூடுமானால்  அவர் எவ்வளவு பெரியவராக இருப்பார் என்று சற்று சிந்தித்துப் பாருங்கள். அவரால் முடியாத காரியம் என்று சொல்லிக்கொள்ள ஒன்றுமில்லை. அவர் கொரோனாவைப் பார்க்கிலும் பெரியவர், அவரால் மாத்திரம் தான் கொரோனா கிருமிகளை முற்றாக இந்த பூலோகத்திலிருந்து அழிக்க முடியும். அல்லேலூயா !  

ஆகவே பிரியமானவர்களே, நீங்கள் உங்களுக்கு விரோதமாக இருக்கும் சூழ்நிலையைப் பார்த்து   பயப்படாமல், பதட்டப்படாமல், தேவன் மீது உங்களுடைய விசுவாசத்தை  வைத்து,  அமைதலாய் இருங்கள், அவர் உங்களை கை விட மாட்டார். கொரோனா உங்களை அணுகாத வண்ணம் உங்களை அவர் பாதுகாத்துக் கொள்ளுவார். அவரே சொல்லியிருக்கிறார் “நீங்கள் அமர்ந்திருந்து, நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள்” என்று. அவருடைய  கிரியைகள் பயங்கரமானவைகள். அவர் தம்மை நம்பியிருக்கிற ஜனங்களை ஒருபோதும் வெட்கப்படுத்த மாட்டார். அல்லேலூயா ! 

தேவன் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. 

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?