நீடித்த நாட்களால் திருப்திபடுத்தும் தேவன்

நீடித்த நாட்களால் அவனைத் திருப்தியாக்கி என், இரட்சிப்பை அவனுக்குக் காண்பிப்பேன்.(சங் 91 :16). என்னாலே உன் நாட்கள் பெருகும்; உன் ஆயுசின் வருஷங்கள் விருத்தியாகும்" (நீதி 9:11)

ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள இரண்டு வசனங்களையும் இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுப்போம்.

பிரியமானவர்களே, தேவன் மனிதனை சிருஷ்ட்டித்து மாத்திரமல்ல, அவர் அவர்களை நீடித்த நாட்களால் திருத்திபடுத்த வேண்டும் என்றும் ஆசைப்படுகிறார். அல்லேலூயா !

வேதத்தில் ஒரு சம்பவம் எழுதப்பட்டிருக்கிறது, எசேக்கியால் ராஜா மரணத்துக்கேதுவான வியாதிப்பட்டு மரணப் படுக்கையில் இருந்த போது அவர் கர்த்தரை விசுவாசித்து, அவரை  நோக்கி ஜெபித்த போது கர்த்தர் அவன் மீது மனமிரங்கி, அவனுடைய அயூசு நாட்களில் இன்னுமாக 15 வருடங்களைக் கூட்டிக் கொடுத்தார் என்று.

ஆம் பிரியனானவர்களே, உங்களுடைய வாழ்க்கையிலிலும் ஆயுசின் வருஷங்கள் விருத்தியாக வேண்டுமென்றால் (நீதி 9:11) எசேக்கியா ராஜா போல் நீங்களும் கர்த்தரையே சார்ந்து, அவர் மீது நம்பிக்கை வைத்து அவருடைய சித்தத்தை நீங்கள் செய்யும் போது, கர்த்தர் உங்களை ‘இரவில் உண்டாகும் பயங்கரத்துக்கும், பகலின் பறக்கும் அம்புக்கும், இருளில் நடமாடும் கொள்ளைநோய்க்கும், மத்தியானத்தில் பாழாக்கும் சங்காரத்துக்கும் (சங் 91:5-6) விலக்கிப் பாதுகாத்து நீடித்த நாட்களால் உங்களைத் திருப்தியாக்கி அவருடைய, இரட்சிப்பை உங்களுக்குக் காண்பிப்பார். அல்லேலூயா ! 

தேவன் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. 

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?