தேவன் மகத்துவமுள்ளவர்; நாம் அவரை அறிய முடியாது (UK Lockdown - Day 38)

இதோ, தேவன் மகத்துவமுள்ளவர்; நாம் அவரை அறிய முடியாது (யோபு 36:26)

ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில்    தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம்.

பிரியமானவர்களே, தேவன் மகத்துவமுள்ளவர்,  தேவன் சர்வ வல்லமையுள்ளவர், அவருடைய கிரியைகள் மகத்துவமானவைகளாக இருப்பதோடு, அவருடைய கிரியைகள் ஒவ்வொன்றிலும் ஒழுங்கும், கிரகமும், பரிபூரணமும், அழகும் நிறைந்திருக்கும். அவருடைய கிரியைகளை எந்த மனுஷனானாலும் பரிபூரணமாய் அறிந்து கொள்ள முடியாது, அவருடைய செயல்கள் மனுஷனுடைய அறிவுக்கும், ஞானத்துக்கும் அப்பாட்பட்டவைகளாக இருக்கின்றது. அல்லேலூயா ! 

பிரியமானவர்களே, அவரைக் குறித்தும், அவருடைய மகத்துவங்களைக் குறித்தும் நாம் நன்கு அறியாததினால் தான் நாம் சில  சமயங்களில் நம்முடைய வாழ்க்கையில் காரியங்கள் நாம் எதிர்பார்க்கும் விதத்தில் நடக்காத பட்ச்சத்தில் தேவனைக் குறை சுமத்திக் கொண்டுஇருக்கின்றோம். 

பிரியமானவர்களே, இதனால் தான் இன்று அநேகர் கொரோனாவுக்காக தேவனை குற்றம் சுமத்திக் கொண்டு இருக்கிறார்கள். 

பிரியமானவர்களே, தேவன் மகத்துவமுள்ளவர்; நாம் அவரை அறிய முடியாது, அவர் அன்பாகவே இருக்கிறபடியால் அவருடைய கிரியைகளும் அன்புடையதாக, மனுஷனுக்கு நன்மை செய்கிறதாகவே இருக்கின்றது. அல்லேலூயா ! 

தேவன் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.


Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?