தேவன் இயேசுவை நம்பின யாரும் வெட்கப்பட்டு போனதில்லை (UK Lockdown - Day 57)

அவரை (இயேசு கிறிஸ்துவை) விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லையென்று வேதம் சொல்லுகிறது (ரோம 10:11)

ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில்  தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம்.

பிரியமானவர்களே, இயேசு கிறிஸ்துவே ஆண்டவர் என்றும், அவரே இரச்சகர் என்றும் விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லையென்று வேதம் சொல்லுகிறது. 

பிரியமானவர்களே, தேவனை விசுவாசிக்கிற ஒருவரும் வெட்கப்பட்டுப் போனதில்லை. “நீங்கள் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் வெட்கப்படாமலும் கலங்காமலும் இருப்பீர்கள்” என்று  (ஏசா 45:17 இல் வாசிக்கிறோம். அல்லேலூயா ! 

பிரியமானவர்களே, உங்களுடைய சூழ்நிலையைப் பார்க்கும் போது நீங்கள் வெட்கப்பட்டு போனது போல் தோன்றலாம், ஆனால் அது உண்மையல்ல, தேவன் அவரை நம்பின ஒருவரையும் வெட்கப்பட்டு போக விட்டதில்லை. 

ஆகவே நீங்கள் உங்களுடைய இந்த நீளக்கமான சூழ்நிலையில் தொடர்ந்து தேவன் இயேசு கிறிஸ்துவை விசுவாசியுங்கள், தேவன் உங்களுடைய நெருக்கமான சூழ்நிலையை மாற்றி உங்களை விசாலத்தில் வைக்க அவர் உண்மையுள்ளவராக இருக்கிறார். அல்லேலூயா ! 

தேவன் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.  

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?