Posts

Showing posts from January, 2020

Be strong in the Lord and in the power of His might

Image
My brethren, be strong in the Lord and in the power of His might (Eph 6:10)

கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள்.

Image
என் சகோதரரே, கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள் (எபே 6:10 ). ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, இந்த பூலோகத்தில் நாம் அநேக போராட்டங்களை சந்திக்க வேண்டியதாக இருக்கின்றது, ஆகவே நமக்கு நேரிடுகிற அத்தனை போராட்டங்களிலும் நாம் ஜெயத்தைப் பெறுவதட்கு நாம் கர்த்தராகிய இயேசுவிலும், அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்பட வேண்டியதாய் இருக்கின்றது. கர்த்தரே நமது பெலன், அவர் ஒருவரே நமக்குப் போதுமானவர். நாம் வாழ்க்கையில் போராட்டங்களை சந்திக்கும் போது அவற்றை மேட்கொண்டு முன்னேறிச் செல்வதட்க்கு கர்த்தருடைய பெலன் நமக்குத் தேவைப்படுகின்றது. அதனால் தான் தேவனுடைய வசனம் நம்மை உட்ச்சாகப்படுத்துகிறது ‘கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள்’ என்று. கர்த்தரிலும், அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் நாம் பெலப்படும் போது நாம் நமக்கு ஏட்படுகின்றதான போராட்டத்தில் ஜெயத்தைப் பெற்று வாழ்க்கையில் முன்ன

The Lord is my strength, my rock, my fortress, my Savior, my refuge and my Tower

Image
I will love You, O Lord, my strength. The Lord is my rock and my fortress and my deliverer /saviour; My God, my tower, in whom I will trust; My shield/ buckler and the horn of my salvation, my stronghold/ high tower/ high refuge (Ps 18:1-2)

கர்த்தரே என் பெலன், கன்மலை, கோட்டை, இரட்சகர், அடைக்கலம், துருகம்

Image
என் பெலனாகிய கர்த்தாவே, உம்மில் அன்புகூருவேன். கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகரும், என் தேவனும், நான் அடைக்கலம் புகும் என் துருகமும், என் கேடகமும், என் இரட்சணியக் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமுமாயிருக்கிறார் (சங் 18 :1- 2 ). ஆண்டவரும், இரட்சகருமாகிய  இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள இரண்டு வேத வசனங்களையும் இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, தாவீது எதிரிகளினால் நெருக்கப்படும் போது கர்த்தர் தாமே தாவீதுக்கு நல்ல அடைக்கலமாக, பாதுகாப்பாக இருந்து அவருக்கு வாழ்க்கையில் ஜெயத்தைக் கொடுத்திருந்தார். அதனால் கர்த்தருக்கு நன்றி செலுத்தும் வண்ணமாக தாவீது இந்த சங்கீதத்தை இயற்றியிருக்கிறார். இந்த சங்கீதத்தில் அவர் பயன்படுத்தியிருக்கிற ஒவ்வொரு வார்த்தைகளும் வாழ்க்கையில் யாராவது நெருக்கங்களுக்கூடாக கடந்து செல்லும் போது அவர்களை பெலப்படுத்துகிற, உட்ச்சாகப்படுத்துகிற, அவர்களை விசுவாசத்தில் வர்த்திக்கப் பண்ணுகிற   வார்த்தைகளாக இருக்கின்றன. அல்லேலூயா !  நாமும் தாவீதைப் போல் கர்த்தரை

When the LORD is on my side, what can man do unto me?

Image
The Lord is on my side; I will not fear. What can man do to me? (Ps 118:6)

கர்த்தர் என் பட்ச்சத்தில் இருக்கும் போது மனுஷன் எனக்கு என்ன செய்வான்?

Image
கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார், நான் பயப்படேன்; மனுஷன் எனக்கு என்ன செய்வான்?(சங் 118:6). ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, 118 ஆவது சங்கீதத்தை யார் எழுதினார் என்பதைக் குறித்து வேத பண்டீதர்களுக்கிடையில் இரு விதமான கருத்து  வேறுபாடுகள் காணப்படுகின்றது, பெரும்பாலானோர் இந்த சங்கீதத்தை தாவீது ராஜாவே பரிசுத்த ஆவியின் உதவியுடன் எழுதியிருக்கிறார் என்று கூறுகிறார்கள். இந்த சங்கீதத்தை எழுதிய சங்கீதக்காரன் வாழ்க்கையில் பல விதமான நெருக்கங்களுக்கூடாய், பாடுகளுக்கூடாய் கடந்து சென்றிருந்தார், அவருக்கு எல்லாப் பக்கங்களில் இருந்தும் மனுஷர்களால் நெருக்கங்கள் உண்டாயிற்று. அந்த சூழ்நிலையில் தான் அவர்  இந்த சங்கீதத்தை பரிசுத்த ஆவியின் ஏவுதலினால் எழுதியிருக்கிறார். அவர் சொல்லுகிறார் ‘ கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார், நான் பயப்படேன்; மனுஷன் எனக்கு என்ன செய்வான்? ‘ என்று. வாவ் என்னதொரு விசுவாசம் அவர் கர்த்தரிடத்தில் வைத்திர

Ask God anything according to his will

Image
Now this is the confidence that we have in Him, that if we ask anything according to His will, He hears us (1 John 5:14)

எதையாகிலும் தேவனுடைய சித்தத்தின்படி கேளுங்கள்

Image
நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம் (1யோவா 5:14). ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, முதலில் நீங்கள் உங்களுடைய வாழ்க்கையில் ‘தேவனுடைய சித்தம்’  என்ன என்பதை அறிந்திருக்க வேண்டும், அதன் பிறகு நீங்கள் அவருடைய  சித்தத்தின்படி அவரிடத்தில் குறித்த காரியத்துக்காக இயேசுவின் நாமத்தின் மூலமாய் விசுவாசத்தோடு விண்ணப்பம் பண்ண வேண்டும். அவ்வாறு நீங்கள் எதையாகிலும் அவரிடத்தில் அவருடைய சித்தத்தின்படி கேட்டால் , அவர் உங்களுக்கு செவிகொடுக்கிறார் என்பதை நீங்கள் அறிந்திருக்கும் அந்த விசுவாசமே கர்த்தரிடத்தில் நீங்கள் கொண்டிருக்கிற ‘ தைரியம் ‘ அல்லேலூயா ! ஆகவே பிரியமானவர்களே , இன்றையிலிருந்து நீங்கள் எதை வேண்டுமானாலும் தேவனிடத்தில் ஜெபத்தில் கேட்கலாம் என்று நினைக்காமல், முதலில் தேவனுடைய சித்தத்தை உங்களுடைய வாழ்க்கையில் அறிந்து, அவருடைய சித்தத்தி

Look and behold our reproach

Image
Remember, O Lord, what has come upon us, Look, and behold our reproach (Lam 5:1)

எங்கள் நிந்தையை நோக்கிப்பாரும்

Image
கர்த்தாவே, எங்களுக்கு நேரிட்டதை நினைத்தருளும்; எங்கள் நிந்தையை நோக்கிப்பாரும் (புல 5:1). ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, யூதா ஜனங்கள் பாபிலோனிய மன்னனால் சிறைப்பிடிக்கப்பட்டு, பாபிலோனில்  சிறைக்கைதிகளாக இருக்கிறார்கள். அங்கே அவர்கள் அநேக பாடுகளுக்கூடாகவும், வேதனைகளுக்கூடாகவும் கடந்து செல்ல வேண்டியிருந்தது, அவர்கள் இருந்த சூழ்நிலையை வார்த்தையினால் விபரிக்க முடியாது, அந்த அளவு துக்கங்களும், கண்ணீரும் அவர்களுடைய வாழ்க்கையை நிரப்பி இருந்தது, சிலர் தங்களுடைய தாய், தகப்பனை, இழந்து, அவர்களை விட்டுப் பிரிந்து, இன்னும் சிலர் தங்களுடைய மனைவி மற்றும் கணவனை இழந்த நிலையில், தங்களுடைய பிள்ளைகளை இழந்த நிலையில் , உறவினர்களை, நண்பர்பர்களை, தங்களுடைய உடமைகளை, வீடுகளை இழந்த நிலையில் வாழ்க்கையில் பாடுகளையும், நிந்தைகளையும் அனுபவித்துக்கொண்டிருந்தார்கள், அவர்களுடைய வாழ்க்கை துக்கத்தினாலும், வேதையினாலும், கண்ணீராலும் நிறைத்திருந்தத

Should the Lord be with you?

Image
And David behaved wisely in all his ways, and the Lord was with him (1 Sam 18:14)

கர்த்தர் உங்களோடு இருக்க வேண்டுமா?

Image
தாவீது தன் செய்கைகளிலெல்லாம் புத்திமானாய் நடந்தான்; கர்த்தர் அவனோடேகூட இருந்தார் (1 சாமு 18:14). ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, கர்த்தர் உங்களோடு இருக்க வேண்டுமென்றால் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் புத்திமானாய் நடந்து கர்த்தரை பிரியப்படுத்த வேண்டும். அருவருப்பான, அழுக்கான, தேவனுக்குப் பிரியமில்லாத எந்த காரியங்களையும் செய்யாது, அவருக்குப் பிரியமானவற்றை மாத்திரம் செய்து அவரை உங்களுடைய வாழ்க்கையில் பிரியப்படுத்த வேண்டும். தாவீது தேவனை நேசித்தது மாத்திரமல்ல, தன்னுடைய எல்லா சூழ்நிலையிலிலும் தேவனையே சார்ந்து, அவரையே நம்பி வாழ்ந்து அவரை தன்னுடைய வாழ்க்கையில் பிரியப்படுத்தினார். விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம் என்று எபிரேயர் 11 : 6 இல் வாசிக்கிறோம். அல்லேலூயா ! தேவனையே, தாவீதைக்  குறித்து ‘ ஈசாயின் குமாரனாகிய தாவீதை என் இருதயத்துக்கு ஏற்றவனாகக் கண்டேன்; எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் அவன் செ

The strength and might of the Lord

Image
If He breaks a thing down, it can’t be rebuilt; If He shuts (imprisons) a man, can’t be released (Job 12:14)

கர்த்தரின் வல்லமையும், பெலமும்

Image
இதோ, அவர் இடித்தால் கட்டமுடியாது; அவர் மனுஷனை அடைத்தால் விடுவிக்கமுடியாது (யோபு 12:14). ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, யோபு தேவனுடைய மகத்துவங்களைக் குறித்து அவருடைய வல்லமைகளைக் குறித்து அவருடைய கிரியைகளைக் குறித்து தன்னுடைய சிநேகிதரிடத்தில் பேசும் போது  சொல்லுகிறார், தேவன் இடித்தால் எந்த மனுஷனாலும், எந்த சக்தியினாலும் கட்ட முடியாது என்றும், அவர் ஒரு மனுஷனை அடைத்தால் எந்த மனுஷனாலும், எந்த சக்தியினாலும், எந்த வல்லமையினாலும் அவனை விடுவிக்கமுடியாது என்றும் கூறுகிறார் அல்லேலூயா ! அவ்வளளவு பெரிய தேவன் நம்முடைய தேவன், அவருடைய செயல்களை விபரித்து சொல்லுவதட்கு வார்த்தைகள் போதாது. அந்த சர்வ வல்லமையுள்ள தேவன் இயேசுவை தேவனாகக் கொண்ட அத்தனை ஜனங்களும் பாக்கியவான்கள். அல்லேலூயா ! பிரியனானவர்களே, ஒருவேளை நீங்கள் ஆண்டவராகிய இயேசுவை உங்கள் வாழ்க்கையில் ஆண்டவராகவும், இரட்சகராகவும் ஏற்றுக்கொள்ளாதிருப்பீர்களானால் இப்போதே கால தாமத

The might (strength) of the Lord

Image
Then the Lord turned to him and said, ‘Go in this might of yours, and you shall save Israel from the hand of the Midianites. Have I not sent you?’ (Jud 6:14)

கர்த்தருடைய பெலன்

Image
அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கிப் பார்த்து: உனக்கு இருக்கிற இந்தப் பலத்தோடே போ; நீ இஸ்ரவேலை மீதியானியரின் கைக்கு நீங்கலாக்கி இரட்சிப்பாய்; உன்னை அனுப்புகிறவர் நான் அல்லவா என்றார் (நியா 6:14). ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்ததினால் கர்த்தர் அவர்களை ஏழு வருஷம் மீதியானியரின் கையில் ஒப்புக்கொடுத்தார், அவர்களுடைய நெருக்கத்தின் மத்தியில் இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தரை நோக்கி முறையிடுகிறார்கள், கர்த்தர் அவர்களின் முறையீட்டைக் கேட்டு, அவர்களை மீதியானியரின் கைக்கு நீங்கலாக்கி இரட்சிக்க கிதியோனை நியாயாதிபதியாக எழுப்புகிறார். இந்த சூழ்நிலையில் தான் கர்த்தர் கிதியோனைப் பார்த்து சொல்லுகிறார் ‘  உனக்கு இருக்கிற இந்தப் பலத்தோடே போ; நீ இஸ்ரவேலை மீதியானியரின் கைக்கு நீங்கலாக்கி இரட்சிப்பாய்; உன்னை அனுப்புகிறவர் நான் அல்லவா’ என்று. அல்லேலூயா ! கர்த்தர் கிதியோனோடு இருந்த

God works all things in our life according to the counsel of His will

Image
In Him also we have obtained an inheritance, being predestined according to the purpose of Him who works all things according to the counsel of His will (Eph 1:11) 

தேவன் தமது சித்தத்தின் ஆலோசனைக்குத்தக்கதாக எல்லாவற்றையும் நம் வாழ்க்கையில் நடப்பிக்கிறார்

Image
தமது சித்தத்தின் ஆலோசனைக்குத்தக்கதாக எல்லாவற்றையும் நடப்பிக்கிற அவருடைய தீர்மானத்தின்படியே நாங்கள் முன்குறிக்கப்பட்டு, கிறிஸ்துவுக்குள் அவருடைய சுதந்தரமாகும்படி தெரிந்து கொள்ளப்பட்டோம் (எபே 1:12). ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, தேவன் அவருடைய திட்டத்தின் படி, அவருடைய தீர்மானத்தின்படி நம்மை தேர்ந்தெடுத்து முன்குறித்தது மட்டுமல்லாமல், அவர் தனது விருப்பத்தின், சித்தத்தின் நோக்கத்திற்கு ஏற்ப எல்லாவற்றையும் அவருடைய வேளைகளில் நம்முடைய வாழ்க்கையில் செய்து முடிக்கிறார். சில சமயங்களில் நெடுநாளாய் நீங்கள் ஜெபித்து வரும் ஜெபத்துக்கு பதில் கிடைக்காததால், தேவன் உங்களைக் கை விட்டு விட்டு விட்டாரோ என்று நீங்கள் நினைக்கலாம். பிரியனானவர்களே , தேவன் உங்களுடைய பிரச்சினையில் திரைக்குப் பின்னால் செயல்பட்டு வருகிறார் என்பதை நீங்கள் மறந்து விடாதீர்கள், அவருடைய வேளையில் நிச்சயமாக நீங்கள் ஜெபிக்கிற ஜெபத்துக்குப் பதில் கிடைக்கும், உங்

Forgive each other, just as Christ forgave you

Image
bearing with one another, and forgiving one another, if anyone has a complaint against another; even as Christ forgave you, so you also must do (Col 3:13)

கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்

Image
ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர் பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள் (கொலோ 3:13). ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, இயேசு கிறிஸ்துவை ஆண்டவராக, இரச்சகராக ஏற்றுக்கொண்டு அவருடைய பிள்ளைகளாக இருக்கின்ற நாம் மற்றவர்களை மன்னிக்க கற்றுக்கொள்ள வேண்டும். சில சமயங்களில் நமக்குள் கருத்து வேறுபாடுகள், வாக்குவாதங்கள், சண்டைகள் வருகின்றது, இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் தேவனுடைய பிள்ளைகளாகிய நாம் ஒருவருக்கொருவர் மன்னிக்க கற்றுக்கொள்ள வேண்டும், கிறிஸ்து நம்மை மன்னித்திருக்கிறார், நாம் பாவிகளாகயிருக்கையிலேயே அவர் நமக்காக தம்முடைய ஜீவனையே கொடுத்தார், கிறிஸ்து நமக்கு மன்னித்தது போல், நாமும் ஒருவருக்கொருவர் மன்னிக்க வேண்டும். அல்லேலூயா ! கிறிஸ்துவின் அடிச்சுவடுகளை பின்பற்ற வேண்டியவர்களாகிய நாம் ஒருவருக்கொருவர் மன்னியாமல் எப்படி கர்த்தராகிய கிறிஸ்துவின் அடிச்சுவடுகளை பின்ப

How to overcome the despair and stress

I cried unto God with my voice, even unto God with my voice; and he gave ear unto me. In the day of my trouble I sought the Lord: my sore ran in the night, and ceased not: my soul refused to be comforted. I remembered God, and was troubled: I complained, and my spirit was overwhelmed. Selah. You hold my eyes from closing: I am so troubled that I cannot speak (Ps 77:1-4).

மனத்தளர்ச்சி மற்றும் மனஅழுத்தத்தை எப்படி மேட்கொள்ளுவது ?

நான் தேவனை நோக்கி என் சத்தத்தை உயர்த்திக் கெஞ்சினேன், என் சத்தத்தை தேவனிடத்தில் உயர்த்தினேன், அவர் எனக்குச் செவிகொடுத்தார். என் ஆபத்துநாளில் ஆண்டவரைத் தேடினேன்; இரவிலும் என் கை தளராமல் விரிக்கப்பட்டிருந்தது; என் ஆத்துமா ஆறுதலடையாமற்போயிற்று. நான் தேவனை நினைத்தபோது அலறினேன்; நான் தியானிக்கும்போது என் ஆவி தொய்ந்து போயிற்று. நான் தூங்காதபடி என் கண்ணிமைகளைப் பிடித்திருக்கிறீர்; நான் பேசமாட்டாதபடி சஞ்சலப்படுகிறேன் (சங் 77 :1-4). ஆண்டவரும், இரட்சகருமாகிய  இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள   நான்கு வசனங்களையும் இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, சிலர் வாழ்க்கையில் அவர்கள் எதிர்நோக்கும் கவலைகளை மறைப்பதுக்கு மதுபானத்தை குடிக்கிறார்கள், சிலர் புகைப் பிடிப்பார்கள், வேறு சிலரோ வாய் விட்டு சிரித்தால் துக்கம் நீங்கிப்போகும், வியாதி நீங்கிப் போகும் என்கிறார்கள். ஆனால் இவைகளெல்லாம் உங்களுடைய கவலைகளுக்கு, துக்கங்களுக்கு, வேதனைகளுக்கு, சஞ்சலங்களுக்கு மருந்தல்ல. இந்த சங்கீதத்தைப் பாடிய சங்கீதக்காரனுடைய

What are the guidelines for raising the child? and what should be done for him?

Manoah said, Now let Your words come to pass! What are the guidelines for raising the child? and what should be done for him? (Jud 13:12).

பிள்ளையை எப்படி வளர்க்கவேண்டும், எப்படி நடத்தவேண்டும்

அப்பொழுது மனோவா: நீர் சொன்ன காரியம் நிறைவேறும்போது, அந்தப் பிள்ளையை எப்படி வளர்க்கவேண்டும், அதை எப்படி நடத்தவேண்டும் என்று கேட்டான் (நியா 13:12) ஆண்டவரும், இரட்சகருமாகிய  இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, இங்கே ஒரு தகப்பன் (மனோவா) தங்களுக்கு பிறக்க போகும் குழந்தையை எப்படி வளர்க்க வேண்டும் , எப்படி நடத்த வேண்டும் என்று ஆண்டவரிடம் ஆலோசனை கேட்க்கின்றான். ஆம் பிரியமானவர்களே, வேதம் சொல்லுகிறது , பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன் ( சங் 127 ) என்று.  உலகத்தில் எத்தனை பேருக்கு பிள்ளைகள் இல்லாமல் இருக்கிறார்கள் , ஆனால் இன்று தேவன் எங்களை பிள்ளைகள் செல்வத்தினால்  ஆசிர்வதித்து இருக்கார். ஆகவே தேவன் எங்களுக்கு கொடுத்த பிள்ளைகளுக்காக, அவருக்கு ஒவ்வொரு நாளும் நன்றி செலுத்தி , மனோவா போல், பெற்றோராகிய நாங்கள் ஒவ்வொருவரும் பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டும், எப்படி நடத்த வேண்டும் என்று தேவனிடம் ஆலோசனையைப் பெற்று,

Unite my heart to fear Your name

  Unite my heart to fear Your name (Ps 86:11 b).

நான் உமது நாமத்திற்குப் பயந்திருக்கும்படி என் இருதயத்தை ஒருமுகப்படுத்தும்

நான் உமது நாமத்திற்குப் பயந்திருக்கும்படி என் இருதயத்தை ஒருமுகப்படுத்தும் (சங் 86:11 பி) ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, தாவீது ராஜா தன்னுடைய வாழ்க்கையில் வேதனைகளுக்கூடாகவும், பாடுகளுக்கூடாகவும் செல்லும் போது தேவனை நோக்கி அவர் ஏறெடுத்த விண்ணப்பம் தான் இந்த 86 வது சங்கீதம். தாவீது தேவனிடம் விண்ணப்பிக்கிறார் தான் கர்த்தருடைய நாமத்துக்கு பயந்திருக்கும் படி கர்த்தர் அவருடைய இருதயத்தை ஒருமுகப்படுத்தும் படி. என்னதொரு அழகான ஜெபம். நாங்கள் ஆராதிக்கின்ற நம்முடைய தேவன் நம்முடைய இருதயங்களை ஆராய்ந்து பார்க்கும் தேவன். அவருக்கு மறைவானது ஒன்றுமில்லை. தாவீது தன்னுடைய இருதயத்தில் தேவனுக்கு மாத்திரமே இடம் கொடுக்க விரும்புகிறார், அவர் பூலோகத்தில் வாழ்ந்தாலும், தான் இந்த பூலோகத்துக்கு உரியவன் அல்ல, தான் தேவனுக்குரியவர், தான் தேவனுக்கு மாத்திரமே சொந்தமானார் என்பதை நன்கு அறிந்திருந்தார், அதனால் தான் அவர் தேவனிடம் விண்ணப்பிக்கிறார்

Wait for the timing of the Lord

The Lord is good to those who wait for Him, To the soul who seeks Him. It is good that one should hope and wait quietly for the salvation of the Lord (Lam 3:25&26)

கர்த்தருடைய வேளைக்காகக் காத்திருங்கள்

தமக்குக் காத்திருக்கிறவர்களுக்கும் தம்மைத் தேடுகிற ஆத்துமாவுக்கும் கர்த்தர் நல்லவர். கர்த்தருடைய இரட்சிப்புக்கு நம்பிக்கையோடு காத்திருக்கிறது நல்லது (புல 3:25&26). ஆண்டவரும், இரட்சகருமாகிய  இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள இரண்டு வேத வசனங்களையும் இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, பாபிலோன் தேசத்துக்கு சிறைக்கைதிகளாக கொண்டு செல்லப்படட யூதா ஜனங்கள் அங்கே பலவிதமான பாடுகளுக்கூடாகவும், வேதனைகளுக்கூடாகவும் சென்று கொண்டிருந்த போது, கர்த்தருடைய தீர்க்கதரிசி எரேமியா அவர்களுக்கு (யூதா ஜனங்களுக்கு) அவர்களுடைய இந்த நெருக்கமான சூழ்நிலையில் கர்த்தரை மறந்து விடாமல் அவர் மீது விசுவாசம் வைத்து அவரைத் தேடும்படியாகவும், அவருக்காகக் காத்திருக்கும் படியாகவும், அவருக்காகக் காத்திருப்பவர்களுக்கும், அவரைத் தேடுபவர்களுக்கும் கர்த்தர் நல்லவராக இருக்கிறார் என்றும், அவர்களை கர்த்தர் தன்னுடைய வேளைகளில் அவர்களுடைய நெருக்கமான சூழ்நிலையில் இருந்து விடுதலை செய்து அவர்களை இரட்சிப்பார் , அவர்களை பாதுகாப்பார் என்று

God who blesses and satisfies the weary and sorrowful souls

For I have [a]satiated the weary soul, and I have replenished every sorrowful soul (Je 31:25)

விடாய்த்த, மற்றும் தொய்ந்த ஆத்துமாக்களை ஆசிர்வதித்து திருப்த்திப்படுத்தும் தேவன்

நான் விடாய்த்த ஆத்துமாவைச் சம்பூரணமடையப்பண்ணி, தொய்ந்த எல்லா ஆத்துமாவையும் நிரப்புவேன் (எரேமி 31:25). ஆண்டவரும், இரட்சகருமாகிய  இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, பாபிலோனியரால் சிறைப்பிடிக்கப்பட்டு, பாபிலோன் தேசத்தில் சிறையிலிருந்த யூத ஜனங்கள் அவர்களுக்கு நேரிடட சூழ்நிலையின் நிமித்தம் விடாய்த்துப்போன ஆத்துமாக்களாகவும், தொய்ந்து போன ஆத்துமாக்களாகவும் இருக்கிறார்கள். விடாய்த்த ஆத்துமா மற்றும் தொய்ந்த ஆத்துமா என்றால்  நேரிடட பாதகமான சூழ்நிலையின் நிமித்தம் எல்லாவற்றையும் இழந்து சோர்ந்து போய் எதிர்கால நம்பிக்கையற்று வெறுமையாய் இருக்கும் ஆத்துமா என்று பொருள். அவ்வாறு சோர்ந்து போய் நம்பிக்கையற்று இருக்கும் யூத ஜனங்களுக்கு கர்த்தர் தன்னுடைய தீர்க்கதரிசியான எரேமியா மூலம் சொல்லுகிறார்.’ நான் விடாய்த்த ஆத்துமாவைச் சம்பூரணமடையப்பண்ணி, தொய்ந்த எல்லா ஆத்துமாவையும் நிரப்புவேன் ‘ என்று. அல்லேலூயா !  சம்பூரணம், நிரப்புதல் என்பது வெறுமையாய், நம்பிக்கையற்று

He (God) who teaches you to profit (benefit),And leads you in the right way

I am the Lord your God, who teaches you to profit (benefit),Who leads you in the way that you should go (Isa 48:17)

பிரயோஜனமாயிருக்கிறதை உங்களுக்குப் போதித்து, அவற்றில் வழி நடத்தும் தேவன்

பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே (ஏசா 48:17). ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, கர்த்தர் உங்களை சிருஷ்டித்தது மாத்திரமல்ல , அவர் உங்களுக்கு நல்ல ஆலோசனைக் கர்த்தராகவும், உங்களுக்கு அவர் நல்ல போதகராகவும் இருக்கிறார். அல்லேலூயா ! ஆகவே தேவன் இயேசு கிறிஸ்து மீது உங்களுடைய விசுவாசத்தை வைத்து அவரிடம் நீங்கள் வாழ்க்கையில் நடக்க வேண்டிய வழியையைக் காண்பிக்கும் படி ஆலோசனை கேட்க்கும் போது அவர் உங்களுக்கு நல்ல போதகராக இருந்து, பிரயோஜனமாயிருக்கிறதை உங்களுக்கு போதித்து, உங்களை வாழ்க்கையில் நடத்த வேண்டிய வழியிலே வழி நடத்தி, உங்களை அவர் மானிடனாக சிருஷ்ட்டித்து, இந்த பூலோகத்துக்கு உங்களைக் கொண்டு வந்த அவரின் நோக்கத்தையும், திட்டத்தையும் நிறைவேற்ற தேவன் உண்மையுள்ளவராக இருக்கிறார். அல்லேலூயா !  தேவன் உங்களுக்காக ஆயத்தப்படுத்தி வைத்திருக்கும் வழிகளில் நீங்கள் ந

Man is not justified by the works of the law

We who are Jews by nature, and not sinners of the Gentiles, knowing that a man is not [a]justified by the works of the law but by faith in Jesus Christ, even we have believed in Christ Jesus, that we might be justified by faith in Christ and not by the works of the law; for by the works of the law no flesh shall be justified (Gala 2:15 & 16)

நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே மனுஷன் நீதிமானாக்கப்படுவதில்லை

புறஜாதியாரில் பிறந்த பாவிகளாயிராமல், சுபாவத்தின்படி யூதராயிருக்கிற நாமும் இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலேயன்றி, நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே மனுஷன் நீதிமானாக்கப்படுவதில்லையென்று அறிந்து, நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலல்ல, கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்படும்படிக்குக் கிறிஸ்து இயேசுவின்மேல் விசுவாசிகளானோம் (கலா 2:15). ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, அப்போஸ்தலனாகிய பவுல் தான் இரட்சிக்கப்படுவதற்கு முன்பு  நியாயப்பிரமாணத்தின் கிரியைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தார், ஆனால் கலாத்தியருக்கு எழுதின நிருபத்தில் சொல்லுகிறார் , நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினால் தான் நீதிமானாவதில்லை என்றும் இயேசு கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே தான் நீதிமானாக்கப்படுவதாகவும் சொல்லுகிறார்.  ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது (ஆதி 15:6 ,ரோம 4:3 & கலா 3:6) என்று வா

No one can stop the good that God intended to do in your life

I know that You can do everything, And that no purpose of Yours can be withheld from You (Job 42:2). I greet you in the name of the Lord and Savior Jesus Christ. Let us take the above scripture for meditation today. Job says that, I know that You (God) can do everything, And that no purpose of Yours can be withheld from You. Yes beloved, In many times we wouldn’t be able to do everything which we thought could do with our strength, effort, ability, knowledge, wisdom, money and the influence we have in the society. But God is omnipotent, all-wise, There is nothing he can’t do. Like Job said , God is able to do all things. The things  which you expect now in your life may look like blocked but if that is God's will, then no evil force, no evil person can withhold the good that God intended to do in your life. God has the power to do what He intended to do in your life. Hallelujah ! May the Lord Jesus bless you and your family. 

தேவன் உங்களுடைய வாழ்க்கையில் செய்ய நினைத்த நன்மையான காரியத்தை யாராலும் தடை செய்ய முடியாது

தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன் (யோபு 42:2). ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். யோபு தேவனைக் குறித்துச் சொல்லும் போது சொல்லுகிறார் ‘ தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன்’ என்று. ஆம் பிரியமானவர்களே,  பல சமயங்களில் நாம் செய்ய வேண்டும் என்று நினைத்த எல்லா காரியங்களையும் எங்களால், எங்களுடைய பலத்தினால், எங்களுடைய முயற்சியினால்,  எங்களுடைய திறமையினால், எங்களுடைய அறிவினால், எங்களுடைய ஞானத்தினால், எங்களிடம் இருக்கின்ற பணத்தினால், எங்களுக்கு சமூதாயத்தில் இருக்கின்ற அந்தஸ்த்தினால், செல்வாக்கினால் எங்களால் செய்ய முடியாமல் போகின்றது. ஆனால் தேவனோ சர்வ வல்லமையுள்ளவர், சர்வ ஞானமுள்ளவர் அவரால் முடியாத காரியம் என்று சொல்ல ஒன்றுமில்லை, யோபு சொல்லுகிற பிரகாரம் தேவன் சகலத்தையும் செய்ய வல்லவர், அவர் செய்ய நினைத்தது தடைபடாது. இப்போது உங்களுடை

My people shall never be put to shame.

You shall eat in plenty and be satisfied, And praise the name of the Lord your God, Who has dealt wondrously with you; And My people shall never be put to shame (Joel 2:26)

என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை.

நீங்கள் சம்பூரணமாகச் சாப்பிட்டு, திருப்தியடைந்து, உங்களை அதிசயமாய் நடத்திவந்த உங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பீர்கள்; என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை. (யோவே 2:26). ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே , யார் என்னுடைய பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்த்து வைப்பார்? என்னுடைய குடும்பத்  தேவைகள் எவ்வாறு சந்திக்கப்படும்? என்று கலங்கிக் கொண்டிருக்கிறீர்களா? சோர்ந்து போகாதீர்கள். கர்த்தர் உங்களைப் பார்த்து சொல்லுகிறார் ‘என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை’ என்று அல்லேலூயா ! அவர் உங்களை ஒரு போதும் வெட்கப்படுத்த மாடடார். கர்த்தர் மீது உங்களுடைய கவனத்தையும், விசுவாசத்தையும் வையுங்கள், கர்த்தர் உங்களை சகல நன்மையினாலும் ஆசிர்வதிக்கப் போகிறார், உங்களுடைய உபத்திரவங்கள் நீங்கப்போகிறது , உங்களுடைய தரித்திரங்கள் நீங்கப்போகிறது. கர்த்தரிடம் இருந்து நீங்கள் சம்பூரண ஆசிர்வாதங்களைப் பெற்றுக்கொள்ளப் போகிற

The Lord is good to all, And His tender mercies are over all His works

Then God saw their works, that they turned from their evil way; and God relented from the disaster that He had said He would bring upon them, and He did not do it (Jonah 3:10)

கர்த்தருடைய இரக்கங்கள் அவருடைய எல்லாக் கிரியைகளின்மேலுமுள்ளது

அவர்கள் தங்கள் பொல்லாத வழியைவிட்டுத் திரும்பினார்களென்று தேவன் அவர்களுடைய கிரியைகளைப்பார்த்து, தாம் அவர்களுக்குச் செய்வேன் என்று சொல்லியிருந்த தீங்கைக்குறித்து மனஸ்தாபப்பட்டு, அதைச் செய்யாதிருந்தார் ( யோனா  3:10). ஆண்டவரும் ,இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, மகா நகரமாகிய நினிவேயில் வாழ்ந்த ஜனங்களின்  அக்கிரமத்தைக் கண்ட தேவன், தன்னுடைய தீர்க்கதரிசி யோனாவை நினிவேக்கு அனுப்பி ‘இன்னும் நாற்பதுநாள் உண்டு, அப்பொழுது நினிவே கவிழ்க்கப்பட்டுப்போகும்’  என்று தன்னுடைய எச்சரிப்பின் வார்த்தையை அறிவித்திருந்தார். நினிவேயை அழிப்பது தேவனுடைய விருப்பமாக இருக்கவில்லை, அவர்கள் தங்களுடைய பொல்லாத வழிகளை விட்டு மனந்திரும்ப வேண்டும் எனபதே அவருடைய ஏக்கமுமும் , விருப்பமுமாகவும் இருந்தது. கர்த்தருடைய எச்சரிப்பின் சத்தத்துக்கு செவி கொடுத்த நினிவேயின் ஜனங்கள், உபவாசம் இருந்து தங்களுடைய பாவ வாழ்க்கையிலிருந்து மனந்திரும்புகிறார்கள், அவர்கள் தங்கள் பொல்லாத வ

Five things to pray for fellow believers

May our Lord Jesus Christ himself and God our Father, who loved us and by his grace gave us eternal encouragement and good hope, encourage your hearts and strengthen you in every good deed and word (2 Theso 2:16-17) 

சக விசுவாசிகளுக்காக ஜெபிக்க வேண்டிய ஐந்து காரியங்கள்

நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும், நம்மிடத்தில் அன்புகூர்ந்து நித்திய ஆறுதலையும் நல்நம்பிக்கையையும் கிருபையாய் நமக்குக் கொடுத்திருக்கிற நம்முடைய பிதாவாகிய தேவனும், உங்கள் இருதயங்களைத் தேற்றி, எல்லா நல்வசனத்திலும் நற்கிரியையிலும் உங்களை ஸ்திரப்படுத்துவாராக (2 தெசலோ 2:16-17) ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள இரண்டு  வேத வசனங்களையும் இன்றைய நாளில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, அப்போஸ்தலர் பவுல் தெசலோனியருக்காக தேவனிடத்தில் ஜெபிக்கும் போது, அவர்களுக்கு நித்திய ஆறுதலும், நல் நம்பிக்கையும் தேவனிடத்தில் கிருபையாக பெருகியிருக்க வேண்டும் என்றும், அவர்களுடைய இருதயங்கள் தேற்றப்பட வேண்டும் என்றும், அவர்கள் எல்லா நல்வசனத்திலும்,  நற்கிரியையிலும் ஸ்திரப்பட்டிருக்க வேண்டுமென்றும் அவர்களுக்காக ஜெபிக்கிறார். நம்முடைய இருதயம் ஸ்திரப்படவேண்டுமென்றால் நம்முடைய இருதயம் ஆறுதலினால் நிரம்பியிருக்க வேண்டும். அல்லேலூயா ! நாமும் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட நம்முடைய சகோதர்களுக்காக , சகோதரிகளுக்கா

Let us examine and sanctify ourselves before God

And it shall be: like people, like priest [both are wicked and both will be judged]; So I will punish them for their ways. And repay them for their deeds. They will eat, but not have enough; They will play the prostitute, but not increase [their descendants], Because they have stopped giving heed to the Lord. Prostitution, wine, and new wine take away the mind and the [spiritual] understanding (Hos 4:9-11). 

எங்களை நாங்கள் ஆராய்ந்து பார்த்து தேவனுக்கு முன்பாக பரிசுத்தபடுத்திக் கொள்ளுவோம்

ஆதலால் ஜனங்களுக்கு எப்படியோ ஆசாரியனுக்கும் அப்படியே; அவர்கள் வழிகளின்படி நான் அவர்களை விசாரித்து, அவர்கள் கிரியைகளின்படி அவர்களுக்குப் பலனளிப்பேன். அவர்கள் கர்த்தரை மதியாமலிருக்கிறபடியினால் அவர்கள் தின்றாலும் திருப்தியடையாதிருப்பார்கள்; அவர்கள் வேசித்தனம்பண்ணினாலும் பலுகாதிருப்பார்கள். வேசித்தனமும் திராட்சரசமும் மதுபானமும் இருதயத்தை மயக்கும் (ஓசி 4:9-11). ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள மூன்று வேத வசனங்களையும் இன்றைய நாளில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, இஸ்ரவேல் ஜனங்களும், தேவனுடைய கனமான ஆசாரிய ஊழியத்தைச் செய்யும் படி தேவனால் அழைக்கப்படட ஆசாரியர்களும், தங்களை  சிருஷ்டித்த, தங்களை எகிப்தின் அடிமைத்தனத்தில் இருந்து  மீட்டெடுத்த தேவனாகிய கர்த்தரை மறந்து, அவருக்கு விரோதமாக, அவருக்குப் பிரியமில்லாத, அருவருப்பான காரியங்களான வேசித்தனத்திலும், விக்கிர ஆராதனையிலும், குடி வெறியிலும் மூழ்கி தேவனை விட்டு தூர விலகி சோரம் போயிருந்த நாட்களில்,  தேவன் தன்னுடைய பிள்ளைகளாகிய இஸ்ரவேல் ஜன

Let the charity of your right hand be so secret that your left does not know it

Take heed that you do not do your charitable deeds before men, to be seen by them. Otherwise you have no reward from your Father in heaven. Therefore, when you do a charitable deed, do not sound a trumpet before you as the hypocrites do in the synagogues and in the streets, that they may have glory from men. Assuredly, I say to you, they have their reward. But when you do a charitable deed, do not let your left hand know what your right hand is doing, that your charitable deed may be in secret; and your Father who sees in secret will Himself reward you [a]openly (Matt 6:1-4)

உன் வலதுகை செய்யும் தர்மம் உன் இடதுகை அறியாதிருக்கும் விதமாய் அந்தரங்கமாக இருக்கட்டும்

மனுஷர் காணவேண்டுமென்று அவர்களுக்கு முன்பாக உங்கள் தர்மத்தைச் செய்யாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; செய்தால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவினிடத்தில் உங்களுக்குப் பலனில்லை. ஆகையால் நீ தர்மஞ்செய்யும்போது, மனுஷரால் புகழப்படுவதற்கு, மாயக்காரர் ஆலயங்களிலும் வீதிகளிலும் செய்வதுபோல, உனக்கு முன்பாகத் தாரை ஊதுவியாதே; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். நீயோ தர்மஞ்செய்யும்போது, உன் தர்மம் அந்தரங்கமாயிருப்பதற்கு, உன் வலதுகை செய்கிறதை உன் இடதுகை அறியாதிருக்கக்கடவது. அப்பொழுது அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா தாமே உனக்கு வெளியரங்கமாய்ப் பலனளிப்பார் (மத் 6:1-4). ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள நான்கு  வேத வசனங்களையும் இன்றைய நாளில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, இன்று ஒரு கூட்ட ஜனங்கள் மாயமாலமாக தான தருமங்கள் செய்து வருகிறார்கள் , கர்த்தருக்குக் கீழ்ப்படிய வேண்டுமென்றோ , அல்லது மனுஷர் மீதுள்ள அன்பினாலோ அல்லது ஏழைகள் மீது இரங்கி, மனதுருகிய

We have been created in Christ Jesus for doing good works

For by grace you have been saved through faith, and that not of yourselves; it is the gift of God, not of works, lest anyone should boast. For we are His workmanship, created in Christ Jesus for good works, which God prepared beforehand that we should walk in them (Eph 2:8-10). 

நற்கிரியைகளைச் செய்கிறதற்காகவே நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்க்கப்பட்டிருக்கிறோம்

கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு; ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல; ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார் (எபே 2:8-10). ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள மூன்று வேத வசனங்களையும் இன்றைய நாளில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, இன்று கிறிஸ்தவர்களாகிய நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம் என்று கூறுகிறோம். ஆனால் நம்முடைய இரட்சிப்புக்கு நாம் எந்த விதத்திலும் காரணமல்ல, இது நம்முடைய கிரியைகளினால் உண்டானதல்ல. ஆகவே நம்முடைய சுயகிரியையைக் குறித்து பெருமை பாராடட நமக்கு இடமில்லை. இது முற்றும் முழுதாக தேவனுடைய ஈவு. அல்லேலூயா ! தேவனுடைய கிருபையை பெற்றுக்கொள்ளுவதட்க்கு நாம் எந்த விதத்திலும் தகுதியானவர்களல்ல. தேவன் இரக்கத்தின் ஐசுவரியமுள்ளவராயிருக்கிற படிய

God, lead me to the rock that is higher than I

From the end of the earth I call to You, when my heart is overwhelmed and weak;Lead me to the rock that is higher than I [a rock that is too high to reach without Your help] (Ps 61:2).  I greet you in the name of the Lord and Savior Jesus Christ. Let us take the above scripture for meditation today. Beloved, when David was going through a difficult time his heart was overwhelmed and weak he cried out to God from the end of the earth and asked to lead him to the rock that is higher than Him. He was well aware that only God could lead him to that rock that higher than him which cannot be reached by his own strength and self-effort. Hallelujah ! Look what a strong faith he had in God. In fact His faith in God was the reason for his success in his life. Hallelujah ! ‘From the end of the earth means away from the Holy place of God. The situation may have forced David to leave Jerusalem ( the Holy place of God) in order to save his life from his enemies. but no circumstances separated him

தேவனே, எனக்கு எட்டாத உயரமான கன்மலையில் என்னைக் கொண்டுபோய்விடும்

என் இருதயம் தொய்யும்போது பூமியின் கடையாந்தரத்திலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்; எனக்கு எட்டாத உயரமான கன்மலையில் என்னைக் கொண்டுபோய்விடும் (சங் 61:2). ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, தாவீது எதிரிகளினால் நெருக்கப்பட்டு அவருடைய இருதயம் கவலையினாலும், வேதனையினாலும் பாரப்பட்டு தொய்ந்திருந்த போது தேவனை நோக்கி  தாவீது விசுவாசத்தோடு ‘ பூமியின் கடையாந்தரத்திலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுவேன் எனக்கு எட்டாத உயரமான கன்மலையில் என்னைக் கொண்டுபோய்விடும்‘ என்று  விண்ணப்பம் பண்ணுகிறார். அவர் நன்கு அறிந்திருந்தார் அவருடைய சுய பலத்தினாலும், சுய முயற்சியினாலும் அடைய முடியாத, போக முடியாத அந்த உயரமான கன்மலைக்கு தேவனால் மாத்திரமே அவரை கொண்டு செல்ல முடியும் என்று. அல்லேலூயா ! என்னதொரு பலமுள்ள விசுவாசம் அவர் தேவன் மீது வைத்திருந்தார் என்று பாருங்கள். அவர் தேவன் மீது வைத்திருந்த விசுவாசமே அவர் வாழ்க்கையில் ஜெயிக்க காரணமாயிருந்தது. அல்

Fear not, I will help you

For I, the Lord your God, will hold your right hand, Saying to you, ‘Fear not, I will help you.’ (Isaiah 41:13). I greet you in the name of the Lord and Savior Jesus Christ. Let us take the above scripture for meditation today. Beloved, the circumstance that you are in today may be against you. Don’t be afraid, he (God) who created you is bigger than your circumstances and your problems and he knows how to change your impossible situations for your good. Remember my beloved God is faithful to His promise, He doesn’t change his words . He is the same God yesterday, today and forever. Therefore, beloved I would want to encourage you today to trust the Lord your God who holds on to your right hand and saying fear not, I help you. Hallelujah !  May the Lord Jesus Christ bless you and your family. 

பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன்

உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலதுகையைப் பிடித்து: பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று சொல்லுகிறேன் (ஏசா 41:13). ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, சூழ்நிலை உங்களுக்கு விரோதமாக, உங்களுக்கு எதிராக உங்களை அமிழ்க்கிறது போல இருக்கலாம். ஆனால் மறந்து விடாதீர்கள், உங்களை சிருஷ்டித்த தேவன் உங்களுடைய பிரச்னைகளைப் பார்க்கிலும், உங்களுடைய சூழ்நிலைகளைப் பார்க்கிலும் அவர் பெரியவராக இருக்கிறார். அவர் உங்களை நடுக்கடலில் தத்தளிக்க விட்டு விட்டு வேடிக்கை பார்ப்பவரல்ல, அவர் உங்களை உங்கள் ஆபத்தான சூழ்நிலையிலிருந்து  விடுதலை செய்பவர், அவரால் எப்படிப்படட சூழ்நிலையாக இருந்தாலும் மாற்றியமைக்க முடியும், அல்லேலூயா ! அதனால் தான் வேத வசனம் சொல்லுகிறது , உலகத்தில் இருப்பவனை பார்க்கிலும் உங்களுக்குள்ளே இருப்பவர் பெரியவர் என்று.  உங்கள் வலதுகையைப் பிடித்து  ‘பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன்’ என்று சொன்ன தேவன் தனது வாக்க

Consider your ways

Thus says the  Lord  of hosts: “Consider your ways (Haggai 1:7)

உங்கள் வழிகளைச் சிந்தித்துப்பாருங்கள்

உங்கள் வழிகளைச் சிந்தித்துப்பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் (ஆகாய் 1 : 7 ). ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை நீங்கள் புரிந்து கொள்ள உங்களுக்கு சரித்திர பின்னணி தெரிந்ர்த்திருக்க வேண்டும். ஆகவே சரித்திரத்தை சுருக்கமாக உங்களுக்கு சொல்லிவிட்டு, இந்த வேத வசனத்தின் மூலமாய் தேவன் நமக்கு என்னத்தை கற்றுக் கொடுக்க விரும்புகிறார் என்பதை அறிந்து கொள்ளுவோம். அல்லேலூயா ! இதுவரை சமஸ்த இஸ்ரவேலாக இருந்த இஸ்ரவேல் தேசம் சாலமோனின் புதல்வன் ரெகொபெயாமின் ஆட்சிக்காலத்தில் இஸ்ரவேல் தேசம், யூதா தேசம் என இரண்டாக பிளக்கப்படுகிறது. இப்போது இஸ்ரவேல் தேசம் தேவனுக்கு விரோதமாக பாவம் செய்கிறது, தேவன் அவர்களை அசீரியர்களின் கைக்கு ஒப்புக்கொடுக்கிறார், அவர்கள் இஸ்ரவேலர்களை சிறைப்பிடித்துக்கொண்டு தங்கள் தேசத்துக்கு எடுத்துச் செல்லுகிறார்கள். அதன் பிறகு யூதா தேசமும் தேவனுக்கு விரோதமாக பாவம் செய்கிறார்கள்,

Let us live with the helping mind

Send portions to those who have nothing (Neh 8:10)

மிஷன் பாரத்தோடு வாழ்வோம்

ஒன்றுமில்லாதவர்களுக்குப் பங்குகளை அனுப்புங்கள் (நெகே 8:10). ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, கர்த்தர் இன்றைக்கு எங்களை ஆசிர்வதித்து இருப்பது மற்றவர்களுக்கு நாங்கள் ஆசீர்வாதமாக   இருப்பதற்கு தான். இன்று நாங்கள் நல்லதொரு ஒரு வீட்டில் வசிக்கிறோம், நாமும், நம்முடைய பிள்ளைகளும் ஒவ்வொரு நாளும் விதம் விதான ஆடைகளை அணிகிறோம்,  மூன்று வேளைக்கும் மேலாக சாப்பிடுகிறோம் . ஆனால் அநேக தேசங்களில் ( ஆபிரிக்க ) ஜனங்கள் ஒரு வேளை உணவு உண்ணுவதுக்குக் கூட வசதியற்ற நிலைமையில் இருக்கிறார்கள், அவர்களுக்கு அணிய ஆடை இல்லாத நிலைமையில் இருக்கிறார்கள், இன்னும் அநேக தேசங்களில் (ஆப்பிரிக்கா, ஆசியா) ஜனங்கள் தண்ணீர் வசதிகள், மருத்துவ வசதிகள் இல்லாமல், போதிய சுகாதார வசதிகள் இல்லாமல் நாளுக்கு நாள் மரிக்கிறார்கள், இன்னும் சில தேசங்களில் கல்வி கற்க கல்வி வசதிகள் இல்லை , போதுமான பாடசாலைகள் இல்லை ஆசிரியர்கள் பற்றாக்குறை , படிக்க பண வசதிகள் இல்லை , இப்படிய

Trust the Lord’s timing

Wait on the Lord, And keep His way, And He shall exalt you to inherit the land; When the wicked are cut off, you shall see it (Ps 37:34)

கர்த்தருடைய வேளையை நம்புங்கள்

நீ கர்த்தருக்குக் காத்திருந்து, அவருடைய வழியைக் கைக்கொள்; அப்பொழுது நீ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு அவர் உன்னை உயர்த்துவார்; துன்மார்க்கர் அறுப்புண்டுபோவதை நீ காண்பாய் (சங் 37:34). ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, தாவீது இந்த வசனத்தில் நீதிமான், துன்மார்க்கன் என இரண்டு விதமான ஜனங்களைக் குறித்து பேசியிருப்பதோடு அவர்களுடைய வாழ்க்கை முடிவுகளைப் பற்றியும் பரிசுத்த ஆவியானவரின் உதவியுடன் நமக்குச் சொல்லியிருக்கிறார். நீதிமானைக் குறித்துப் பேசும் போது அவர் சொல்லுகிறார்,  நீதிமான் பூமியைச் சுதந்தரித்துக் கொள்ளுவதுக்கு கர்த்தர் அவனை வாழ்க்கையில் உயர்த்துவார் என்றும், துன்மார்க்கன் அழிந்து போவான் என்றும் அவர்களுடைய வாழ்க்கை முடிவுகளை தெளிவாய் நமக்கு போதித்து இருக்கிறார். ஆனால் நீதிமான் பூமியைச் சுதந்தரித்துக் கொள்ளும் படி கர்த்தர் அவனை அவன் வாழ்க்கையில் உயர்த்த வேண்டுமானால் அவன் இரண்டு காரியங்களை கடைப்பிடிக்கும் படி வேதம

He who calls you is faithful

He who calls you is faithful, who also will do it (1 Thes 5:24)

உங்களை அழைத்தவர் உண்மையுள்ளவர்

உங்களை அழைக்கிறவர் உண்மையுள்ளவர், அவர் அப்படியே செய்வார் (1 தெ 5:24 ). ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, கர்த்தரே உங்களை அழைக்கின்றவர், அவர் உங்களை மனுஷர்கள் போல் இடையில் கை விட்டு விடுபவரல்ல, முடிவு பரியந்தம் உங்களை நடத்திச் செல்ல அவர் உண்மையுள்ளவராக இருக்கின்றார். கர்த்தருடைய உண்மையே நமது வாழ்க்கைக்கு ஒரு நல்ல பாதுகாப்பாக இருக்கின்றது. அல்லேலூயா ! கர்த்தரை நம்புங்கள் அவர் உங்கள் மீது, உங்கள் வாழ்க்கையில் வைத்திருக்கின்ற சித்தம் உண்மையாய் நிறைவேறும். ஏனெனில் உங்களை அழைத்தவர் உண்மையுள்ளவர், உங்களை எதற்காக அழைத்தாரோ, அவருடைய அழைப்பின் நோக்கத்தை, அவருடைய சித்தத்தை உண்மையாய் உங்களுடைய வாழ்க்கையில் நிறைவேற்றுகிறவர், அதை எந்த தீய சக்தியாலும், எந்த மனுஷனாலும் தடை செய்ய முடியாது. அல்லேலூயா ! கர்த்தரை  விசுவாசியுங்கள், உங்களை அழைக்கிறவர் உண்மையுள்ளவர், அவர் அப்படியே செய்வார். அலேலூயா ! தேவன் இயேசு உங்களையும், உங்கள் குடும்ப

My people shall be satisfied with My goodness

My people shall be satisfied with My goodness, says the Lord (Jer 31:14 b). 

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

Image
என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார் (எரேமி 31 : 14 b ) ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை கர்த்தர் இந்த புதிய வருடத்தில் உங்களுக்கு வாக்குத் தத்தமாகக் கொடுக்கின்றார். கர்த்தர் சொல்லுகிறார் `என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள் ‘  என்று . அல்லேலூயா ! கர்த்தருடைய வார்த்தையை அப்படியே நீங்கள் விசுவாசித்து, அவர் உங்களுக்குக் கொடுத்த வாக்குத்தத்தத்துக்காகக் கர்த்தருக்கு ஒவ்வொரு நாளும் நன்றி செலுத்துங்கள். நிச்சயமாக கர்த்தருடைய நன்மையான கரம் உங்கள் வாழ்க்கையில் அமர்ந்து இருப்பதையும், அவர் உங்களுக்குக் கொடுத்த வாக்குத்தத்தம் நிறைவேறுவதையும் நீங்கள் காண்பீர்கள். அவர் உங்களுக்கு நன்மையானதை  இந்த வருடத்தில் தருவார், அதனால் நீங்கள் திருப்தியாவீர்கள். அல்லேலூயா ! வாக்குக் கொடுத்த அவர் தனது வாக்குத்தத்தத்தில் உண்மை உள்ளவராக இருக்கிறார். இதுவரை காலமாக உங்கள் வாழ்வில் நீங்கள் காத்திருந்த கர்த்தருட