அதிசயங்களைச் செய்கிற தேவன் நீரே

நம்முடைய தேவனைப்போலப் பெரிய தேவன் யார்? அதிசயங்களைச் செய்கிற தேவன் நீரே; ஜனங்களுக்குள்ளே உம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணினீர்  (சங் 77:13&14). 

ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம்.

பிரியமானவர்களே, வாழ்க்கையில் நமக்கு பாடுகள், உபத்திரவங்கள், நிந்தைகள், வருகின்ற போது நாம் தேவனுடைய மகத்துவங்களையும், அவருடைய வல்லமையையும், மற்றும் அவர் நமக்கு கடந்த நாட்களில் செய்த நன்மைகளையும், அதிசயங்களையும் சிந்தித்துப் பார்த்து, அவருடைய நாமத்தை துதித்து, ஆராதித்து  அவருக்கு நாம் நன்றி செலுத்த வேண்டும். அல்லேலூயா ! 

நம்முடைய தேவனைப்போலப் பெரிய தேவன் யார்? வேதம் சொல்லுகிறது “அவர் பூமியைத் தம்முடைய வல்லமையினால் உண்டாக்கி, பூச்சக்கரத்தைத் தம்முடைய ஞானத்தினால் படைத்து, வானத்தைத் தம்முடைய அறிவினால் விரித்தார்” (எரேமி 10 : 12 ) என்று. தேவன் அவ்வளவு பெரியவர். அவருடைய செயல்களை நாம் மட்டுப்படுத்தி விட முடியாது, அவர் மனிதனுடைய சிந்தைக்கும், ஞானத்துக்கும் அப்பாட்பட்ட காரியங்களை செய்கிறவர், அவர் தன்னுடைய பிள்ளைகளுடைய வாழ்க்கையில் அட்புதங்களையும், அதிசயங்களையும் செய்து அவருடைய வல்லமைகளை ஜனங்களுக்கூடே விளங்கப் பண்ணுகிறவர்,

வேதம் சொல்லுகிறது, தேவன் வனாந்தரத்தைத் தண்ணீர்த் தடாகமும், வறண்ட பூமியை நீர்கேனிகளுமாகிறவர் (ஏசா 41 : 18 ). என்று, அவரால் முடியாத காரியம் என்று ஒன்றுமே இல்லை, அவர் அதிசயங்களைச் செய்கிறவர்.  அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு (ஏசா 9 : 6 )
பிரியமானவர்களே, நீங்கள் எல்லா சூழ்நிலைகளிலும் தேவனை நம்பி அவரைச் சார்ந்து வாழும் போது தேவன் உங்களுடைய வாழ்க்கையிலிலும் அட்புதங்களை செய்து அவருடைய நாமத்தை ஜனங்களுக்குளே விளங்கப்பண்ணுவார். அல்லேலூயா !

தேவன் இயேசு உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. 

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?