நான் ஒருபோதும் வெட்கம் அடையாதபடி செய்யும் (UK Lockdown - Day 11)

கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன்; நான் ஒருபோதும் வெட்கம் அடையாதபடி செய்யும் (சங் 71:1). 

ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை
தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். 

பிரியமானவர்களே, தாவீது எல்லா சூழ்நிலையிலும் கர்த்தர் மீது விசுவாசம் வைத்து அவருடைய சித்தத்தை செய்த ஒரு தேவ மனிதர். ஆனால் அவருடைய வாழ்க்கையிலும், பாடுகள், உபத்திரவங்கள், வருத்தங்கள், துன்பங்கள், நெருக்கங்கள், இருந்தது.

ஆதலால் தான் அவர் கர்த்தரை நோக்கி “கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன்; நான் ஒருபோதும் வெட்கம் அடையாதபடி செய்யும்” என்று விண்ணப்பம் பண்ணினார். 

ஆதலால் ஜீவனுள்ள தேவனை ஆராதிக்கிறவர்களின் வாழ்க்கையில் பாடுகள், உபத்திரவங்கள் இருக்காது என்று நினைக்க வேண்டாம், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே சொல்லியிருக்கிறார் “ உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் (யோவா 16:33) என்று. ஆகையால் தாவீதை போல் கர்த்தருடைய சித்தத்தை செய்து, கர்த்தரோடு நெருங்கி வாழுகின்றவர்களின் வாழ்க்கையிலும் கஷடங்கள், துன்பங்கள், நெருக்கங்கள், பாடுகள், உபத்திரவங்கள் இருக்கத்தான் செய்யும், அனால் ஆறுதலான செய்தி என்னவென்றால், தாவீதை போல் கர்த்தரையே நம்பி, அவருடைய சித்தத்தை செய்யும் பிள்ளைகளின் பாடுகளில், ஆபத்துக்களில் கர்த்தர் அவர்களோடு இருந்து அவர்கள் வாழ்க்கையில் வெட்கப்பட்டு போகாத வண்ணம் அவர்களை அவர்களுடைய ஆபத்திலிருந்து கர்த்தர் விடுதலை செய்வார். அல்லேலூயா !   

ஆகவே பிரியமானவர்களே, கர்த்தருடைய சமூகத்தில் உங்களை நீங்கள் ஆராய்ந்து பார்த்து, கர்த்தரை வேதனை படுத்தும் வழிகள் உங்களிடம் இருக்குமானால், தாமதியாது இப்போதே கர்த்தர் இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து, அவரிடம் உங்களுடைய பாவங்களை அறிக்கை செய்து, உங்களுடைய பொல்லாத வழிகளை விட்டு விலகி, அவருடைய சித்தத்தை நீங்கள் செய்யும் பட்ச்சத்தில் அவர் உங்களோடு இருந்து நீங்கள் வாழ்க்கையில் வெட்கப்பட்டு போகாத வண்ணம் உங்களை தீங்கிலிருந்து விலக்கிப் பாதுகாப்பார். அல்லேலூயா ! 

தேவன் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.  

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?