நீங்கள் நெருக்கப்படுகிற காலங்களில் கர்த்தர் உங்களுக்கு அடைக்கலமாகவும், தஞ்சமாகவும் இருக்கிறார் (UK Lockdown Day - 28)

சிறுமைப்பட்டவனுக்குக் கர்த்தர் அடைக்கலமானவர்; நெருக்கப்படுகிற காலங்களில் அவரே தஞ்சமானவர் (சங் 9:9).

ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில்    தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம்

வேதம் சொல்லுகிறது, கர்த்தர் தம்முடைய பிள்ளைகளுக்கு 

1 . அடைக்கலமானவர். 

பிரியமானவர்களே, கர்த்தர் தம்மை நம்புகிற, தம்மை அடைக்கலமாக கொண்டிருக்கிற ஜனங்களுக்கு அடைக்கலமாய் ( பாதுகாப்பாக) இருக்கிறார், கர்த்தருடைய அடைக்கலம் மிகவும் பலமுள்ளதாக இருப்பதினால் எந்த தீங்கும் அவர்களை அணுகுவதுமில்லை, சேதப்படுத்துவதுமில்லை, அவர்களை அவர் விசேஷித்த பாதுகாப்பினால் பாதுகாக்கிறார். அல்லேலூயா ! 

தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அனுகூலமான துணையுமானவர் (சங் 46:1)

2 .  தஞ்சமானவர்

பிரியமானவர்களே, கர்த்தர் தம்முடைய பிள்ளைகளுக்கு தஞ்சமானவர். அவர்கள்  நெருக்கப்படுகிற காலங்களில் அவர்களுக்கு அவர் தஞ்சமானவராக இருக்கிறபடியால் அவர்களை எந்த தீங்கும், ஆபத்தும் அணுகுவதிலலை. அல்லேலூயா ! 

ஆகவே பிரியமானவர்களே, கர்த்தருடைய பிள்ளைகளாகிய நீங்கள் வாழ்க்கையில்  நெருக்கப்படுகிற காலங்களில் கர்த்தர் உங்களுக்கு அடைக்கலமாகவும், தஞ்சமாகவும் இருக்கிறார் என்று விசுவாசிக்கும் போது  கொள்ளை நோயாகிய கொரோனா  மாத்திரமல்ல இதை விட பயங்கரமான காரியங்கள் இந்த பூலோகத்தில் நடைபெற்றாலும் அவைகள் உங்களை நெருங்குவதுமில்லை, அவைகள் உங்களை சேதப்படுத்துவதுமில்லை. அல்லேலூயா ! 

தேவன் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.  

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?