நீரே என் நம்பிக்கை (UK Lockdown - Day 43)

இப்போதும் ஆண்டவரே, நான் எதற்கு எதிர்பார்த்திருக்கிறேன்? நீரே என் நம்பிக்கை (சங் 39:7). 

ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில்    தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம்.

பிரியமானவர்களே, தாவீது மிகவும் நெருக்கத்தில் இருந்த போது அவர் தேவனை நோக்கி ஜெபித்தார் ஆனால் அவர் எதிர்பார்த்த சில காரியங்கள் வாழ்க்கையில் ஏமாற்றத்தையே கொண்டு வந்தது, அவ்வேளையில் தான் அவர் தேவனை நோக்கி சொல்லுகிறார் “இப்போதும் ஆண்டவரே, நான் எதற்கு எதிர்பார்த்திருக்கிறேன்? நீரே என் நம்பிக்கை” என்று. 

ஆம் பிரியமானவர்களே, தாவீதை போல் உங்களுக்கும் வாழ்க்கையில் அனுபவம் இருந்திருக்கலாம், நீங்கள் நம்பின, எதிர்பார்த்த காரியங்கள் உங்களுடைய வாழ்க்கையில் இன்னும் நிறைவேறாமலோ அல்லது ஏமாற்றத்தை கொண்டு வந்திருக்கலாம், கர்த்தர் இன்னும் கொரோனாவை அழிக்காது இருக்கலாம், ஆதலால் சோர்ந்து போகாதீர்கள். நீங்களும் தாவீதை போல் சோர்ந்து போகாமல் கர்த்தர் மீது தொடர்ந்து உங்களுடைய நம்பிக்கையை வைத்திருங்கள், அவருடைய வேளை வரும் போது காரியங்களை வாய்க்கப் பண்ணுவார், ஒருவேளை இப்போது நீங்கள் வாழ்க்கையில் தோற்றுப் போனது போல் இருக்கலாம், ஆனால் விசுவாசியுங்கள் கர்த்தர் கை விட மாட்டார். அல்லேலூயா ! 

தேவன் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?