கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது (UK Lockdown - Day 56)

கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது, அவருடைய செவிகள் அவர்கள் வேண்டுதலுக்குக் கவனமாயிருக்கிறது (1 பேது 3:12)

ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில்  தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம்.

பிரியமானவர்களே, நாம் கிறிஸ்து மேல்  வைத்திருக்கிற விசுவாசத்தினால் நீதிமானாக்கப்பட்டிருக்கிறோம். அல்லேலூயா !

பிரியமானவர்களே, வேதம் சொல்லுகிறது, “கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது, அவருடைய செவிகள் அவர்கள் வேண்டுதலுக்குக் கவனமாயிருக்கிறது” என்று. 

பிரியமானவர்களே, இந்த வசனத்தை நான்  இரண்டு பகுதிகளாக நான் பிரிக்க விரும்புகின்றேன் 

(1 ) கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது.

(2 ) கர்த்தருடைய செவிகள் நீதிமான்களுடைய வேண்டுதலுக்குக் கவனமாயிருக்கிறது.

1 ) கர்த்தருடைய கண்கள் அவர்களுடைய பிள்ளைகளாகிய நம்மேல் நோக்கமாயிருக்கிறது.
பிரியமானவர்களே, கர்த்தர் தம்முடைய கண்களை எப்போதும் அவருடைய பிள்ளைகளாகிய நம் மீது வைத்து எந்த தீங்கும், எந்த பொல்லாப்பும் நம்மை அணுகாத வண்ணம் அவர் நமக்கு விசேஷித்த பாதுகாப்பை ஒவ்வொரு கனப்பொழுதும் கொடுத்து வருகிறார். அல்லேலூயா ! 

2 ) கர்த்தருடைய செவிகள் நீதிமான்களுடைய வேண்டுதலுக்குக் கவனமாயிருக்கிறது
பிரியமானவர்களே, கர்த்தர் தம்முடைய பிள்ளைகளின் விண்ணப்பத்துக்கும், வேண்டுதலுக்கும் செவி கொடுக்கிறார். அல்லேலூயா ! 

தேவன் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. 

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?