விண்ணப்பத்துக்கு பதில் கொடுக்கும் கர்த்தர் (UK Lockdown - Day 52)

உமது முகத்தை உமது அடியேனுக்கு மறையாதேயும்; நான் வியாகுலப்படுகிறேன், எனக்குத் தீவிரமாய்ச் செவிகொடுத்தருளும் (சங் 69:17)

ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில்  தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம்.

பிரியமானவர்களே, தாவீது இந்த 69 வது சங்கீதத்தை தன்னுடைய இக்கட்டான சூழ்நிலையில் கர்த்தரை நோக்கி  பாடியிருக்கிறார். 

பிரியமானவர்களே, கர்த்தர் தன்னை தன்னுடைய  நெருக்கங்களிலிருந்து விடுவிக்குமாறும்,  பாதுகாத்துக் கொள்ளுமாறும் அவர் கர்த்தருடைய சமூகத்தில் “உமது முகத்தை உமது அடியேனுக்கு மறையாதேயும்; நான் வியாகுலப்படுகிறேன், எனக்குத் தீவிரமாய்ச் செவிகொடுத்தருளும்” என்று விண்ணப்பம் பண்ணுகிறார். அல்லேலூயா ! 

ஆம் பிரியமானவர்களே, இன்று இந்த பூலோகத்தில் வாழும் நாம் எல்லாரும் கொரோனா கிருமியின் நிமித்தம்  நெருக்கத்திலிருக்கிறோம், பிரியமானவர்களே நாமும் தாவீதைப் போல் கர்த்தருடைய சமூகத்தில் கர்த்தரை நோக்கி “உமது முகத்தை உமது அடியேனுக்கு மறையாதேயும்; நான் வியாகுலப்படுகிறேன், எனக்குத் தீவிரமாய்ச் செவிகொடுத்தருளும்” என்று விண்ணப்பம் பண்ணுவோமா?

அன்று தாவீதின் விண்ணப்பத்தை கேட்டு அவரை அவருடைய எதிரிகளின் கைக்கு விலக்கிப் பாதுகாத்த கர்த்தர் நிச்சயமாய் இன்று உங்களையும், என்னையும் கொரோனாவுக்கும், மற்றும் நம்முடைய எல்லாத் தீங்குக்கும் விலக்கிப் பாதுகாக்க கர்த்தர் வல்லமையுள்ளவராகவும், உண்மையுள்ளவராகவும் இருக்கிறார். அல்லேலூயா ! 

கர்த்தர் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென். 

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?