ஒருவர் பாரத்தை ஒருவர் சுமப்பதே கிறிஸ்துவின் பிரமாணம் (UK Lockdown - Day 61)

ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து, இப்படியே கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை நிறைவேற்றுங்கள் (கலா 6:2)

ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில்  தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம்.

பிரியமானவர்களே, தேவனுடைய பிள்ளைகளாகிய நாம் ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து, கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை நிறை வேற்ற வேண்டும் என்று வேதம் நமக்கு ஆலோசனை கூறுகின்றது. அல்லேலூயா ! 

ஆம் பிரியமானவர்களே, கிறிஸ்துவின் பிரமாணம் அன்பின் பிரமாணம். கிறிஸ்துவினுடைய சீஷர்களாகிய நாம் அவருடைய அடிச் சுவடுகளை பின்பற்ற வேண்டும். அடுத்தவர்கள் பாடுகளுக்கூடாய், வேதனைகளுக்கூடாய் கடந்து செல்லும் போது தேவனுடைய பிள்ளைகளாகிய நாம் அவர்கள் அனுபவிக்கும் பாடுகளை கண்டும் காணாதவர்களைப் போல் இருந்து விடாமல், அவர்களை அன்போடும், கருசனையோடும் விசாரித்து நம்மால் முடிந்த அளவு அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து இயேசு கிறிஸ்துவினுடைய  பிரமாணமாகிய அன்பின் பிரமாணத்தை நிறை வேற்ற வேண்டும். அல்லேலூயா ! 

தேவன் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. 

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?