மரண பயத்திலிருந்து நீங்கலாக்கி இரட்சிக்கும் கர்த்தர் (UK Lockdown - Day 17)

நான் கர்த்தரைத் தேடினேன், அவர் எனக்குச் செவிகொடுத்து, என்னுடைய எல்லாப் பயத்துக்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார் (சங் 34:4)

ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை
தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானதுக்காக எடுத்துக் கொள்ளுவோம்.

பிரியமானவர்களே, தாவீதுக்கு நெருக்கங்களும், ஆபத்துக்களும் வாழ்க்கையில் உண்டான போது, அவர் தனக்கு மரணம் வந்து விடுமோ என்று மரணத்துக்கு அஞ்சி மரண பயத்தினால் அவருடைய இருதயம் சோர்வடைந்து இருந்த போது அவர் கர்த்தரை நோக்கி கதறி அழுது கர்த்தருடைய உதவிக்காக விண்ணப்பம் பண்ணினார்.

கர்த்தரும் தாவீதுடைய  விண்ணப்பத்தைக் கேட்டு தாவீதை அவருடைய மரண பயத்திலிருந்தும், அவருக்கு உண்டான எல்லா  இக்கட்டிலிருந்தும் அவரை நீங்கலாக்கி இரட்சித்தார். 

இந்த சூழ்நிலையில் தான் தாவீது பாடுகிறார் “நான் கர்த்தரைத் தேடினேன், அவர் எனக்குச் செவிகொடுத்து, என்னுடைய எல்லாப் பயத்துக்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார்” என்று. அல்லேலூயா ! 

பிரியமானவர்களே, இந்நாட்களில்  உங்களுடைய இருதயமும் “கொரோனாவின்” நிமித்தம் மரணம் வந்து விடுமோ என்று மரண பயத்தினால் சோர்ந்து போய் இருக்கின்றதா? 

பயப்படாதீர்கள், தாவீது தனது இக்கட்டான சூழ்நிலையில் கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணின போது தாவீதை அவருடைய மரண பயத்திலிருந்து நீக்கலாக்கி இரச்சித்த கர்த்தர் உங்களையும் உங்களுடைய மரணபயத்திலிருந்து, உங்களுடைய ஆபத்தான சூழ்நிலையிலிருந்து இரட்சிக்க கர்த்தர் இயேசு கிறிஸ்து உண்மையுள்ளவராக இருக்கிறார். அல்லேலூயா 

ஆகவே பிரியமானவர்களே, நீங்களும் தாவீதைப் போல் விசுவாசத்தோடு உங்களுடைய இந்த இக்கட்டான சூழ்நிலையில் கர்த்தரை நோக்கி விண்ணப்பம் செய்யுங்கள். தாவீதுக்கு உதவி செய்த கர்த்தர் உங்களுக்கும் நிச்சயம் உதவி செய்வார். அல்லேலூயா 

கர்த்தர் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.  

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?