தேவனை நம்பியிருக்கிறேன், நான் கொரோனா தொற்றுக் கிருமிக்கு பயப்படேன்; கொரோனா கிருமி எனக்கு என்ன செய்யும்? (UK Lockdown - Day 36)

நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன், தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்; தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன்; மாம்சமானவன் எனக்கு என்ன செய்வான்?  (சங் 56:3-4) 

ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனங்களை இன்றைய தினத்தில்    தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம்.

என்னுடைய தேவ செய்திகளை படித்துக் கொண்டிருக்கிற நீங்கள் ஒருவேளை நினைக்கலாம் ஏன் நான் தாவீதைப் பற்றி அதிகமாய் இந்நாட்களில் எழுதுகிறேன் என்று.

பிரியமானவர்களே, நீங்கள் ஒரு காரியத்தை தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும், நாம் ஆர்த்திக்கிற தேவன் ஜீவனுள்ளவர், அவர் எங்களோடு சமயத்துக்கு ஏற்ற வார்த்தைகளோடு பேசுகிறவர் என்று, ஆதலால் நான் தாவீதைப் பற்றி அதிகமாய் இந்நாட்களில் எழுதுகிறேன் என்று அல்ல, உண்மையில் எனக்குள் வாழும் பரிசுத்த ஆவியானவர் தாமே என்னை இந்நாட்களில்  தாவீதைப் பற்றி அதிகமாய் எழுத தூண்டுகிறார் என்பதே உண்மை. தேவனுக்கு மகிமை உண்டாவதாக. அல்லேலூயா ! 

பிரியமானவர்களே, தாவீது வாழ்க்கையில் எதிரிகளினால் நெருக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையில் இருந்த போது அவர் சொல்லுகிறார் “நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன், தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்; தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன்; மாம்சமானவன் எனக்கு என்ன செய்வான்?”
என்று. அல்லேலூயா ! 

ஆம் பிரியமானவர்களே, தாவீது அன்று எதிரிகளினால் நெருக்கப்பட்டு தன்னுடைய உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையில் இருந்த  மாதிரியே, இன்று இந்த பூலோகத்தில் வாழும் ஜனங்கள் ஒவ்வொருவரும் கொரோனா தொற்றுக் கிருமியின் நிமித்தம் உயிருக்குப் பயந்து வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். 

பிரியமானவர்களே, தாவீதைப் போல் நாமும் நம்முடைய ஆபத்தான இந்நாட்களில் தேவனை நோக்கி விசுவாசத்தோடு “உம்மையே நம்பியிருக்கிறேன், உம்முடைய வார்த்தையைப் (இங்கே வார்த்தை என்னும் சொல் தேவன் கொடுக்கும் பாதுகாப்பைக் குறிக்கின்றது) புகழுவேன்; நான் கொரோனாவுக்குப் பயப்படேன், கொரோனா தொற்றுக் கிருமி எனக்கு என்ன செய்யும்? என்று அறிக்கையிடுவோம். அல்லேலூயா ! 

தேவன் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?