தேவனே என் இரட்சிப்பு; நான் பயப்படாமல் நம்பிக்கையாயிருப்பேன்

இதோ, தேவனே என் இரட்சிப்பு; நான் பயப்படாமல் நம்பிக்கையாயிருப்பேன்; கர்த்தராகிய யேகோவா என் பெலனும், என் கீதமுமானவர்; அவரே எனக்கு இரட்சிப்புமானவர் (ஏசா 12:2)

ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை
தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனம் தான் தேவன் எங்களது ஊழியத்துக்கு கொடுத்ததான “THEME“. இந்த Theme எவ்வாறு உருவானது என்பதை சுருக்கமாக தேவனுடைய நாமம் மகிமைப்படும் படியாக கூற விரும்புகின்றேன்.

பிரியமானவர்களே, நானும், என் மனைவியும் இலங்கை தேசத்திலே  மனிதனுடைய கைகளினால் செய்யப்பட்டதான விக்கிரகங்களையும், சொரூபங்களையும், பரிசுத்தவான்களையும் எங்களுடைய கடவுளாக  தெரிந்து கொண்டு அவர்களுக்கு எங்களுடைய துதிகளையும், மகிமைகளையும், ஆராதனைகளையும் செலுத்தி வாழ்ந்து  கொண்டிருந்தோம்.

நாங்கள்இலங்கை தேசத்திலிருந்து இங்கிலாந்துக்கு வரும் போது  என்னுடைய மனைவிக்கு Thiroxine இருந்தது (18 வயதிலிருந்து இருந்து, திருமணம் செய்யும் போது என் மனைவிக்கு 24 வயது). இங்கிலாந்துக்கு வந்த பிறகு GP என் மனைவிக்கு “Throxine” இருந்ததினால், என் மனைவி conceive பண்ணுவதட்க்கான வாய்ப்பு மிகவும் குறைவாக இருப்பதாகக் கூறியதுடன், Throxine யை முழுமையாகக் குணப்படுத்த முடியாதென்றும், Thiroxine level இப்போது இருக்கும் நிலைமையிலிருந்து இன்னும் அதிகரிக்காமல் கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டுமானால்  Throxine tablet  யை ஒவ்வொரு நாளும்  பாவிக்க வேண்டும் என்று கூறியதோடு, ஆறு மாதங்களுக்கு ஒரு தடவை Thiroxine level யை பரிசோதிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்கள், (இவ்வாறு தான் இலங்கையில் நாங்கள் இருந்த போதும் மருத்துவர்கள் சொல்லியிருந்தார்கள்) ஆனால்  என் மனைவியோ தேவன் இயேசு மீது அவருடைய முழு விசுவாசத்தையும் வைத்து மருத்துவர்களால் கொடுக்கப்பட்ட எந்த குளிசைகளையும் பாவிப்பதை நிறுத்தி விட்டார், நானும் இது முட்டாள் தனமான காரியம் மருத்துவர்கள் கொடுத்த ஆலோசனையின் படி செய்யுமாறு சொல்லியிருந்தேன். இது நடக்கும் போது நாங்கள் இலங்கை தேசத்தில் இருந்து இங்கிலாங்க்குக்கு வந்து ஆறு மாதங்கள் கூட பூர்த்தியாகவில்லை என்று நினைக்கிறேன், அந்த நாட்களில் நாங்கள் ஆவிக்குரிய சபை ஒன்றுக்கு சென்று கொண்டிருந்தாலும் இரசிக்கப்படவில்லை (ஆண்டவர் இயேசுவை எங்களுடைய  சொந்த இரச்சகராகவும், ஆண்டவராகவும் எங்களுடைய வாழ்க்கையில் ஏற்றுக் கொள்ளவில்லை).

ஒரு நாள் GP இடம் இருந்து என் மனைவிக்கு கடிதம் ஒன்று  வந்திருந்தது, அந்த கடிதத்தில் மனைவியின் Thiroxine level யை பரிசோதிக்க வேண்டியிருப்பதால் வைத்தியசாலைக்கு வரும் படி கூறப்பட்டிருந்தது. மனைவியோ அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்ட திகதியில் மருத்துவரை சென்று பார்க்காமல் கடிதத்தை புறக்கணித்து விட்டார். ஆகவே, அவர்களிடம் இருந்து எச்சரிப்புக் கடிதம் வந்ததோடு, புதிய திகதி ஒன்றைக் குறிப்பிட்டு, nurse யை  சந்திக்கும் படியும் கேட்டிருந்தார்கள், சந்திக்காத பட்ச்சத்தில் என் மனைவியை அவர்கள் Gp யில் இருந்து நீக்கிப் போட்டு விடுவார்கள் என்றும் கூறியிருந்தார்கள். நான் அந்த கடிதத்தைப் பார்த்து பயந்து, நான் என் மனைவியைக் கூட்டிக் கொண்டு வைத்திய சாலைக்கு சென்றேன், அங்கே அவர்கள் என் மனைவியின் இரத்ததைப் பரிசோதித்த அணிப்பினார்கள் ,என்ன ஆச்சரியம், ஒன்றுமே எனக்குப் புரியவில்லை, blood report நெகடிவாக இருந்தது. (மூன்று, நாட்களுக்கு பிறகு)

ஆண்டவர் இயேசு என்னுடைய மனைவி அவர் மீது வைத்திருந்த விசுவாசத்தை கனப்படுத்தியிருந்தார், அந்த நேரத்தில் எனக்கு ஒரு வசனமும் தெரியாது, ஆனால் இப்பொது என்னால் புரிந்து கொள்ள முடிகின்றது, தேவனுடைய வசங்கள் ஒவ்வொன்றும் எவ்வளவு உண்மை என்று. “விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும் (எபிரேயர் 11:6)  அல்லேலூயா !

பிரியமானவர்களே, நம்முடைய ஆண்டவர் இயேசுவினால் முடியாத காரியம் ஒன்றுமில்லை, அவர் செய்கின்ற அட்புதங்கள் இயறகைக்கு அப்பாட்பட்டதாக இருக்கின்றது. அது மாத்திரமல்ல ஆண்டவர் இன்னும் நிறைய அட் புதங்களை எங்களுடைய வாழ்க்கையில் செய்திருக்கிறார் , செய்து கொண்டிருக்கிறார் இவை எல்லாவற்றையும் விரிவாக நான் எழுதப் போகிற புத்தகத்தில் குறிப்பிட இருக்கின்றேன்.

இங்கிலாந்து தேசத்துக்கு வந்து பத்து மாதங்களில் நாங்கள் சென்று கொண்டிருந்த சபையின் போதகருக்கு நாங்கள் தேவனுடைய நீதியை (ஞானஸ்நானம்) நிறைவேற்ற இருப்பதாக கூறினோம், போதகரும் எங்களுக்காக ஞானஸ்நான ஆராதனையை ஒழுங்குபடுத்தி கொடுத்தார், அந்த நாளில் நாங்கள் முழுக்கு ஞானஸ்நானத்தை பெற்று தேவ நீதியை நிறைவேற்றினோம், அதன் பிறகு தேவன் என் மனைவியின் கர்ப்பத்தை ஆசிர்வதித்ததினால் அவள் கர்ப்பம் தரித்து  அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தாள்.

பாவத்தில் வாழ்ந்த எங்களை தேவன் இரட்சித்தத்துக்காகவும், தேவன் என் மனைவியின் கர்ப்பத்தை ஆசிர்வதித்ததுக்கு நன்றி செலுத்தும் வண்ணமாகவும் தேவன்  எங்களுக்கு அருளிய முதலாவது மகனுக்கு  “ தேவன் என் இரட்சிப்பு” என்னும் அர்த்தத்தை கொண்ட எபிரேகிய (Hebrew ) பெயராகிய Elisha வை எங்களது மகனுக்கு பெயர் சூட்டினோம். அல்லேலூயா !

பிரியமானவர்களே, கிறிஸ்து அவருடைய பிள்ளைகளாகிய எங்களை இரட்சித்தது மாத்திரமல்ல, எங்களை அவர் ஆபத்திலிருந்து பாதுகாக்கிறவராகவும் இருக்கிறார். அல்லேலூயா  !

ஆகவே நாங்கள் “தேவனே என் இரட்சிப்பு; நான் பயப்படாமல் நம்பிக்கையாயிருப்பேன்” என்று பாடி அவருடைய நாமத்தை மகிமைப் படுத்தவேண்டும். அல்லேலூயா !

பிரியமானவர்களே, அதுமாத்திரமல்ல கர்த்தராகிய யேகோவா நம் பெலனும், நம் கீதமுமானவராகவும்” இருக்கிறார். “யேகோவா” என்னும் பெயருக்கு “ நித்தியமானவர்” அல்லது “மாறாதவர்” என்று பொருள்.

பிரியமானவர்களே, நம்முடைய தேவன் நமக்கு இரச்சகராகவும், நம்முடைய பெலனாகவும், நம்முடைய கீதமுமானவுமாகவும் இருக்கிறபடியால், ஏசாயா தீக்கதரிசி  போல் நாமும் நம்முடைய மாறாத, நித்தியமான   தேவனே நோக்கி “நீரே என் இரட்சிப்பு; நான் உமக்குள்  பயப்படாமல் நம்பிக்கையாயிருப்பேன்; கர்த்தராகிய யேகோவா நீர் என் பெலனும், என் கீதமுமானவர்; நீரே எனக்கு இரட்சிப்புமானவர்” என்று பாடி அவருடைய நாமத்தை மகிமைப்படுத்த வேண்டும். அல்லேலூயா !

தேவன் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?