நீங்கள் பிழைக்கும்படிக்குத் தீமையை அல்ல, நன்மையைத் தேடுங்கள் (UK Lockdown - Day 53)

நீங்கள் பிழைக்கும்படிக்குத் தீமையை அல்ல, நன்மையைத் தேடுங்கள்; அப்பொழுது நீங்கள் சொல்லுகிறபடியே சேனைகளின் தேவனாகிய கர்த்தர் உங்களோடே இருப்பார் (ஆமோ 5:14)

ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில்  தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம்.

பிரியமானவர்களே, கர்த்தருடைய தீர்க்கதரிசி ஆமோஸ் இஸ்ரவேல் ஜனங்களுக்கு அவர்கள் பிழைக்கும் படி இங்கே ஒரு ஆலோசனையைக் கொடுக்கிறார் “நீங்கள் பிழைக்கும்படிக்குத் தீமையை அல்ல, நன்மையைத் தேடுங்கள்; அப்பொழுது நீங்கள் சொல்லுகிறபடியே சேனைகளின் தேவனாகிய கர்த்தர் உங்களோடே இருப்பார்” என்று. அல்லேலூயா ! 

பிரியமானவர்களே, நன்மையைத் தேடுவது என்பது, கள்ளம் கபடமில்லாத உங்களுடைய ஜீவியத்தில் இருக்க வேண்டியதான உண்மை, நேர்மை, கண்ணியம், நீதி, அன்பு என்பவைகளைக் குறிக்கின்றது. நீங்கள் எந்த காரியத்தை செய்தாலும் அந்த காரியத்தில் நீதி, நேர்மை, உண்மை இருக்க வேண்டும். பிறருக்கு நன்மை செய்யும் போது பிரதி பலனை எதிர்பாராமல் அன்போடு முழு மனதோடு செய்ய வேண்டும். அவ்வாறு நீங்கள் தீமையை வெறுத்து ஒவ்வொரு காரியத்திலும் நன்மையைத் தேடும் போது கர்த்தரும் உங்களுடைய வாழ்க்கையில் பிரியப்படுவதோடு உங்களையும், உங்கள் குடும்பத்தையும் உங்களுடைய நீதி, நேர்மை, உண்மை, அன்பின் நிமித்தம் எல்லா தீங்குக்கும் பாதுகாத்துக் கொள்ளுவார். அல்லேலூயா !

அதுமாத்திரமல்ல ஆதி 18 இல் வாசிக்கின்ற பிரகாரம் உங்கள் நீதியின் நிமித்தம், கர்த்தர் நீங்கள் வாழுகின்றதான உங்கள் பட்டணத்தையும் தேசத்தையும் எல்லா அழிவிலிருந்தும் பாதுகாத்துக் கொள்ள அவர் உண்மையுள்ளவராக இருக்கிறார். அல்லேலூயா !

அப்பொழுது ஆபிரகாம்: ஆண்டவருக்குக் கோபம் வராதிருப்பதாக; நான் இன்னும் இந்த ஒருவிசைமாத்திரம் பேசுகிறேன்; பத்து நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: பத்து நீதிமான்கள் நிமித்தம் தேசத்தை அழிப்பதில்லை என்றார். (ஆதி 18:32)

ஆகவே பிரியமானவர்களே, கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் அழிவிலிருந்து, கொரோனாவிலிருந்து பிழைத்திருக்க  நன்மையையே தேடுவோம். அல்லேலூயா! 

தேவன் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?