கர்த்தர் நமது பெலனும், அரணான அடைக்கலமுமாயிருக்கிறார் (UK Lockdown - Day 67)

கர்த்தர் அவர்களுடைய பெலன்; அவரே தாம் அபிஷேகம்பண்ணினவனுக்கு அரணான அடைக்கலமானவர் (சங் 28:8)

ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில்  தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம்.

பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வசனத்தை இரண்டு பகுதிகளாக பிரிக்க விரும்புகின்றேன். 

பிரியமானவர்களே, கர்த்தர் இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து அவரை இரச்சகராகவும், ஆண்டவராகவும் ஏற்றுக் கொண்ட ஜனங்களுக்கு, கர்த்தர் இயேசு கிறிஸ்து 

1 .  பெலனாக இருக்கிறார் 

2 . அரணான அடைக்கலமாக இருக்கிறார்
அல்லேலூயா ! 

பிரியமானவர்களே, ஆண்டவர் இயேசு கிறிஸ்துவே  நமக்கு பெலனாகவும், அரணான அடைக்கலமாகவும் இருக்கும் போது நாம் எதுக்கு நமக்கு எதிரிடையாக இருக்கும் சூழ்நிலையைப் பார்த்து பயப்பட வேண்டும், கர்த்தர் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளுவார். அல்லேலூயா !

தாவீதுக்கு அவருடைய ஆபத்து வேளைகளில் பெலனாகவும், அரணான அடைக்கலமாக இருந்த கர்த்தர் நிச்சயமாக அவருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து அவரை ஆண்டவராகவும், இரச்சகராகவும் ஏற்றுக் கொண்ட அவருடைய பிள்ளைகள் அனைவருக்கும் ஆபத்து வேளைகளில் பெலனாகவும், அரணான அடைக்கலமாக இருப்பார் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. அல்லேலூயா !

கர்த்தர் இயேசு கிறிஸ்துவை தொடர்ந்து விசுவாசியுங்கள். அல்லேலூயா ! 

கர்த்தர் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?