மரணமே, உன் வாதைகள் எங்கே? பாதாளமே, உன் சங்காரம் எங்கே?

ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். இன்றைக்கு கர்த்தர் என்ன பேசப் போகிறார் என்று கர்த்தருடைய வார்த்தைக்காக காத்திருந்த போது கர்த்தர் என்னோடு பேசின வார்த்தையை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். “அவர்களை நான் பாதாளத்தின் வல்லமைக்கு நீங்கலாக்கி மீட்பேன்; அவர்களை மரணத்துக்கு நீங்கலாக்கி விடுவிப்பேன்; மரணமே, உன் வாதைகள் எங்கே? பாதாளமே, உன் சங்காரம் எங்கே? (ஒசீயா 13:14). பிரியமானவர்களே, இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருக்கு விரோதமாக பாவங்கள் செய்து துன்மார்க்கமாய் வாழ்ந்து கொண்டிருந்த போது, கர்த்தர் தன்னுடைய தீர்க்கதரிசி ஓசியா மூலம் அவர்களுக்கு அழிவு வருகின்றது என்று எச்சரித்து விட்டு, இஸ்ரவேல் புத்திரரரில் கர்த்தருக்குப் பயந்து, அவருடைய கடடளைகளுக்கு, பிரமாணத்துக்கு கீழ்ப்படிந்து தேவனுடைய சித்தத்தை செய்யும் அவருடைய சில பிள்ளைகளை அவர் கருத்தில் கொண்டு ‘மரணத்தையும், பாதாளத்தையும்’ பார்த்து கர்த்தர் சவால் விட்டு இவ்வண்ணமாய் பேசுகிறார்  ‘அவர்களை (கர்த்தருக்குப் பயந்து நடப்பவர்கள்) மரணத்துக்கு நீங்கலாக்கி விடுவிப்பேன்; மரணமே, உன் வாதைகள் எங்கே? பாதாளமே, உன் சங்காரம் எங்கே?” என்று. அல்லேலூயா ஆம் பிரியமானவர்களே, இன்று Coronavirus மூலம் உலகில் மரிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகின்றது, நேற்றைய தினத்தில் எடுக்கப்படட புள்ளி விபரம். 95,000 cases and more than 3000 deaths until yesterday and in the UK 163 cases until yesterday. நீங்களும் இந்த Deadly Coronavirus இன் நிமித்தம் மரண பயத்தில் இருக்கிறீர்களா? அன்றைக்கு பாவத்தில் வாழ்ந்து கொண்டிருந்த இஸ்ரவேல் புத்திரர் மத்தியில்,  கர்த்தருக்குப்பயந்து அவருடைய பிரமானங்களைக் கைக் கொண்டு வாழ்ந்த அந்த சில இஸ்ரவேல் புத்திரருக்காக எவ்வாறு கர்த்தர் ‘மரணத்தை, பாதாளத்தை’ நோக்கி சவால் விட்டு அவர்களை அழிவில் இருந்து பாதுகாத்தாரோ, அதே போல் இன்றைக்கும் இந்த பாவம் நிறைத்த உலகில் அவருக்குப் பயந்து, அவருடைய பிரமாணங்களைக் கைக் கொண்டு, அவருடைய சித்தத்தைச் செய்து, அவருக்காக வைராக்கியமாக வாழும் அவருடைய பிள்ளைகளுக்காக மரணத்தை ஜெயித்த நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து  மரணத்தையும், பாதாளத்தையும் நோக்கி சவால் விட்டுக் கொண்டே இருக்கிறார். அல்லேலூயா ! பிரியமானவர்களே, உங்களை நீங்கள் ஆராய்ந்து பார்த்து, கர்த்தருக்கு வேதனை உண்டாக்கும் வழிகள் உங்களில் இருக்குமானால், உடனே கர்த்தருடைய சமூகத்தில் பாவ அறிக்கை செய்து மனந் திரும்பும் போது உங்களுக்காகவும் கர்த்தர் மரணத்தை, பாதாளத்தை நோக்கி சவால் விட்டு உங்களையும் இந்த Coronavirus  போன்றதான கொள்ளை நோய்களுக்கும், ஆபத்துக்களுக்கும் விலக்கிப் பாதுகாப்பார். அல்லேலூயா ! தேவன் இயேசு உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.  

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?