உன்னை இரட்சிப்பதற்காகவும், உன்னைத் தப்புவிப்பதற்காகவும், நான் உன்னுடனே இருக்கிறேன் (UK Lockdown - Day 39)

உன்னை இரட்சிப்பதற்காகவும், உன்னைத் தப்புவிப்பதற்காகவும், நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் (எரேமி 15:20)

ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

பிரியமானவர்களே, 2020 ம் ஆண்டிலும் ஐந்தாவது மாதத்துக்குள் கடந்து வர தேவன் பாராட்டின கிருபைக்காக தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன், அவர் எங்களை இந்த வருஷத்திலும் நான்கு மாதங்கள் ஆபத்துக்களுக்கு விலக்கிப் பாதுகாத்து இருக்கிறார். கர்த்தர் நல்லவர். அல்லேலூயா ! 

பிரியமானவர்களே, இந்த புதிய மாதத்தில் கர்த்தர் உங்களைப் பார்த்துச் சொல்லுகிறார் “உன்னை இரட்சிப்பதற்காகவும், உன்னைத் தப்புவிப்பதற்காகவும், நான் உன்னுடனே இருக்கிறேன்” என்று. அல்லேலூயா ! 

பிரியமானவர்களே, உன்னை இரட்சிப்பதற்காகவும், உன்னைத் தப்புவிப்பதற்காகவும், நான் உன்னுடனே இருக்கிறேன் என்று வாக்குக் கொடுத்த தேவன் தனது வாக்குத்தத்தத்தில் உண்மையுள்ளவராக இருக்கிறார். அல்லேலூயா ! 

பிரியமானவர்களே, கர்த்தர் உங்களை நான்கு மாதங்கள் கொரோனாவுக்கு  விலக்கிப் பாதுகாத்து உங்களை தப்புவித்திருக்கிறார். ஆகவே இந்த ஆபத்துக் காலத்தில் சோர்ந்து போகாமல் தொடர்ந்தும் கர்த்தரை விசுவாசியுங்கள் அவர் உங்களை எல்லா ஆபத்துக்கும் விலக்கிப் பாதுகாக்க உண்மையுள்ளவராக இருக்கிறார். அல்லேலூயா 

தேவன் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.


Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

பெலத்தையும், சக்தியையும் தரும் தேவன்